Ad Widget

தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் 41 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு இன்று மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் வடமாகாண சபையின் உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Posts