யுத்தத்துக்கு பின்னர் எமது கல்வி முன்னேற்றம் கண்டுள்ளது – சுரேஸ்

எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டகாலமாக யுத்த சூழலுக்குள் வாழ்ந்துள்ளோம். யுத்தத்துக்குப் பின்னரான சூழலில் எமது கல்வி முன்னேற்றம் கண்டு வருகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கொடிகாமம் போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே...

எமக்கு வீட்டுத்திட்டங்கள் தந்து வீடுகள் கட்டித்தர தேவையில்லை, சொந்த இடங்களுக்கு அனுப்பினாலே போதும்

எமக்கு வீட்டுத்திட்டங்கள் தந்து வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று இல்லை. எம்மை எமது சொந்த காணிக்கு செல்ல அனுமதித்தாலே போதும். நாம் எமது காணியில் கொட்டில்களையோ குடிசைகளையோ அமைத்துக் கொண்டு சந்தோசமாக வாழ்வோம் பலாலியை சொந்த இடமாக கொண்ட எஸ்.சரவணமுத்து என்பர் தெரிவித்தார். உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே - 284...
Ad Widget

ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார் மோடி

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (14) பிற்பகல் தலைமன்னார் துறை புகையிரத நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு தலைமன்னார்- மடுவுக்கான புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்தார். கடந்த 26 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னாருக்கான ரயில் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தெமட்டகொடையில் இரு மனிதக் கால்கள் மீட்பு

தெமட்டகொடை பிரதேசத்திலுள்ள கழிவு நீர் வாய்க்காலில் இருந்து மனித உடற்பாகங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று காலை இரண்டு கால்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனுராதபுரத்தில் மோடி வழிபாடு

இலங்கைக்கு இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று அனுராதபுரத்திற்கு சென்றார். காலை அங்கு விஜயம் செய்த அவர், ஸ்ரீமாஹா போதி, றுவன்வெலிசாய ஆகிய பகுதிகளுக்கு சென்று மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார். இதன்போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கிய அமைச்சர்களும் உடனிருந்தனர். அத்துடன் தற்பொழுது இந்தியப் பிரதமர் மோடி...

எனது வீட்டை இடித்து விட்டனர், கண்ணீருடன் அந்தோனிப்பிள்ளை ஜெனிட்டா

ஆறுமாத காலப்பகுதிக்கு முன்னர் சேதமின்றி இருந்த வீட்டை தற்போது இடித்து அழித்து மண்மேடாக்கி விட்டனர் என வீட்டின் உரிமையாளரான அந்தோனிப்பிள்ளை ஜெனிட்டா கண்ணீருடன் தெரிவித்தார். உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 272 குடும்பங்கள் தமது காணிகளை வெள்ளிக்கிழமை (13) அங்கு சென்று அடையாளப்படுத்தினர். தனது...

வடமாகாணத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

வடமாகாண மக்களுடையே ஏற்பட்ட வாழ்க்கை முறை மாற்றத்தால் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிரேஸ்ட வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா, வெள்ளிக்கிழமை(13) தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கத்தினரால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை(23) நடைபெற்றபோது, அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், கடந்த காலங்களில்...

மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்காத பிரதம செயலாளர்

வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதனுடைய வாகனத்தில் 'பிரதம செயலாளர்' என்ற வாசகம் சிங்கள மொழியில் மாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தும் போது, மூன்று மொழிகளிலும் பெயர் பலகை வைக்கவேண்டும் என்பது கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வாழ்வதால் வடமாகாண சபையின் கீழுள்ள திணைக்களங்களின் பலகைகள் மற்றும் வாகனங்களின் பெயர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்...

ஆலயங்களை காணவில்லை

வளலாய் பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் அமைந்திருந்த இந்து ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் என 10க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாக தங்கள் காணிகளை பார்வையிடச் சென்ற மக்கள் தெரிவித்தனர். உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 272 குடும்பங்கள் தமது காணிகளை...

