இரு முக்கிய அரசியல் பிரமுகர்களும், விடுதலைபுலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவரும் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முயல்கின்றனர் என்று வெளியான தகவல்களைத் தொடர்ந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
புலனாய்வு துறையினரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். குறிப்பிட்ட மூன்று நபர்களும் பயன்படுத்தவுள்ள வாகனங்களின் விவரங்களும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.