Ad Widget

உணவகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு: இருவர் காயம்

உணவு உண்பவர்கள் போன்று சென்ற சிலர் மாற்றுத்திறனாளி ஒருவர் உட்பட இரு பணியாளர்களை கடுமையாகத் தாக்கியதுடன் வாளால் வெட்டியும் காயப்படுத்தியுள்ளனர்.

சாவகச்சேரியில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் முல்லைத்தீவின் மல்லாவியைச் சேர்ந்த மருது லோஜன் (வயது 28), மாற்றுத்திறனாளியான ரஞ்சித் (வயது 37) ஆகியோர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

முன்பு இருந்த விரோதம் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரைக் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களையும் தேடிவருவதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts