- Friday
- April 19th, 2024
பாப்பரசரின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு நாளை மறுதினம் 14 ஆம் திகதி அரச வங்கி பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 14 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெறும் பிரதான தேவஆராதனையை முன்னிட்டு அன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசால் குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கி புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக ஆட்சியில் இருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து. கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து...
யாழ்ப்பாணம் மற்றும் வடக்கில் எந்தவொரு அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என, தான் மகாநாயக்க தேரரிடம் தெரியப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நேற்று கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போது அந்தப் பகுதியில் அமைதி நிலவுவதாகவும் இதுகுறித்து காலை யாழ்ப்பாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்விலும் மகிந்த தரப்பில் இருந்து பலர் மைத்திரிபாலவுக்கு ஆதரவாக கலந்துகொண்டனர் என்று தெரியவருகிறது.
வடக்கு வாழ் மக்கள் யாழ்தேவி ரயிலையும் ரயில் பாதையையும் அமைத்துத் தருமாறு கோரவில்லை எனவும், அவர்கள் அரசியல் அதிகாரத்தை கோரி நின்றதாகவும் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரவித்துள்ளார். கடந்த 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியைத் தழுவியமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மக்களுக்கு...
புனித பாப்பரசர் பிரான்ஸிஸின் இலங்கைக்கான விஜயத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (13) முதல் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்திலுள்ள அனைத்து சாலைகளிலிருந்தும் மடுவுக்கு செல்லும் பஸ் சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸர் திங்கட்கிழமை (12) தெரிவித்தார். இலங்கைக்கு செவ்வாய்க்கிழமை (13) வருகை தரும் புனித பாப்பரசர் பிரான்ஸிஸ், புதன்கிழமை (14)...
அமைச்சுப் பதவி எதுவும் தேவையில்லை, வெளியிலிருந்தே தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். - இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார் என அறிய வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்துப் பேசியபோதே சம்பந்தன் அவருக்கு இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருபவை வருமாறு:- தமிழ்த்...
வடமராட்சி, நெல்லியடி சந்தியில் அமைந்துள்ள தேசிய லொத்தர் விற்பனை கடை ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இனம்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். இதன்காரணமாக, கடையிலிருந்த லொத்தர்கள், இதர பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்ததுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நெல்லியடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் - நெல்லியடி வழித்தட சேவையில் ஈடுபடுகின்ற தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதிகள் இருவருக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்ற கைகலப்பில், பேருந்து சாரதி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். அம்பன் குடத்தனையை சேர்ந்த சுப்பிரமணியம் வசந்தகுகன் என்பவரே படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து ஒரே...
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று முதன்முதலாக சந்திக்கவுள்ளார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...
புதிய அரசின் அரசியல் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றில் புதிய அரசின் நடவடிக்கைகளை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாக வெளியான தகவல்களை அடுத்து, இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின்...
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் (வயது 70) சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் (வயது 70) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் இன்று திங்கட்கிழமை உரையாற்றவிருக்கின்றார். அவர், தலைமையில் சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் கொழும்பில்...
நிறுத்திவைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் அதைச் செலுத்திவந்தவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.மற்றையவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணியளவில் தெல்லிப்பழை, ஆனைக்குட்டி மதவடிப் பகுதியில் இடம்பெற்றது. சம்பவத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து திருமண நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த காரைநகரைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான நவக்குமார் நவரஞ்சன் (வயது -...
பாப்பரசர் வருகையை முன்னிட்டு நாளை 13ஆம் திகதி, போக்குவரத்து சபையினர் விசேட போக்குவரத்து நடவடிக்கைகளை ஒழுங்காக மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். பாப்பரசர் வருகையை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதில் விசேட போக்குவரத்து சேவைகளை தனியார் போக்குவரத்து சேவைகள், இலங்கை போக்குவரத்து...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய கற்கை பீடங்கள், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன 600 மில்லியன் ரூபாய் செலவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்கப்படவுள்ளதாக இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சற் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, சனிக்கிழமை (10) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2012ஆம் ஆண்டு இந்த கற்கை பீடங்களை அமைப்பதற்காக வேண்டுகோள்...
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, பிரதம நீதியரசராக இன்று திங்கட்கிழமை மீண்டும் பதவியேற்றுக்கொள்ள இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கைக்கு நாளை செவ்வாயக்கிழமை 13ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள புனித பாப்பரசர் பிரான்ஸிஸின் விஜயத்தையொட்டி விசேட போக்குவரத்து ஒழுங்குகள்; மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில பாதைகள் முற்றதாக மூடப்படவுள்ளதுடன் போக்குவரத்துக்காக அதிவேக நெடுஞ்சாலையை இந்த இரண்டுநாட்களுக்கு கட்டணமின்றி பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகபேச்சாளரும் சிரேஷ்ட் பொலிஷ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(11) நடைபெற்ற...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவை சுற்றியிருந்த எருமை மாட்டுக் கூட்டமே அவரை இல்லாமல் செய்தது என பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சுற்றியிருந்தது போன்று எருமை மாட்டுக் கூட்டமொன்றை அமைச்சர்களாக, அதிகாரிகளாக நியமித்துக் கொள்ள வேண்டாம் என புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் கோருகின்றோம். தேர்தலில் அடைந்த வெற்றிக்காக அவருக்கு எமது...
சுதந்திரக்கட்சிக்கு கட்சி தாவிய அம்பாறை மாவட்ட த.தே.கூ எம்பி பியசேன சனாதிபதித்தேர்தலுக்கு முதல் நாள் முன்னால் த.தே.கூ எம்பி சந்திரகாந்தனிடம் அடைக்கலம் கோரியதாக சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தனது வீட்டில் கூடியிருந்த இளைஞர்களும், ஆதரவாளர்களும் முன்னிலையில் மன்னிப்பும், அடைக்கலமும் கோரி தனது ஆதரவாளர்களிடமிருந்து தேர்தல் முடிவுகளின் பின் தன்னை பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார். இருப்பினும் தான் அவரை பண்பாட்டுக்கமைவாக உபசரித்து...
யாழ் குடாநாட்டில் நிலவும் சூழல் தொடர்பில் பொய் பிரச்சாரங்களை வௌியிடுபவர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார தெரிவித்துள்ளார். யாழில் எந்தவொரு வகையிலும் வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் யாழ் குடாநாட்டில் உயரிய பாதுகாப்பை வழங்கியுள்ளதாகவும் ரவி வைத்தியலங்கார...
Loading posts...
All posts loaded
No more posts