Ad Widget

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையரிடம் தீவிர விசாரணை

கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையரிடம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர், கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் நேற்று (வியாழக்கிழமை) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேகநபரின் மனைவி கடந்த 2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கியூபெக்கில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு கனேடிய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கனேடிய உச்ச நீதிமன்ற நீதிபதி குறித்த நபரை நாடுகடத்துமாறு தீர்ப்பளித்தார். அதன்படி அவர் நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts