Ad Widget

மகிந்தவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஆலோசனை – இ.போ.ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

rajapaksa_mahintha

கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை அவரது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தினார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு 140 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இதனையடுத்தே முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஆலோசிப்பதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Related Posts