மண்எண்ணெய் அருந்திய குழுந்தை பரிதாபச் சாவு

வல்வெட்டித் துறையைச் சேர்ந்த விஜிதரன் கனிஸ்ரா என்ற ஒன் றரை வயதுக் குழந்தையே யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தது. வீட்டில் தாயார் விளக்குக்கு மண் எண்ணெய் விடும் பொழுது அருகே இருந்த குழந்தை, தாயார் மற்றைய விளக்கை எடுத்து வரச் சென்றபோது போத்தலில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து அருந்தி விட்டது. திரும்பி வந்த தாயார் குழந்தை...

இரகசிய முகாம் தொடர்பான சாட்சியங்கள் உள்ளன! – சுரேஷ்

இரகசிய முகாம் தொடர்பான சாட்சியங்கள் உண்டு சாட்சியங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டல் அவற்றை முற்படுத்த தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடத்தப்பட்டவர்கள், காணாமல்போனவர்களை தடுத்துவைக்கும் இரகசிய முகாம்கள் தொடர்பில் பாராளுமன்றில் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு உரிய விசாரணைகள் நடத்தப்படாமல் அவ்வாறான இரகசிய முகாம்களே...
Ad Widget

மன்னார் எலும்புக் கூடுகள் இருந்த இடத்தில் தோண்ட உத்தரவு

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் காணப்பட்டிருந்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பிரதேசத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பகுதியில் 80க்கும் அதிகமான மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதன் பின்னர் அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு, கண்டெடுக்கப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் தொடர்பான...

வடக்கில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் முதலமைச்சரின் கருத்துக்கிணங்கவே இடம்பெறுகின்றன – விஜயகலா

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தும் முதலமைச்சரின் கருத்து பெறப்பட்டு அதற்கிணங்கவே இடம்பெறுவதாக, மகளிர் விவகார பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சாலைகளுக்கான பேருந்து வழங்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை(15) யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,...

எமது மகளைக் கடத்தியது ராஜித்தவின் மகனே! பெற்றோர் குற்றச்சாட்டு

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் இளைய மகனால், தனது மகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக, குறித்த பெண்ணின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ராஜித்த சேனாரத்னவின் மகனான எக்சத் சேனாரத்ன தனது மகளை வாகனம் ஒன்றில் வந்து கடத்திச் சென்றதாக அவரது தந்தை...

சுமந்திரனுடன் தமிழ்மாறனும் யாழ். தேர்தல் களத்தில் குதிப்பு!

கடந்த தடவை பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமனம் பெற்ற எம்.ஏ.சுமந்திரன் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து களமிறங்க இருக்கின்றார். அதற்கான முன்னேற்பாடு, முஸ்தீபுகளில் அவர் ஈடுபட்டு வருகின்றார். இதேவேளை, சட்டத்துறை விடயங்களில் அதிக பரிச்சயம் மிக்கவரும் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளருமான...

யாழ்.நுண்கலைபீட மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் சித்திரமும் வடிவமைத்தலும் கற்கை மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி இன்று திங்கட்கிழமை மருதனார்மடத்தில் உள்ள நுண்கலைப் பீடத்தில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கடந்த காலத்தில் தமக்கான பரீட்சைகள் சீராக நடை பெறவில்லையெனவும் ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும் நுண்கலைப் பீட்த்தின் சித்திரமும் வடிவமைப்பும் கற்கைக்கான பரீட்சைகள் நடத்தப்படவில்லை...

வெளிநாட்டு விசாரணை நாட்டுக்கு அபகீர்த்தி – சந்திரிகா

இலங்கையில் 26 வருடங்களாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரிநிற்பதை இலங்கையில் வாழ்கின்ற சகலரும் எதிர்க்கின்றனர். அந்த கோரிக்கை இலங்கைக்கு அபகீர்த்தியானதாகும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். லண்டனிலிருந்து வெளிவரும் ஐ.பி.டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர், மேலும்...

இணுவில் பகுதியில் விபத்து இருவர் படுகாயம்

கே.கே.எஸ் வீதி இணுவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிந்து தெல்லிப்பழை நோக்கி சென்றுகொண்டிருந்த ஹயஸ் வானும் தெல்லிப்பழையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மயிலணியைச் சேர்ந்தவர்களான குணா மற்றும் பிரபா ஆகிய இருவருமே இவ்வாறு...

19ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி: வர்த்தமானியும் வெளியானது

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் அமைப்புக்கு திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதுடன் விசேட வர்த்தமானியும் வெளியானது. இந்த திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டமூலம் விசேட சட்டமூலமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் ஞாயிறன்று அவசரமாகக் கூடியிருந்த விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே...

ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏபரல் முதல் வாரத்தில்!

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்து முடிந்த ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மழை வெள்ளத்தால் விடைத்தாள்களை திருத்தும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. எனினும் கடந்த வருடம் போன்று இம்முறையும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரானார் ஜனாதிபதி மைத்திரி!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராகத் தெரிவானார். முன்னாள் காணி அமைச்சரான ஜானக பண்டார தென்னக்கோன் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்....

அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு அதிகரிப்பு

அரியாலை பகுதிகளில் சட்டவிரோதமாக மண் அகழ்வோரின் அட்டகாசம் தற்போது அதிகரித்து காணப்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அரியாலை நாவலடி கட்டட சந்தியில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் வீதியில், கடற்கரைக்கு அருகிலுள்ள தனியார் காணிகளில் இவ்வாறான சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவித்தனர். இது தொடர்பில் மக்கள் மேலும் தெரிவிக்கையில், இரவு வேளைகளில் உழவு...

சரியான நிர்வாகம் வேண்டும் – சுரேஸ்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா அல்லது 13ஐ தாண்டி செல்வார்களா என்பதைவிட, நிர்வாகங்கள் சரியாக இயங்கவேண்டும். ஊழல் அற்ற சேவையாக இருக்கவேண்டும். இது போக்குவரத்துத் துறையிலும் இடம்பெற வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்திலுள்ள சாலைகளுக்கு பேரூந்துகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15)...

தமிழர்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர் – அத்துரலிய

தமிழ் மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர். பயங்கரவாதமானது எம் இரு சமுதாயத்தினரையும் அழிவை நோக்கி இட்டுச் சென்றதாலேயே அதனை தோல்வியடையச் செய்வதற்கு நாம் முயற்சித்தோம். பௌத்த பிக்குமார் என்ற வகையில் எம் மனதில் ஒரு காலமும் தமிழருக்கெதிரான மனோபலம் இருந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்...

தர்மம் வழங்கிய முதலமைச்சர்

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பெண்ணொருவருக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தர்மம் வழங்கினார். வடமாகாணத்திலுள்ள சாலைகளுக்கு பஸ்கள் வழங்கும் நிகழ்வு யாழ். மத்திய பஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட முதலமைச்சர், பஸ்களை சாலை முகாமையாளர்களிடம் கையளித்தார். நிகழ்வு முடிவடைந்தததும், முதலமைச்சர் தனது வாகனத்தில் ஏறி புறப்பட்டத்...

யாழ்.மாவட்ட அரச அதிபராகிறார் வேதநாயகன்

யாழ்.மாவட்ட அரச அதிபராக இடமாற்றம் பெற்றுள்ள, முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் நா.வேதநாயகன், யாழ்.மாவட்டத்தில் தனது கடமைகளை எதிர்வரும் 23ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதற்குப் பதிலாக யாழ்.மாவட்ட அரச அதிபராக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டிருந்தார். கிளிநொச்சி...

வடக்கு மாகாண மக்கள் தங்களுடைய தனித்துவத்தை உலகறியச்செய்ய வேண்டும் – வடக்கு முதல்வர்

வடக்கு மாகாண மக்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற நன்மைகளை நல்ல முறையில் பராமரித்து சேவையினை ஆற்றுவார்கள் என்ற செய்தியை உலகத்திற்கு எடுத்துக் காட்டும் வகையில் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபையின் வடக்குமாகாணத்திலுள்ள யாழ். மாவட்ட சாலைகளுக்கான புதிய பேருந்துகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று யாழ். மத்திய...

தமிழக மக்கள் உணர்ச்சிவசப்படுவது இலங்கை தமிழர்களுக்கு பாதகமாகவும் முடியலாம்

இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் உணர்ச்சிகரமாகச் செயற்படுகின்ற தமிழக மக்கள், அவதானத்துடன் செயற்படுவது பயனுள்ளதாக இருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரச்சினை பற்றிய முடிவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், அங்கு என்ன நடக்கின்றது, என்பதைக் கவனத்திற் கொண்டு, ஏதேனும் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் தங்களுடன் பேசுவது பயனுள்ளதாக இருக்கும் என்று...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. இலங்கையில் மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரான டி எம் சுவாமிநாதன் இதனை உறுதிப்படுத்தினார். முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: இலங்கையயில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட...
Loading posts...

All posts loaded

No more posts