மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு உதவ அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வர வேண்டும்!

ஏற்கனவே மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ள பகுதிகளில் இன்னும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் இருக்கின்றன. அதே நேரம், அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவ முன்வர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும்...

ரக்னா லங்கா உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிப்பு

லங்கா லொஜிஸ்டிக் என்ட் டெக்னொலஜி லிமிடட், ரக்னா பாதுகாப்பு லிமிடட், இராணுவ சேவை அதிகார சபை மற்றும் தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களும் பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து உரியவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு, 01.லங்கா லொஜிஸ்டிக் என்ட் டெக்னொலஜி லிமிடட் -...
Ad Widget

விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக பசில் தெரிவிப்பு

ராஜபக்‌ஷ குடும்பத்தினர் ஒரு போதும் பண மோசடியில் ஈடுபட்டதில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நேற்று நாடு திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார். அமெரிக்காவில் இருந்து டுபாய் வழியாக இலங்கையை வந்தடைந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பசில் ராஜபக்‌ஷ இவ்வாறு குறிப்பிட்டார். அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முன்னுரிமை அளித்து...

முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தை உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்க அழைப்பு!

மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை ஒரு வார காலம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு புலம்பெயர் தமிழர்களையும், தாய்த்தமிழர்களையும் முன்வருமாறு வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மே...

தாமரை கோபுரம் இந்தியாவை கண்காணிக்கும் திட்டம் அல்ல – சீனா மறுப்பு

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான மின்னணு கண்காணிப்பு வசதி அடங்குவதாக வெளியான செய்தியை சீனா நிராகரித்துள்ளது. இது ஒரு அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என தாமரை கோபுரத்தின் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான கருத்து இலங்கை அரசாங்கத்தை அவமானப்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் புதுடில்லியை மையமாகக் கொண்டு இயங்கும் பாஸ்கர் ராய்...

“தமிழ் எழுத்துக்கள் நேற்று – இன்று – நாளை” நூலின் அறிமுகவிழா

தமிழறிஞரும் மூத்த ஆசிரியருமான ம.கங்காதரம் அவர்களின் “தமிழ் எழுத்துக்கள் நேற்று - இன்று – நாளை” நூலின் அறிமுகவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 19.04.2015 அன்று நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் த.சிறீஸ்கந்தராசா வரவேற்பரை நிகழ்த்துகிறார். முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்த யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நா.சண்முகலிங்கன் அவர்கள் நூலாசிரியர் ம.கங்காதரம்...

வடக்கிலிருந்து இந்தியா சென்று கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களை பதிவு செய்யக் கோருகிறது தூதரகம்

வடக்கு மாகாணத்திலிருந்து இந்தியா சென்று பட்ட மேற்படிப்புக்கள், கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்தவர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது யாழ். இந்தியத் துணைத்தூதரகம். இதுகுறித்து தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: வடமாகாணத்திலிருந்து சென்று இந்தியாவில் இந்திரவியல், கட்டடவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பாரம்பரிய கலைகள் உட்பட அனைத்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புகளை அல்லது...

வீதியிலுள்ள மரண கிடங்கு

யாழ்.நாவலர் வீதியில் புகையிரதக் கடவையின் அருகிலுள்ள பாரிய பள்ளத்துக்குள் நாளாந்தம் பெருமளவான வாகனங்கள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. புகையிரதப் பாதையின் கீழாக வாய்க்கால் அமைக்கும் பொருட்டு பாரிய பள்ளம் தோண்டப்பட்டது. புகையிரத பாதை அமைக்கப்பட்ட பின்னர், தோண்டப்பட்ட பள்ளம் முழுவதுமாக மூடப்படவில்லை. இதனால் வீதியின் அருகில் பாரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அதன் அருகில் செல்லும்...

பஸில் ராஜபக்ஷ வந்தடைந்தார்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ, சற்று நேரத்துக்கு முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில் இருமருங்குகளிலும் காத்திருக்கின்றனர்.

