- Saturday
- September 20th, 2025

சாவகச்சேரி, கச்சாய் அம்மன் கோயில் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் நேற்று திங்கட்கிழமை இரவோடிரவாக அடித்துநொறுக்கப்பட்டுள்ளது என்று கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பிறந்த தினத்தின்போது குறித்த கட்சியினர் ஆலயத்தில் பொங்கல் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர் என்றும், இதனைத் தொடர்ந்து ஆலய மண்டபம் ஒன்றில் பொருட்களை வைத்த அவர்கள் சில...

யாழ். புகையிரத நிலையத்திலுள்ள நிலக்கீழ் சுரங்கப் பாதையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓவியரான ரோஸ் ரொபின் என்னும் பெண்மணியால் வரையப்பட்டுள்ள சுவர்ஓவியங்களை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா திங்கட்கிழமை(22) பார்வையிட்டார். அத்துடன் ஓவியரை பாராட்டி, அவருக்கு நினைவு பரிசில் ஒன்றையும் வழங்கினார். கடந்த டிசெம்பர் 3ஆம் திகதி...

ஆன்மீகத்தின் மூலமே சிறந்த சமுதாயம் மலரும். திருவெம்பாவை காலத்தில் அனைவரும் சமய, சமூக பணிகளில் ஈடுபட வேண்டும் என சைவ மகா சபையின் பொதுச் செயளாலர் ப.நந்தகுமார், திங்கட்கிழமை (22) வேண்டுகோள் விடுத்தார். சைவ மகா சபையின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துக்கூறுகையிலேயே நந்தகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

ஜனாதிபதித் தேர்தலில் 17 மாவட்டங்களில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவே வெற்றிபெறுவார். - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன். பொது எதிரணி வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து தெல்தெனிய, நாவலப்பிட்டி, மாத்தளை, கம்பளை, எட்டியாந்தோட்டை, வலப்பனை, ஹங்குரான்கத, பதுரெலிய ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தொடர் பிரசார கூட்டங்களில் உரையாற்றிய போதே...

தனது மூன்றாவது பதவிக்காலத்தில் பிளவுபடாத இலங்கையை உறுதிசெய்வதுடன் புதிய அரசமைப்பொன்றை அறிமுகம் செய்வார் என்று உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டைத் துண்டாடுவதற்கு சர்வதேச, உள்நாட்டு சக்திகள் விரும்புகின்றன. இந்த சக்திகளுக்கு நான் சிறிதளவும் இடமளிக்கமாட்டேன்...

குவைத்தில் தொழில் புரியும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பெயர் விபரங்களை பயன்படுத்தி பாரிய தேர்தல் மோசடியில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்ட இலங்கையர்களின் பெயர் விபரங்களை குறிப்பிட்ட வேட்பாளர் ஒருவருக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், இந்த...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடமாகாணசபை தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்றை சுழற்சி முறையில் வழங்குவதாக வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்றவாறு வழங்கவில்லையென வவுனியா மாவட்ட பொதுமக்கள் அமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். வடமாகாணசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை சுழற்சி முறையில் ஐவருக்கு...

மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை தொந்தரவு செய்தமையால் தபால்மூல வாக்களிப்பு நிலையம் ஒன்று காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. மீதொட்டுமுல்லை, இலங்கை போக்குவரத்து சபை கட்டடத்தில் இன்று இயங்கிய தபால்மூல வாக்களிப்பு நிலையமே இவ்வாறு மூடப்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கென வந்த ஊழியர்களை, ஆளும் கட்சி ஆதரவாளர்கள் சிலர் மகிந்தவுக்கு வாக்களிக்கும்படி வற்புறுத்தியதில் ஏற்பட்ட முறுகல் நிலைமையே இதற்கு காரணம் என...

இழுபறி நிலையில் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்த விஞ்ஞாபனம் இன்று 23.12.2014 முற்பகல் 9 .30 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டது. “மஹிந்த சிந்தனை – உலகத்தை வெல்லும் வழி” என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான...

நாட்டின் சில பாகங்களில் இன்று (23) மாலை வேளையில் இடியுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாகவும், வடக்கு மத்திய வடமத்திய கிழக்கு ஊவா மாகாணங்களில் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் நிலவுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மற்றும் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய...

சமூகம் மற்றும் கட்சி ஆகியவற்றின் பாதுகாப்பையும் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக உரிமைகளையும் முதன்மைப்படுத்தி இன்று 23ஆம் திகதியும், நாளை 24ஆம் திகதியும் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பின்போது தமது மனச் சாட்சியின்படி வாக்களிக்குமாறு அரச ஊழியர்களிடம் முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்ற அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின...

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால், வெற்றிபெற்ற தரப்பிடம் தனது அரசாங்கம் அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். பிரிட்டனிலிருந்து வெளியாகும் ஃபைனான்ஸியல் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு அளித்த பதிலிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். எனினும், 'நான் தோல்வியடைப் போவதில்லை' என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள...

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வரம் கிடத்த போதிலும் அவர் தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம், நாடாளுமன்றத்தில் இருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நேற்று திங்கட்கிழமையுடன் இழந்தது. நாடாளுமன்றத்தில் 163 உறுப்பினர்களை அரசாங்கம் கொண்டிருந்தது. எனினும், அந்த எண்ணிக்கை நேற்றுடன் 148ஆக குறைந்துள்ளது. இதேவேளை, ஆளும் கட்சியிலிருந்து...

"ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இராணுவத்தினர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுகின்றனர் என்றும், அவர்கள் கடமைகளைச் சரிவரச் செய்வதில்லை என்றும், யுத்தத்தை வெற்றி கொண்ட சிப்பாய்கள் கீழ் மட்ட வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படும் கருத்துகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை." - இவ்வாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய...

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் தபால் மூல வாக்காளர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன கருத்தை கூறியிருக்கிறார்கள். தபால் மூலமான வாக்களிப்பு முடிந்த பின்னர் கருத்து தெரிவித்து என்ன பயன். எனவே கூட்டமைப்பின் முடிவுக்கு காத்திருக்கவேண்டாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, திங்கட்கிழமை (22) தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (22)...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவுசெய்துள்ளார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அண்மையில் சத்தியப்பிமான செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் கலந்துகொண்டுள்ளார். இதேவேளை, தற்போது அவர்கள் இருவரும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி கொண்டிருக்கின்றனர். அதில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர்...

அபிவிருத்தியில் தமிழ்மக்கள் தொடர்ந்தும் பயணிக்க வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதிப்படவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார். காங்கேச்துறை தொகுதிக்கான ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்கூட்டம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள ஈ.பி.டி.பியின் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றபோதே, அதில் கலந்துகொண்டு குகேந்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரளிப்பது என்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸில் இரு வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனடிப்படையில், முஸ்லிம்...

காலநிலை மாற்றத்தினால் இன்று (22) நாட்டின் அனைத்து பாகங்களிலும் மழைவீழ்ச்சியினளவு அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது எனவும் வடக்கு மத்திய வடமத்திய கிழக்கு ஊவா மாகாணங்களில் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் நிலவுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மற்றும் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய...

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ தபால் மூல வாக்களிப்பு நாளையும்,நாளை மறுதினமும் நடாத்தப்படவுள்ளன. அஞ்சல்மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாகவும் இரகசியமாகவும் அடையாளமிடுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். வாக்காளர்களை அடையாள மிட்டுள்ள சின்னம் பிறர் அறியாதவகையில் பாதுகாக்கப்படும். அஞ்சல் வாக்கு அடையாளமிடும் இடமொன்றில் வாக்களிப்பதற்கான தடை...

All posts loaded
No more posts