Ad Widget

யாழ்.பிரதேச செயலக புதிய கட்டடம் திறந்து வைப்பு

பழைய பூங்கா வளாகத்தில் 48 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தொகுதி உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரால் திங்கட்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது.

jaffna-piradesa-saba

சென்.ஜோன்ஸ் கல்லூரியில் வசதிகள் குன்றிய நிலையில இயங்கி வந்த யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்துக்கு தற்போது புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண மீன்பிடி, உள்ளுராட்சி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி, யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம், யாழ். பிரதேச செயலாளர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்

Related Posts