Ad Widget

நான் அரசுப்பக்கம் தாவப்போவதில்லை! செய்திகள் பொய்யானவை என்கிறார் திஸ்ஸ!

டுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் அரசுப் பக்கம் தாவுகிறேன் என்று வெளியான தகவல்கள் பொய்யானவை. நான் ஐ.தே.க.கட்சியிலிருந்த விலகப்போவத்தில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க. (more…)

மாணவரின் பாதுகாப்புக்கு உபவேந்தரும் உயர் கல்வி அமைச்சருமே பொறுப்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலை கண்டித்துள்ள முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சி, பல்கலைக்கழக உபவேந்தரும் உயர்கல்வி அமைச்சரும் இவற்றைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளது. (more…)
Ad Widget

துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பெற்றோருக்கு அதிக கடப்பாடுகள் – பொறுப்பதிகாரி

சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவதை கட்டுப்படுத்துதற்கு பெற்றோர்களே அதிக கடப்பாட்டுடன் செயற்படவேண்டும். சிறுவர்களை துஸ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பது பெற்றோர்களின் கைகளில் உள்ளதாக (more…)

மகிந்தவுக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்த மைத்திரி !!

கோப்புக்களை வைத்துகொண்டு எந்த நேரமும் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்க முடியாது என ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் மகிந்தவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். (more…)

ஜனாதிபதி தேர்தலில் சுந்தரம் மகேந்திரன் போட்டி

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், நவ சம சமாஜ கட்சி சார்பாக சுந்தரம் மகேந்திரன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

நாவாந்துறையில் பொலிஸ், இராணுவம் குவிப்பு

மைலோ கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியின் போது, இரு அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பு காரணமாக, யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியின் பாதுகாப்பு பலப்படத்தப்பட்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்று நாவாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

புதிய ஜனாதிபதி யாரானாலும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்! – சுரேஷ்

புதிதாக வரக்கூடிய ஜனாதிபதி யாராக இருந்தாலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முழுமையாக தீர்ந்து, தமிழ் மக்கள் கௌரவமாக வாழக் கூடிய சூழல் உருவாக வேண்டும். (more…)

தேர்தலுக்குமுன் ஜனாதிபதி மஹிந்த 19 ஐ நிறைவேற்றினால் அவருக்கு ஆதரவு வழங்கத் தயார்! – ரணில்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மஹிந்த ராஜபக்‌ஷ முன்வருவாரானால் அவருக்கு எமது ஆதரவை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. (more…)

மஹிந்தவின் போஸ்டர்களுக்கு வவுனியாவில் சாணகம் வீச்சு!

வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் அருகில் ஒட்டப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்தாவின் சுவரொட்டிகளுக்கு சாணகம் வீசப்பட்டுள்ளது. (more…)

2015 பட்ஜட் வாக்கெடுப்பு இன்று!

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம், கட்சித் தாவல்கள் ஆரம்பமாகியுள்ள இவ்வேளையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை மாலை நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. (more…)

திஸ்ஸ அத்தநாயக்க அரசு பக்கம் தாவுகிறார்?

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் அரசு பக்கம் மாறப்போகிறார் என முன்னர் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்கவே கட்சி தாவப் போகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

அலைபேசியே சின்னம்?

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதி தேர்தலில், எங்கள் தேசிய முன்னணியின் கீழ் அலைபேசி சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)

மைத்திரி, வாக்களிக்கமாட்டார்

நாடாளுமன்றத்தில் இன்றுமாலை 5 மணிக்கு இடம்பெறவிருக்கின்ற 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிரணியின் (more…)

இலஞ்சம் கேட்டால் அழையுங்கள் 1954

உங்களிடம் யாரும் இலஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம் உடன் இலஞ்ச ஆணைக்குழுவின் துரித தொலைபேசி இலக்கம் 1954ற்கு அழையுங்கள் என இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளைப் புலனாய்வு வெய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)

யாழ்.பல்கலை மாணவர்கள், ஆசிரியர் சங்க தலைவர் ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல்!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர், மற்றும் ஆசிரியர் சங்க தலைவர் ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழில் இலஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு

வடமாகாணத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை ஒன்று யாழில் இடம்பெற்றது. (more…)

‘வெளியேறியவர்களின் கோப்புகள் உள்ளன, பழிவாங்கப் போவதில்லை’: மகிந்த

இலங்கையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய நபர்களின் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தன் வசம் இருப்பதாக கூறிய ஜனாதிபதி ராஜபக்ஷ, அவற்றைப் பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகைகளில் ஈடுபட தான் தயாரில்லை கூறியுள்ளார். (more…)

70 வயதைத் தாண்டிய முதியோரின் விபரங்கள் திரட்டல்

நாடு முழுவதிலுமுள்ள 70 வயதைத் தாண்டிய முதியவர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் நடவடிக்கையொன்றை, சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் தேசிய செயலகம் முன்னெடுத்து வருகின்றது. (more…)

மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் மாரடைப்பால் மரணம்

வலி. தென்மேற்கு ( மானிப்பாய்) பிரதேச சபை தவிசாளர் சண்முகம் சிவகுமார் இன்று மாரடைப்பினால் காலமானார். (more…)

இந்திய மீனவர்கள் 14 பேர் நெடுந்தீவில் கைது

இந்திய மீனவர்கள் 14 பேர் எல்லை தாண்டி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts