Ad Widget

வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான செலவு 60 பில்லியனால் குறைக்க நடவடிக்கை!

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை சீர்திருத்தம் புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி தற்போது 60 பில்லியனால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ravi-karunayakka

கடந்த வௌ்ளிக்கிழமை (6) நிபுணத்துவ சங்கங்கள் அமைப்பின் அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தொடரில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன் போது நிதியமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து ஒப்பந்தக்காரர்களை அழைத்து அது தொடர்பில் கலந்துரையாடினோம். அதன் போது நாம் அவர்களை கேட்டோம் முன்னைய அரசாங்கத்தின் கீ்ழ் இத்திட்டத்துக்கென 245 பில்லியன் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது அது தொடர்பில் உங்கள் கருத்து என்னவென்று வினவிய போது அவர்கள் தங்களது சேவைக்கு அவ்வளவு நிதித் தொகை தேவையில்லை எனவும் தமக்கு தற்போது ஒதுக்கப்பட்ட நிதியளவு போதுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது பரம்பரையாக வந்த ஊழல் மிக்க பொருளாதாரமாகும் . அத்துடன் முன்னைய ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மிக்க நடவடிக்கைகள் குறித்து மேலும் தெரிவித்த அவர், விமானக் கொள்வனவின் போது மிக் விமானக் கொள்வனவு பற்றிக்குறிப்பிடுகையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பேரம் சேப்பட்டது. அத்துடன் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு கெலிகொப்டரின் பெறுமதி 12 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போதும் அவர்கள் 20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு இருப்பில் காட்டியுள்ளனர்.

அத்துடன் பாதுகாப்பு கல்வி நடவடிக்கைகளுக்காக 22 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கான எந்தவித ரசீது சீட்டுக்களும் இன்றி அவை செலவிடப்பட்டுள்ளன. காலி முகத்திடலில் உள்ள சங்கிரி லா திட்டம் மற்றும் சிஏரி சி (CATC) திட்டம் நிலங்களை விற்று பெறப்பட்ட நிதித்தொகை பாதுகாப்பு செயலாளரின் கணக்கிற்கு அனுப்பப்பட்டது.

அத்துடன் திரட்டு நிதியத்திலிருந்து செலவிடப்பட்ட இந்த 07 மில்லியன் தொகையானது திறைசேரியின் அனுமதியோ ரசீதுகளோ இன்றி செலவிடப்பட்டதொன்றாகும். மேலும் ஒரு 2.5 பில்லியன் பணத்தொகையானது கட்டடக்கலை செலவுக்காக செலவிடப்பட்டுள்ளது. அதில் முதல் தவணைப்பணமாக 800 மில்லியன் ஆனால் அதற்குரிய எந்த வித மேற்கோள்களும் காட்டப்படவில்லை. மேலும் ஒரு தொகை பணமான 30 – 40 பில்லியன் பணத்தொகை செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அப்பணத்தொகை எவற்றுக்காக பயன்படுத்தப்பட்டது. எங்கு வைப்பிலப்பட்டது தொடர்பிலான எவ்வித விபரங்களும் இல்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார் .

மொத்த பணத்தொகை 1828 பில்லியனிலிருந்து 458 பில்லியன் வட்டிப்பணமாக செல்ல அது தவிர ஏனைய பணத்தெகையானது மூலதனமாக முதலிடப்பட்டது. அத்துடன் இத்திட்டத்துக்கான 2015 ஆம் ஆண்டின் தொகையாக 1532 பில்லியன் ஒதுக்கப்பட்டு அதனை எம்மால் செலுத்த முடியாது போனமையால் அத்தொகை வங்கி திவாலாகி போனமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அரசாங்கத்தின் மொத்த கடனாக 6.9 ரில்லியன் தொகை காணப்பட்ட போதும் 24 நாட்கள் தொடர்ந்து நடத்திய கணிப்பீட்டின் படி இத்தொகையானது 9.3 ரில்லியன் தொகையாக அதிகரித்துள்ளது. அத்துடன் வௌி வருவாய்களிலிருந்து தற்போது நாட்டிலுள்ள இருப்புப் பணமானது உண்மையிலேயே 9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருக்கவேண்டுமென்ற தேவைப்பாடு காணப்பட்டாலும் அங்கு இருப்பிலுள்ள தொகை தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே எனவும் இது தொடர்பான பல இருப்பு சந்தைகள் முன்னரான ஆட்சிக்காலத்தின் கீழ் காணப்பட்டு அவை குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல் காரார்களினால் கையாளப்பட்டு வந்தது. ஆனால் இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts