கிழக்கில் ஆட்சி அமைக்க ; ஜனாதிபதியை சந்திக்கும் கூட்டமைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர், புதிய ஆட்சி அமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் செயலாளர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் இன்றைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தமது நிலைப்பாடு...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அதிரடி அறிவிப்புகள்

பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்காமல் தான்தோன்றித்தனமாக கடமைகளைப் புறக்கணிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரதமரின் அலுவலகம் முடிவெடுத்துள்ளது. தவறிழைக்கும் அரச அதிகாரிகளின் வருடாந்த சம்பள உயர்வினை இடைநிறுத்தவும் கவனம் திரும்பியுள்ளதாக பிரதமரின் செயலர் சமன் ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியவாறு நல்லாட்சி வேலைத்...
Ad Widget

வடக்கில் இருந்து ஒருபோதும் படைகள் வெளியேறாதாம்!

"நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு வடக்கில் இருந்து ஒருபோதும் படைகள் அகற்றப்பட மாட்டாது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருக்கிறார்." - இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார். நேற்று முன்தினம் கண்டிக்கு சென்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயவர்த்தன தலைமைப் பீடாதிபதியை சந்தித்து ஆசி வேண்டினார். இதன்போதே மேற்கண்ட...

சட்டவிரோதங்கள் அம்பலம்: பி.எம்.சி.எச் சில் இன்று விசேட தேடுதல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோதமான சம்பவங்கள் அம்பலமாகிகொண்டிருக்கின்றன. தங்களுக்கு கிடைக்கின்ற இரகசிய தகவல்களை அடுத்து பொலிஸாரும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் சந்தேகத்துக்கு இடமான இடங்களில் திடீர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சட்டவிரோதமான பொருட்களை மீட்டுவருகின்றனர். சனிக்கிழமை (17) முதல் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை...

பேச்சுக்கு நாம் தயார், தீர்வுத் திட்டத்தை உருவாக்க அரசு தயாரா – கூட்டமைப்பு

'தேசிய பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நாம் தயார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தீர்வுத் திட்டத்தை உருவாக்க புதிய அரசு தயாராக உள்ளதா?' என கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) கேள்வி எழுப்பினார். வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால்...

கே.பி.க்கு எதிராக வழக்குத் தொடரும் ஜேவிபி

விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு, தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குமரன் பத்மநாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக...

ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் கப்பல் மீட்பு

காலி துறைமுகத்தில் ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தக் கப்பலில் ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்கள் 12 இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை, எவான்ட்...

மஹிந்த, நாமல் உருவம் பொறிக்கப்பட்ட ஒருதொகை கடிகாரங்கள் மீட்பு

சபுகஸ்கந்தை - மாபிம பிரதேசத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் உருவம் பொறிக்கப்பட்ட கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த களஞ்சியசாலையில், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மஹர நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, சபுகஸ்கந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவை...

தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யவும் – விநாயகமூர்த்தி

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கோரிக்கைவிடுத்துள்ளார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை கொழும்பில் சனிக்கிழமை (17) சந்தித்து கலந்துரையாடும் போதே, விநாயகமூர்த்தி இந்தக்...

ஐநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு: பிரதமர் ரணில்

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநாவின் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.அது இலங்கைக் கெதிரான விசாரணையல்ல குற்றமிழைத்த தனிப்பட்ட நபர்களுக்கெதிரானது என்றார். இலங்கையில் புதிய அமைச்சரவை அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சில தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றது. பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவருக்கு திட்டமிடல்...

பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட மகிந்த பெறுமதியற்றவர்- பொன்சேகா

மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது சரத் பொன்சேகா இந்த கருத்தினை தெரிவித்திருந்தாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை...

விக்னேஸ்வரன் புதிய ஜனாதிபதியை சந்திக்கலாம்?

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வடமாகாண அபிவிருத்தி சம்பந்தமாகவோ அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகவோ புதிய ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட வாய்ப்புக்கள் உள்ளதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் அவரை வடமாகாண முதல்வர் உத்தியோகபூர்வமாக சந்தித்து உரையாடவுள்ளாரா என கேட்ட போது சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

பாடசாலைகளுக்கு அருகிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரிக்கை

வடமாகாண பாடசாலைகளுக்கு அருகிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு புதிய ஆளுநரான எச்.எம்.ஜீ.எஸ்.பளிக்ஹக்காரவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின், சனிக்கிழமை (17) தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு அருகில், பாடசாலைகளுக்கு செல்லும் வீதிகளில் இராணுவத்தினர் முகாமிட்டு தங்கியுள்ளனர். அத்துடன் பாடசாலை நடைபெறும் காலங்களில் ஆசிரியர்கள்,...

நீலப்படையணி என்ற போர்வையில் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள் – வேல்முருகன் தங்கராசா

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் கடந்த காலங்களில் இருந்த சிலர், நீலப்படையணி என்ற போர்வையில் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன் தங்கராசா, சனிக்கிழமை (17) தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடகிழக்கு...

வடக்கு, கிழக்குக்கு சில பொருட்களை எடுத்துச்செல்லத் தடை !!

வடக்கு, கிழக்குக்கு கொண்டு செல்லக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்த சில பொருட்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதுடன் சில பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்துக்கு யுத்த உபகரணங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கொண்டு...

யாழ்-கொழும்பு பஸில் தீ

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வத்தளைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இயந்திர கோளாறு காரணமாகவே இந்த பஸ் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், பஸ்ஸில் 36 பயணிகள் இருந்ததாகவும் தெரிவித்தனர். சம்பவத்தில் எவருக்கும்...

டக்ளஸின் இடத்திற்கு விஜயகலா!

புதிய அமைச்சரவையில் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின் போது இணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று நம்பகரமாகத் தெரியவருகிறது. இதுவரை காலமும் இணைத்தலைவராகப் பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பதவியைத் தொடர முடியாத நிலையில் அந்தப் பதவியை பிரதி அமைச்சர்...

கிழக்கு மாகாண ஆட்சி ! மு.காவுடனான பேச்சுவார்த்தை தோல்வி!

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கே முதலமைச்சர் வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்தார். அத்துடன், ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடனும் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்....

புதிய ஆளுநரின் செயற்பாடுகள் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் – சிவஞானம்

வடக்கு மாகாணத்திற்கு இராணுவ பின்புலம் இல்லாத சிவிலியன் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதை வரவேற்பதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவரின் எதிர்காலச் செயற்பாடுகள் மாகாணத்திற்கு இடையூறு ஏற்படுத்தாது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இதனூடாக மாகாணத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி மாகாண சபையையும் சிறந்த முறையில் இயங்குகின்ற நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் வட மாகாண...

யாழ். வர்த்தக சங்கம், அரசாங்கத்திடம் 5 கோரிக்கைகளை முன்வைத்தது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உருவாகியுள்ள புதிய அரசாங்கத்திடம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் காரணமாக இலங்கைக்கு வரமுடியால் வெளிநாடுகளில் இருப்பவர்கள், இலங்கைக்கு வந்து செல்வதற்கான அனுமதி உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைப்பதாக யாழ்.வர்த்தக சங்கத்தலைவர் எஸ்.ஜெயசேகரம் தெரிவித்தார். யாழ். வர்த்தக சங்கத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும்...
Loading posts...

All posts loaded

No more posts