யாழில் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு

யாழ்.மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புள்ளி விபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சந்திரசிங்க மற்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் ஆகியோர் இணைந்து புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தனர். யாழ்.மாவட்ட செயலகத்தின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பிரிவு இயங்கிய கட்டடத்திலேயே புள்ளி விபரத்...

சம்பந்தன், மாவை தலைமையில் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் திருமலையில்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை தனது பிரதான மே தினக் கூட்டத்தை இணைந்த வடக்கு - கிழக்கின் தலைநகரமான திருகோணமலையில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. அதற்குரிய ஏற்பாடுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோர்...

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோருக்கு கொடுப்பனவு

வடமாகாணத்தில், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டம், வடமாகாண சுகாதார அமைச்சால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு அலுவலக தகவல் தெரிவிக்கின்றது. முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களை இரு பிரிவுகளாக பிரித்து, கழுத்துக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3000 ரூபாயும், இடுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1500 ரூபாயும் வழங்கப்படவுள்ளது. கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும்...

மீள்குடியேற்றமும் இல்லை அபிவிருத்தியும் இல்லை – சிறிதரன்

போர் முடிவுக்கு வந்த பின்னரும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றங்கள் இதுவரை பூரணப்படுத்தப்படவில்லை. போரால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான அபிவிருத்திகளும் முழு அளவில் மக்களைச் சென்றடையவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டில் இயங்கும் புலம்பெயர் மக்களின் அமைப்பான அன்னை திரேசா நற்பணி மன்றம், யாழ்ப்பாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை...

நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிப்பு

முழுமைபெறாத ஒழுங்கற்ற ஆடைகளில் நாடாளுமன்ற சபைக்குள் இரவொன்றைக் களிப்பதன் மூலம் நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிக்கப்பட்டுள்ளது. இது, நாடாளுமன்ற வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட கறையாகும் என தேசிய தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியது.

அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சம் – மஹிந்த

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சு பதவியை கொடுத்தமை இலஞ்சம் என்றால், அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சமாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஹம்பேகமுவ விஹாரையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில்...

விபத்தில் இருவர் படுகாயம்

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த விபத்து தொடர்பில் தெரிய வருவது, சீமெந்து ஏற்றிய நிலையில் வீதியில் தரித்து நின்றிருந்த பாரவூர்தி மீது பேருந்து மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பேருந்தின் சாரதியும், நடத்துநரும்...

நாடாளுமன்றம் 27 வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் எதிர்வரும் 27ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்தே நாடாளுமன்றம் 27ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை: – தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு!

விடுதலைப்புலிகளுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக இலங்கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான சுமந்திரன் கூறும்போது, எங்களுக்கு விடுதலைப்புலிகளுடனோ, அவர்களது கொள்கைகளுடனோ எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறோம். ஆனால்,...

தந்தை செல்வா நினைவுப் பேருரையை நிகழ்த்துகிறார் சந்திரிகா!

'யுத்தம் இல்லை என்பது சமாதானம் என்றாகி விடாது' என்ற தலைப்பில் கொழும்பு பம்பலப்பிட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை உரையாற்றுகிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளை வருடாந்தம் நடத்தும் தந்தை செல்வா நினைவுப் பேருரைத் தொடரில் இம்முறை அந்தப் பேருரையை மேற்படி தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிகழத்துகிறார்....

வலி வடக்கு வீதி புனரமைப்புக்கு 12 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் கீழுள்ள வீதிகளில் புனரமைப்புக்காக சபையில் இந்தாண்டு வரவு – செலவுத் திட்டத்தில் 12.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், எமது பிரதேச சபை வருமானம் குறைந்த பிரதேச சபையாக இருக்கின்றது. இருந்தும் வீதி புனரமைப்புக்காக...
Loading posts...

All posts loaded

No more posts