Ad Widget

யாழ் பல்கலைக்கழகப் பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் பதவி விலகக் கோரிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களை பதவி விலகுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டிருக்கின்றது. இது தொடர்பில் சங்கத்தின்  தலைவர் மற்றும் இணைச்செயலாளர் ஆகியோரால் ஒப்பமிடப்பட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில்

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் யாவரும் எதிர்காலத்தில் தூய்மையான, அரசியல் கலப்பற்ற, வினைத்திறன் மிக்க பல்கலைக்கழக நிர்வாகம் அமைவதற்கு உடனடியாக தாமாகவே பதவி விலகவேண்டும் எனவும், இவர்களது இப்பதவி விலகலானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மீள் எழுச்சியின் முதற்படியாக அமையட்டும் எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது என்றுள்ளது

 

Related Posts