- Saturday
- May 16th, 2026
“தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, தமிழரசுக் கட்சியை மீள புனரமைப்புச் செய்வதற்கான உரிமை மாவை சேனாதிராஜாவுக்கு இல்லை” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர், நேற்று (09) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பிரபாகரனுக்கு இருநூறு வருடங்கள் தண்டனை விதித்தபோது நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில்...
“வடமாகாண முதலமைச்சர் மீள் இணக்கத்தை ஏற்படுத்தாது, தனி நாட்டு கோரிக்கைக்கே தூபம் இடுகின்றார். வடக்கு - தெற்கு மக்கள் பிரிவினை இல்லாமல் செய்து, தேசிய ஐக்கியத்தை கட்டி யெழுப்பவே நாம் முற்படுகின்றோம்” என, லங்கா சமஜவாய கட்சி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். யாழ். ஊடக அமயத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
புதிய அரசியலமைப்பு திருத்தத்தை தயாரித்தல் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்கர்களினால் புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்று நாட்டுக்கு அவசியம் இல்லை என்ற கருத்து தொடர்பில் தாம் அவர்களுடன் கலந்துரையாட இருப்பதாக கூட்டமைப்பின்...
நாட்டில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இருதய மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்திருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த 7ம் திகதி கண்டி வைத்தியசாலையில் அனுராதபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மூளை செயலிழந்த 24 வயதுடைய இளைஞனின் இருதயம் இவருக்குப்...
கண்ணில் உள்ள வெள்ளை படர்தலை நீக்கும் சிகிச்சைக்காக வரும் ஒவ்வொரு நோயாளர்களுக்கும் உயர்த்தரத்திலான கண் வில்லைகள் இலவசமான முறையில் பொருத்தப்படுவதாக தேசிய கண் வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் டொக்டர் முஹம்மட் ரிஷாப் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நாளாந்தம் இரண்டாயிரத்திற்கும், மூவாயிரத்திற்கும் இடைப்பட்ட நோயாளர்கள் இவ்வாறான சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 15 வைத்திய நிபுணர்கள் சத்திரசிகிச்சையை மேற்கொள்கிறார்கள். உயர்தரத்திலான...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்து 6 கிலோ கஞ்சா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மீட்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்.கச்சேரிப் பகுதியில் குறித்த பேருந்தினை மறித்துச் சோதனையிட்டபோதே மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பேருந்தில் பயணித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை...
வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற தனியார் பேரூந்தின் மீது பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் பேரூந்தில் பயணித்த சிலர் காயமடைந்துள்ளதாக பேரூந்தின் உரிமையாளர் தெரிவித்தார். வவுனியாவில் இருந்து மாலை 5.30 மணியளவில் செட்டிகுளம் நோக்கி பயணித்த பேரூந்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் ஏறியுள்ளதுடன், சிறிது தூர பயணத்தின் பின்னர் அவர்கள் இருவரும் பேரூந்தின் நடத்துனருடன்...
ஒரே அரச பாடசாலையில் 10 வருடங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள சகல ஆசிரியர்களும், அதிபர்களும் இன்னும் இரு மாதங்களுக்குள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரே பாடசாலையில் பல வருடங்கள்...
ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை செய்யப்படும் என்று வட.மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார். வவுனியா, தோனிக்கல் முத்து மாரியம்மன் ஆலய அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கு கொண்டு உரையாற்றும் போதே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “ஞாயிற்றுக்கிழமைகளிலே தனியார் கல்வி நிறுவனங்கள்...
நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயப் படுகொலையின் 22ஆவது ஆண்டு நேற்று நினைவு கூரப்பட்டது. உயிரிழந்தவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் சுடரேற்றி உணர்வு பூர்மாக அஞ்சலி செலுத்தினர். 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் அரச போர் வானூர்திகள் சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தின. அந்தச் சமயம் முன்னேறிப் பாய்ச்சல் எனும் அரச படைகளின்...
வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துன்னாலைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது...
வடக்குகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசம் என்பன அங்கீகரிக்கப்பட்டு சமஸ்ட்டி என்னும் வார்த்தையை உள்ளடக்கியதாக அமைந்தால் மட்டுமே புதிய அரசியல் யாப்பை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் இவ்வாறு த.தே.ம முன்னணியினர் நாடாத்திய ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் ஊடக மாநாடு தொடர்பான காணெளி https://www.youtube.com/watch?v=7TzR8ow3SrA&feature=youtu.be https://www.youtube.com/watch?v=Exfc3U6xTBA&feature=youtu.be https://www.youtube.com/watch?v=yQ174qhGcvM&feature=youtu.be...
வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் 349 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள், மாகாண பொதுச் சபை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளன. இதனடிப்படையில், விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர். விண்ணப்பமுடிவுத்திகதி 2017.08.04 என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடங்களும் அவற்றுக்கான வெற்றிடங்களும் வருமாறு- தமிழ்-61, வரலாறு-40, குடியியல்-39, தகவல் தொழில் நுட்பம்-27,...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் அதிகாரிகளின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் நேற்று (வியாழக்கிழமை) யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே மேற்படி...
கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையரிடம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர், கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் நேற்று (வியாழக்கிழமை) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து...
புதிய அரசியலமைப்பிற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஐக்கியத்துடன் செயற்படுதல் அவசியமாகும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில்...
இளைஞர்கள் மத்தியில் தொழில் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய சட்டம் ஏற்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் 35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை செய்யும் வகையில் குறித்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. புதிய சட்டத்திற்கான வரபுகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் விரைவில் நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் கொண்டுவரப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான...
நீங்கள் எப்பொழுதும் இனவாதத்தையே பேசிக்கொண்டிருக்காமல் எமக்கும் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் தாருங்கள் என இராஜாங்க அமைச்சரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் எதிரணியினரை கடுந்தொனியில் எச்சரித்துள்ளார். இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக அவர் நாடாளுமன்றில்...
வவுனியாவில் வங்கி ஒன்றில் வைப்பிலிடப்பட்ட 20 இலட்சம் ரூபாவை வேறு ஒருவர் கையாடல் செய்து பணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று (06) முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா வங்கியில் கடந்த மாதம் 05 ஆம் திகதியன்று புதிய வங்கிக் கணக்கு ஒன்று ஆரம்பித்து வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு...
கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி, சிலர் நிதி மோசடியில் ஈடுபடுகின்றனர். இவ்விடயத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார். “இலங்கை மற்றும் கனேடிய அரசாங்கங்களுக்கு இடையில், வேலைவாய்ப்புத் தொடர்பில் எந்தவொரு ஒப்பந்தங்களும் இல்லை. “அண்மையில் கனடாவில் வேலைப் பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த பெண் ஒருவரை,...
Loading posts...
All posts loaded
No more posts
