Ad Widget

மாலையில் இடிமுழக்கத்துடனான மழைக்கு சாத்தியம்?

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இன்று (18) மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் இம் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் திருகோணமலை பொத்துவில் வழியாக மட்டக்களப்பு புத்தளம் கொழும்பு முதலான கடலோரங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் நிலவும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பலத்த காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்கும் படி வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 34 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு மிதமான காலநிலை காணப்படலாம். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 31 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம் – மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் மிதமான காலநிலை காணப்படும்.

மட்டக்களப்பில் ஆகக்கூடுதலான வெப்பநிலையாக 32 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை சிறிதளவிலான மழைக்கு சாத்தியம் காணப்படும். கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 32 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு காலையில் பனியுடன் கூடிய காலநிலை காணப்பட்டு பின்னர் மிதமான காலநிலை காணப்படலாம்.

கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் ஆகக்கூடிய வெப்பநிலையாக இரத்தினபுரி மாவட்டத்தில் 34.3 செல்சியஸ்பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 13.5 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.

பிபில பிரதேசத்தில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சியாக 80.8 மில்லிமீற்றர் பதியப்பட்டுள்ளது.

Related Posts