Ad Widget

கோத்தா கேட்டதற்கிணங்கி கால அவகாசம் வழங்கியது ஊழல் விசாரணை ஆணைக்குழு!

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்ந்து விளக்கமளிப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சு செயலர் கோத்தாபய ராஜபக்‌ஷ கோரியதற்கிணங்க அவருக்கு 90 நாள்கள் கால அவகாசம் வழங்கியது இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை முன்னிலையாகினார். ஆணைக்குழு அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டது. இதன்போது ஞாபகத்தில் இல்லாத தகவல்களை தாங்கள் கேட்பதால் அவற்றை ஆராய்ந்து விளக்கமளிப்பதற்கு தனக்கு 90 நாள்கள் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று ஆணைக்குழு அதிகாரிகளிடம் கோத்தாபய கேட்டுக்கொண்டார்.

அதற்கு இணங்கிய ஆணைக்குழுவினர் குறித்த கால அவகாசத்தை வழங்கினர் என்று தெரிவிக்கப்பட்டது.

அவன்ட்கார்ட், லக்ன லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கோத்தாபயவிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும், நிதி மோசடிகளில் கோத்தாபய ஈடுபட்டார் என்றும் ஆளும் கட்சி குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கோத்தாபயவை விசாரிக்க கூடாது என்று கோருவோரால் பெரும் ஆர்ப்பாட்டமும் இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்பாக நடத்தப்பட்டது. இதனால் இன்று காலை அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகத்திலிருந்து கோத்தாபய வெளியேறிச் சென்றடையடுத்து ஆர்ப்பாட்டங்காரர்கள் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தை நோக்கியும் வெலிக்கடைச் சிறைச்சாலை நோக்கியும் சென்றனர்.

Related Posts