- Friday
- May 29th, 2026
எமது தமிழ் சமூகத்தில் முன்னைய வரலாறுகளை தற்போதுள்ள புதிய தலைமுறையினர் மறந்து வருகின்றனர். அவ்வாறு இல்லாமல் புதிய தலைமுறையினர் எமது பழைய வரலாற்றை மறந்துவிடாமல் இருக்கவேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார். உலக வங்கியின் 13 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் துணுக்காய் வலயக்கல்வி பணிமனையில் அமைக்கப்பட்ட கட்டடத்தை திங்கட்கிழமை (02) திறந்து...
அல்வாய் முத்துமாரியம்மன் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் திங்கட்கிழமை (02) காலை மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். வதிரியைச் சேர்ந்த பிரதீபன் சரண்யா (வயது 24) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டார். இவரது கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகின்றார். இருவரும் வதிரியிலிருந்து அல்வாய் பகுதியிலுள்ள...
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது போன்று, இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுவதன் மூலமே தமிழ்மக்களின் அடிப்படை பிரச்சினைகள் உட்பட அனைத்து விதமான பிரச்சினைககளையும் சுமுகமாக தீர்த்துக்கொள்ள முடியும் என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார்....
காணாமற்போனவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து நாளை புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை யாழ். அரச செயலகம் முன்பாக நடத்தவுள்ளனர். அத்துடன் ஜனாதிபதியிடம் மனு ஒன்றையும் தாம் கையளிக்கவுள்ளனர் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களையும், காணாமற் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த அனைவரையும் பங்கேற்குமாறும் குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை வடபகுதியில் இச்சங்கத்தினால்...
மக்களுடைய நிலங்களை விடுத்து கடல் பகுதியை அபிவிருத்தி செய்து பலாலியில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்பனவற்றை அபிவிருத்தி செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வடக்கு மாகாண ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30. மணியளவில் யாழ் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. யாழிற்கு வருகை தந்துள்ள புதிய ஐனாதிபதியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மாலை அணிவித்து வரவேற்றார். இதன் போது மத்திய அரசின் அமைச்சர்கள் சிலரும் வருகை தந்திருந்தனர். இந்தக்...
சாவகச்சேரி கெருடாவிலில் கொட்டன்கள் மற்றும் ஆயுதங்களுடன் நடமாடும் குழுவினரால் மக்கள் இரவில் நடமாட மக்கள் அஞ்சுகின்றனர். இந்தக் குழுவினர் இரவில் நடமாடுவோரை வழிமறித்து இடையூறு விளைவிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் இரவில் நடமாட முடியாத நிலை காணப்படுகின்றது. தவிர மட்டுவில், சரசாலை பகுதிகளைச் சேர்ந்த சாவகச்சேரி நகர்ப் பகுதி வர்த்தகர்கள் வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு...
மீசாலை சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் திடீரென தீப்பற்றி எரிந்நதால் கடையிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றது. வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்ததில் அங்கிருந்த சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகின. அத்துடன் வர்த்தக நிலையத்தின் மேலாகச் சென்ற மின்...
கடந்த 25ஆம் திகதி முதல் காணாமற்போனதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த யாழ்.மாலுசந்தி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் மயூரன் (வயது 21) என்ற இளைஞனை திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த இளைஞனைக் காணவில்லையென அவரது தாயார் கடந்த 26ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். குளிர்பான நிலையமொன்றுக்கு...
கிழக்கு மாகாணசபையில் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள 10 உறுப்பினர்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர். கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்புக்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த 10 உறுப்பினர்களே இந்த அழைப்பை விடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறிப் புகுந்த இந்திய மீனவர்கள், இலங்கைத் தமிழ் மீனவர்களை ஆயுதங்களால் தாக்கிப் படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். இதனைக் கண்டித்து புதிய ஜனநாயக மார்ச்சிச லெனினிசக் கட்சி (NDMLP) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை: நேற்று முன்தினம் (27-02-2015) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நூற்றுக் கணக்கான இழுவைப் படகுகளில் இந்திய மீனவர்கள் அத்துமீறிப்...
பாரம் தூக்கி மூலம் சீமெந்துத் தூணை தூக்கி நட முயன்ற வேளையில் மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தெல்லிப்பழை, கொல்லங்கலட்டிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றது. மூன்று பிள்ளைகளின் தந்தையான சங்கானை, சிலம்பு புளியடியைச் சேர்ந்த தங்கமுத்து சோதிநாதன்(வயது-34) என்பவரே உயிரிழந்தார். கொல்லங்கலட்டிப் பகுதியில் வீதிக்கு...
வடக்கு மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்காக இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. காலை 9.30 மணிக்கு வரும் அவர் மூன்று மணி நேரமே இங்கு நடக்கு நிகழ்வுகளில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியாக முதன்முறையாக யாழ்ப்பாணம் வரும் மைத்திரிபால சிறிசேன, நல்லூர் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவார். இதன் பின் மாவட்ட...
பனை உற்பத்தி பொருட்களின் விற்பனையை அதிகரித்து பனை உற்பத்தியில் தங்கியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தலைவர் கே.விஜிந்தன், திங்கட்கிழமை (02) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கடந்த காலத்தில் நிவர்த்தி செய்யப்படாமல் இருந்த வேலைத்திட்டங்களை குறுகிய நாட்களுக்குள் நிவர்த்தி செய்து, உற்பத்திகளை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்....
இலங்கை போரின்போது நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையரின் விசாரணை அறிக்கையின் கருத்துக்களை இலங்கை அரசு உருவாக்கவிருக்கும் உள்ளக புலனாய்வு மற்றும் நீதிக்கட்டமைப்பு பயன்படுத்தும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஐநாவின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். நேற்று திங்கட்கிழமையன்று ஜெனீவாவில் துவங்கிய...
நான் இனிமேலும் ஜோதிடத்தில் நம்பிக்கை வைக்கப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானின் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் டவுன் நிறுவனத்தில் கடமையாற்றும் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு பயணிப்பது, மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதன் காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பிலான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக வடக்கு முதலமைச்சர் தெரிவித்தார். நான்கு நாள்கள் உத்தியோக பூர்வ...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (03) வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.அவர் ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி வடக்கு கிழக்கு அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும் திருகோணமலை மாவட்ட குழுக்கூட்டத்திலும் ஜனாதிபதி நாளை கலந்துகொள்ளவுள்ளார்....
தெல்லிப்பழை தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரிமா கழக மண்டபத்தில் தமிழ்ச் சங்கத் தலைவர் ச.சிவானந்தராசா தலைமையில் தமிழ் விழா இடம் பெற்றது. தெல்லிப்பழை காசிப்பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர்கள் இடப மாடுகள் இரண்டு முன்னே வர அதனைத் தொடர்ந்து சங்கு, தப்பட்டை, பேரிகை, மேள வாத்தியங்ள் முழங்க கொடி, ஆலவட்டம் தாங்கி...
Loading posts...
All posts loaded
No more posts
