இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் வடபகுதி மீனவர்களின் ஆலோசனைகள் பெறப்படுமென்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்களின் கைப்பற்றப்பட்ட பல படகுகள் எம் வசம் உள்ளன. வட பகுதியின் மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகள் இணக்கப்பாடு தெரிவித்தால் மட்டுமே அந்த படகுகள் விடுவிக்கப்படும்.
இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிப்பது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறாது.
அத்தோடு இப்பிரச்சினை தொடர்பாக இந்திய அரசு சாதகமான பல தீர்மானங்களை எடுத்துள்ளது. எனவேஇ இந்திய மீனவர்களின் கைப்பற்றப்பட்ட படகுகளில் சிலவற்றை விடுவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதில் பிழையெதுவும் இல்லை. ஆனால் இவ்வாறு படகுகளை விடுவிக்கும் போது வடக்கின் மீன்பிடிச் சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் பெறப்படும். எனவே இவ்விடயத்தில் சில விட்டுக்கொடுப்புத் தன்மை அவசியம் என்றார்.