Ad Widget

செயற்றிட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வடமாகாண சபை உறுப்பினர்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

செயற்றிட்டங்களுக்கு வடமாகாண சபையிடம் நிதியுதவி கோருவோர் வடமாகாண சபை உறுப்பினர்களை தொடர்பு கொண்டு தமது கோரிக்கைகளை அவர்கள் ஊடாக சமர்ப்பிக்குமாறு வடமாகாண சபை உதவிச் செயலாளர் பா.ஜெயகரன் சனிக்கிழமை (21) அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செயற்றிட்டங்களுக்கு வடமாகாண சபையிடம் நிதியுதவி கோரும் விண்ணப்பங்கள் பல பேரவைச் செயலகத்துக்கும் அவைத்தலைவருக்கும் அனுப்பப்படுகின்றன.

எனினும் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமையால் நிதியுதவி கோருவோர் தமது கோரிக்கைகளை வடமாகாண சபை உறுப்பினர்கள் ஊடாக சமர்ப்பிப்பதன் மூலம் மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.

Related Posts