யாழ். நகரில் கவனயீர்ப்பு போராட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகிறார். இந்தப் பயணத்தின்போது அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழ் நகரில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் என்பன இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்திவருகின்றன. இந்திய இழுவைப்படகுகளால் வடபகுதி மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அந்த முறையைத் தடுக்கக் கோரியும், இந்திய -...

யாழ்ப்பாண பொலிஸ்நிலையத்தின் முக்கிய அறிவித்தல்

14.03.2015 காலை 6.00 தொடக்கம் மாலை 4.00 மணிவரை துவிச்சக்கர வண்டிகளையோ மோட்டார் சைக்கிள்களையோ வேறு ஏதாவது வாகனங்களையோ உங்கள் வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் முன்னால் நிறுத்திவைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். குறிப்பு: இதனை கருத்தில் கொள்ளாது நிறுத்திவைக்கப்படும் வாகனங்கள் பெரிய வாகனத்தில் ஏற்றிச்செல்லப்படும். அவ்வாறு ஏற்றும் போது வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல....

இன்று மதியம் யாழ்ப்பாணம் வருகிறார் இந்தியப் பிரதமர்!

இன்று சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு யாழ்ப்பணத்துக்கு வரும் இந்தியப் பிரதமர் மோடியை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்பார். பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துப் பேசுவார். இதன் பின்னர் சுமார் 90 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் இந்திய கலாசரா மையத்துக்கு...

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள் இடமாற்றம்!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச அதிபர்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர். இந்த அறிவித்தலை நேற்று வெள்ளிக்கிழமை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்தது. இவர்கள் மூவரும் இடமாற்றம் பெற்ற மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை தங்கள் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய இடமாற்றத்தின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க...

மோடி-மஹிந்த இன்று சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மோடியை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார் -

முருகேசு பகீரதி விடுதலை: வெளிநாடு செல்லத் தடை!

கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கடற்படை தலைவி என கருதப்படும் முருகேசு பகீரதி கொழும்பு நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நோக்கிச் செல்லவிருந்த பகீரதி தனது எட்டு வயது மகளுடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஆனால் அவரை பிணையில்...

பொறுமையாக இருக்கவும் – கூட்டமைப்புக்கு மோடி ஆலோசனை!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று மாலை கொழும்பு தாஜ் ஹோட்டலில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்....

இந்தியாவுக்கு வரும் இலங்கையர்களுக்கு உடனடி விசா

இந்தியாவுக்கு வருகின்ற இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு உடனடி விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14ஆம் திகதி முதல் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு...

25 வருடங்களின் பின்னர் சொந்த மண்ணை பார்வையிட்டனர் வளலாய் மக்கள்!

உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்திருந்த வலி கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் கிராமத்தை 25 வருடங்களுக்கு பின்னர் பர்வையிட்டனர் அந்த கிராம மக்கள். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஹரீம் பீரிஸ் தலைமையில நடைபெற்ற கூட்டத்தில எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஏற்ப இந்தப் பகுதி முதற்கட்டமாக விடப்பட்டுள்ளது....

13ஆவது திருத்தத்தில் இலங்கை பக்கமே இந்தியா நிற்கும் ரூபாவின் பெறுமதியை பலப்படுத்தவும் உதவி

இலங்கையின் புதிய சமாதான செயற்பாடுகள், இலங்கை தமிழர்களுக்கான சம அந்தஸ்து, 13ஆவது திருத்தம் மற்றும் அதனைவிடவும் மேலான விடங்களுக்காக இந்தியா, இலங்கையின் பக்கமே நிற்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்பில்...

மஹாபோதி சங்கத்துக்கு மோடி விஜயம்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைகக்கு வருகைதந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மருதானையில் உள்ள மஹாபோதி சங்கத்துக்கு விஜயம் செய்தார்.
Loading posts...

All posts loaded

No more posts