தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினூடாக சுமார் ஒரு மில்லியன் வரையான வீட்டு சுற்றுச்சூழலை சோதனைக்கு உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொலிஸார், இராணுவத்தினர், சமூக சேவை அமைப்புகள் மற்றும் சுகாதார...

சந்திரிக்காவுக்கு சந்தர்ப்பம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்காக ஆயத்தமாகிக் கொண்டு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தககவல் வெளியிட்டுள்ளது. அது தொடர்பில் களுத்துறை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்னசிறி விக்கிரம நாயக்க இராஜினாமா செய்வதற்கு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் இதற்கு முன்னர் நீதிமன்ற தீர்ப்பிற்கமைய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் நாடாளுமன்ற...
Ad Widget

தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்; நுண்கலைப்பீட மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது

யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தைச் சேர்ந்த சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள் இன்று காலை மூன்றாவது தடவையாக வகுப்புப் பகிஷ்கரிப்பு ஒன்றினை மேற்கொண்டனர். யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தைச் சேர்ந்த சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள் மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து கடந்த 16 ஆம் திகதி வகுப்புப் பகிஷ்கரிப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். எனினும் அவர்களது கோரிக்கைக்கு பதில் கிடைக்காத போது...

முதலமைச்சர் விக்னேஸ்வரன் சின்னப்பிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றார் – சுமந்திரன்

அண்மையில் கனடா சென்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் , முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் சிறுபிள்ளைத்தனமாக கருத்து மோதிக்கொள்வதாக கூறினார். அத்துடன் தான் வருகின்ற தேர்தலில் யாழ்மாவட்டத்தில்போட்டியிடப்போவதாகவும் தோல்வியடைந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாகவும் தெரிவித்தார் அத்துடன் முதலமைச்சர் கொண்டுவந்த இனப்படுகொலை தீர்மானம் தனக்கோ சம்பந்தனுக்கோ தெரியாது...

சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் நச்சு மாசுகள் இல்லை – எம்ரிடி வோல்கர்ஸ் பிஎல்சி

யாழ் குடாநாட்டின், சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் ஆபத்தான நச்சு மாசுகள் இல்லை என்று அந்தப் பிரதேசத்தின் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக ஆய்வு நடத்திய நிபுணர் குழு தெரிவித்திருக்கின்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் த.ஜெயசிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் கு.வேலாயுதமூர்த்தி, விவசாய பீடத்தைச் சேர்ந்த டாக்டர்...

சமூக முன்னேற்றத்திற்காக இளைய சமூகம் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் – டக்ளஸ்

மனோபலமும் உடல் உழைப்பும் கொண்டு செயற்படும் சமூகத்தினால் மட்டுமே பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் முன்னேற்றம் காண முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈ.பி.டி.பியின் தலைமை அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த இளைஞர் யுவதிகள் மத்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு மனித சமூகம்...

வடக்கு விவசாய அமைச்சில் 61 பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

வடமாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் அமைய அடிப்படையில் பணியாற்றிய 61 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு நிரந்தர...

வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிலவும் நீர் பற்றாக்குறைய தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார்!

வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிலவும் நீர் பற்றாக்குறைய தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க கட்டார் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆராய அந்நாட்டு அமைச்சு பிரதிநிதிகள் விரைவில் இலங்கை வரவுள்ளனர் என நேற்று (24) இலங்கைக்கு விஜயம் செய்த கட்டார் மன்னர் ஷீக் தம்மி பின் ஹாமட் அல் தானி தெரிவித்துள்ளார். நேற்று ஜனாதிபதி காரியாலயத்தில்...

நாடாளுமன்ற விதிகளே எதிர்க்கட்சித் தலைவரைத் தீர்மானிக்கும்! பதவியை ஏற்க அழைப்புக் கிடைத்தால் பரிசீலிப்போம்!!

"நாடாளுமன்ற விதிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பதவியை நாம் ஏற்பதா, இல்லையா என எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய...

நிரந்தர நியமனம் கோரி தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக புதன்கிழமை(25) ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 தொண்டர் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கருத்துக்கூறுகையில், தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களுக்கான நியமனம் கடந்த 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அ ந்த நியமனத்தின் போது, 52...

பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு வருகை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(27) யாழ்ப்பாணத்துக்கு விஜயம்செய்யவுள்ளதுடன் பல்வேறு நிகழவுகளிலும் கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர், முதலில் யாழ்.நாகவிகாரைக்கு செல்லவுள்ளதுடன் பின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள, கர்ப்பிணிகளுக்கு 2,000 ரூபாய் வழங்கும் நிகழ்விலும் கலந்துகொள்வார். அத்துடன் யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட, பிரதேச செயலாளர்களுடன்...

நேர்மையே சேவைக்கு உரித்தானது – புதிய யாழ். மாவட்டச் செயலாளர்

மக்களுக்கான சேவையை நேர்மையான வழியில் செய்வதே சிறந்தது என யாழ்.மாவட்டச் செயலராக இன்று புதன்கிழமை (25) கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலாளராக இதுவரை காலமும் கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சி மாவட்டத்துக்கு மாற்றலாகி செல்வதையடுத்த, இதுவரை காலமும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகராக கடமையாற்றிய நாகலிங்கம் வேதநாயகன் யாழ். மாவட்டச் செயலாளராக...

கெஹெலிய, ஹந்துன்நெத்திக்கு அழைப்பாணை

2011ஆம் ஆண்டு காணாமற்போன முன்னணி சோஷலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை (25) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், இவ்விசாரணையில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு யாழ். நீதவான் பொ.சிவகுமார், நாடாளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டார். இதேவேளை,...

லலித், குகன் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

கைது செய்யப்பட்டு காணாமற்போன லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி முன்னிலை சோஷலிசக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று யாழ். நகரில் இன்று புதன்கிழமை (25) நடத்தப்பட்டது. 'தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?', 'லலித், குகன் ஆகியோரை உடன் விடுதலை செய்', போன்ற வாசகங்கள் ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். லலித்,...

மீனவர் விவகாரம்: 7அம்ச கோரிக்கைகள் குறித்து மே முடிவு

இலங்கை- தமிழக மீனவ பிரதிநிதிகளிடையே சென்னையில் நடந்த 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் முன்வைத்த 7 கோரிக்கைகள் குறித்து மே மாதத்தில் முடிவை அறிவிப்பதாக இலங்கை மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையேயான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை ஆணையர்...

பசிலை வரவழைக்க நீதிமன்றத்தை நாடிய பொலிஸார்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை இலங்கைக்கு வரவழைப்பதற்கு, நீதிமன்ற உத்தரவை நாடியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். திவிநெகும திணைக்களத்தின் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே, அவரை இலங்கைக்கு வரவழைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதன் பின்னர் முன்னாள் அமைச்சர்...

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்துக்கு மீண்டும் தடை

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பது, ஏப்ரல் 02ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு பயணிப்பது, மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் ஏற்கெனவே தெரிவித்தனர். எனினும் இத்திட்டம்...

சாதாரண பயணிகள் விமானத்தில் சீனா சென்றார் ஜனாதிபதி மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவிற்கு சென்றுள்ளனர். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த பயணத்தில் இந்தியா சென்றது போன்று இம்முறையும் பயணிகள் விமானத்தில் சீனா நோக்கிச் சென்றுள்ளார். யு.எல்.868 என்ற சாதாரண பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று (25) பகல் 1.30 அளவில் சீனாவின் தலைநகர் பீஜிங்...

ராஜித சொல்லும் அளவு என்னிடம் வாகனங்கள் இல்லை – மஹிந்த

தன்னிடம் 5 வாகனங்களே உள்ளதாகவும் ஆனால் அதற்கு மேல் வாகனங்கள் வைத்திருப்பதாக பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 3 மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆறு வாகனங்களும் 213 பொலிஸ், இராணுவ வீரர்களும் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு நீதிமன்ற தீர்ப்பு படி குறைந்த வாகனமும்...

19வது திருத்தத்தை பாராளுமன்றில் சமர்பித்தார் ரணில்!

இலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்யும் முகமாக 19வது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூல ஆவணம் இன்று பிற்பகல் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த 19வது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூல ஆவணம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு உள்ள அதிகாரங்களை குறைத்தல், அமைச்சரவை-பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரம் அளித்தல், சுயாதீன...
Loading posts...

All posts loaded

No more posts