Ad Widget

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்து 6 கிலோ கஞ்சா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மீட்கப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்.கச்சேரிப் பகுதியில் குறித்த பேருந்தினை மறித்துச் சோதனையிட்டபோதே மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேருந்தில் பயணித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts