லஞ்ச, ஊழல்கள் ஒழிப்புப் பணிப்பாளராக டில்ருக்‌ஷி டயஸ் நியமனம்

லஞ்ச ஊழல்கள் ஒழிப்பு ஆணைக்குழவின் பணிப்பாளராக டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை காலை வழங்கினார்.

மேல்முறையீட்டு நீதிதிமன்ற நீதிபதியாக ஹேமா நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஹேமா குமுதினி விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபயக்கோன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Ad Widget

கருகம்பனையில் ஆயுள்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு!

வலி. வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கருகம்பனை பிரதேச மக்களின் நன்மை கருதி வட மாகாண சுகாதார அமைச்சினால் ஆயுள் வேத வைத்தியசாலை இன்று புதன்கிழமை பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி பொது அமைப்புக்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தனியார் கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆயுள் வேத வைத்தியசாலையை...

ஆறாவது திருமணத்துக்கு தயாரான சுவிஸ் கல்யாண இராமன் கைது

5 திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயதுடைய பெண்ணொருவரை புதன்கிழமை (11) வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திருமணம் செய்ய முயன்ற 56 வயதுடைய சுவிஸ் நாட்டு பிரஜை ஒருவரை செவ்வாய்க்கிழமை (10) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறியதாவது, '56 வயதுடைய நபர் ஒருவர் 20 வயதுடைய...

யாழில் 80 பொலிஸாருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாணத்தின் மூன்று பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 80 பொலிஸார் தென் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர். பொலிஸ் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் இடமாற்றத்தின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (10) அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 34பேரும், நெல்லியடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 27பேரும், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த...

சர்வதேச மத்தியஸ்தத்துடன் நிரந்தர தீர்வு வேண்டும் – எஸ்.சிறிதரன்

70 ஆண்டுகளுக்கு மேலாக காணப்படுகின்ற இலங்கை இனப்பிரச்சனைக்கு, சர்வதேச மத்தியஸ்தத்துடன் ஒரு தீர்வு காணப்பட்டு தமிழர்கள் வடக்கு - கிழக்கில் நிம்மதியாக வாழ்கின்ற நிலை உருவாகுவதற்கு பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் முன்வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா டேவிஸ் மற்றும் சிறிதரன்...

பயனாளிகளுக்கு வழங்கப்படாமலுள்ள வாழ்வாதார பொருட்கள்

வாழ்வாதார வசதி குறைந்த பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் காரைநகர் பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகள், தையல் இந்திரங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் ஆகியன இன்னமும் பயனாளிகளிடம் கையளிக்கப்படவில்லை என காரைநகர் பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் வீரமுத்து கண்ணன் புதன்கிழமை (11) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், 'இந்த...

திஸ்ஸவுக்கு பிணை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை பிணையில் செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவிட்டது.

ICTA புதிய தலைவராக சித்ராங்கனி முபாரக்!

நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் மாற்றத்துடன் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) தலைவர் பதவி மற்றும் பணிப்பாளர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மாற்றமானது புதிய அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வகையில் புதிய தலைவராக நியமிக்கப்ட்டுள்ள திருமதி சித்ராங்கனி முபாரக் நேற்று முன்தினம் (09) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். முகாமைத்துவ பணிப்பாளராக...

வரவுசெலவு திட்ட சலுகைகள் வழங்கப்படாவிட்டால் முறைப்பாடு செய்யலாம்

இடைக்கால வரவுசெலவு திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை சரியான முறையில் கிடைக்காமை தொடர்பான முறைப்பாடுகளை நுகர்வோர் அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யலாம். 0112 399 146, 0771 088 922 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக ,இம்முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஆலோசனைக்கமைய இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஈ.பி.டி.பி பிரதிநிதிகள் சந்திப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் மேற்படி சந்திப்பு நேற்று (10) இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது எமது மக்கள் முகங்கொடுத்து வருகின்ற நாளாந்த பிரச்சினைகள் மற்றும் சமகால, எதிர்கால அரசியல் நிலவரங்கள் என்பன குறித்து பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொடர்ச்சியாக...

வட மாகாண சபை பிரேரணை பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் – இந்தியா!

இலங்கை புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேச இன அழிப்பு விசாரணை சவாலுக்கு உட்படுத்துமானால் அது பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தமிழர் மீதான இனஅழிப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கக்கூடியதாக அமையும் என்றும் அந்த பாதிப்பு...

தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு சீனாவிடம் உதவி கேட்கிறார் சம்பந்தன்!

பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும் என்று இலங்கை வந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அடங்கிய தூதுக் குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. வேண்டுகோள் விடுத்தார். கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலையடுத்து இலங்கையின் அரசியல் களநிலைவரத்தில் ஏற்பட்டுவரும்...

யாழ்.இந்துக் கல்லூரி வாகனத்தின் கண்ணாடிகள் உயர்தர மாணவர்களால் உடைப்பு

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முச்சக்கரவண்டி, பஸ் வண்டி ஆகியவற்றின் கண்ணாடிகளை உயர்தர மாணவர்கள் அடித்து நொருக்கியுள்ளதாக அதிபர் ஐயம்பிள்ளை தயானந்தராசா, செவ்வாய்க்கிழமை (10) முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். ஆசிரியர் ஒருவருடன் முரண்பட்டுக்கொண்ட மாணவர்கள், இவ்வாறு கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். உடைந்த கண்ணாடிகள் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையவை என அதிபர்...

இனப்படுகொலை குற்றச்சாட்டை அரசு நிராகரிப்பு

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஒரு அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். இறுதிகட்டப் போரின்போது ஏராளமானத் தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்கள் என்பது அனைவரும்...

முதல்முறையாக கௌதம் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

என்னை அறிந்தால் கௌதமின் திரைவாழ்க்கையில் நல்ல ஓபனிங்கை மீண்டும் பெற்றுத் தந்திருக்கிறது. கௌதம் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார். என்னை அறிந்தால் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் விக்ரமிடம் ஒரு கதை கூறியிருக்கிறார் கௌதம். அது அவருக்குப் பிடித்துள்ளது. தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படம் முடிந்ததும்...

நீரில் உடனடி எண்ணைப்பரிசோதனைக்கு 1.3 மில்லியன் செலவில் கருவி புலம்பெயர் தமிழர் அனுப்புகின்றனர் – அமைச்சர் ஐங்கரநேரன்

வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கை வலிகாமம் பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு 10.02.2015 வலிகாமம் பிரதேசத்தில் குறிப்பாகச் சுன்னாகம், தெல்லிப்பளைப்பகுதிகளில் உள்ள கிணறுகள் பலவற்றில் குடிதண்ணீருடன் எண்ணெய் மாசாகக் கலந்திருப்பது அப்பகுதி மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது....

நிரந்தர நியமனத்தை உடன் வழங்குங்கள் : சமூக சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்.சமூக சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முதல் பண்ணை சுகாதார கிராமத்திற்கு முன்னால் முன்னெடுத்தனர். 1998 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய பின்னர் 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர் சமூக சுகாதார பணியாளர்களாக 232 பேர்...

சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.பல்கலையில் சுவரொட்டி!

இலங்கையின் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன் எம்.பி. ஆகியோருக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'போலி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளே' என விளித்து ஒட்டப்பட்ட அந்த சுவரொட்டிகளில் "ஜனநாயக சோசலிஷக் குடியரசு எனப்படும் இலங்கையின் தேசிய சின்னங்கள் அனைத்திலும் சிங்கள மேலாதிக்கத்தைப் பிரதிபலிக்கும் அடையாளங்களே...

வடக்கு மாகாண சபையில் இனவழிப்புப் பிரேரணை தீர்மானமாகியது!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்தவருடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை, நீண்ட இழுபறிக்குப்பின்னர் இன்று அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் தீர்மானமாககியது. வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகக் கட்டட தொகுதியில் நடைபெற்றது. இந்த அமர்வில் சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்து உரையாற்றினார். சட்டநடைமுறைகளை...
Loading posts...

All posts loaded

No more posts