போலி விசாவில் இத்தாலி செல்ல முயன்ற யாழ்.இளைஞன் கைது

போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி துருக்கியிலிருந்து தரைவழியூடாக இத்தாலிக்கு செல்வதற்கு முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான இளைஞன், நாடு கடத்தப்பட்டுள்ளார்.

துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்ட அந்த இளைஞனை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

அவர் தனது செல்லுபடியான கடவுச்சீட்டை பயன்படுத்தி தமிழ்-சிங்கள புத்தாண்டு தினமான கடந்த 14ஆம் திகதி,
துருக்கிக்கு சென்றுள்ளார்.

துருக்கி விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகள் அவருடைய கடவுச்சீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது அது போலியானது என்பதை கண்டறிந்துள்ளனர். அதனையடுத்தே குறித்த இளைஞனை திருப்பியனுப்பியுள்ளனர்.

சந்தேகநபர், இந்நாட்டில் இருக்கின்ற இலங்கை பிரஜை ஒருவருக்கு மூன்று இலட்சம் ரூபாவை கொடுத்து இத்தாலிக்கு செல்வதற்கான போலியான ஆவணங்களை தயாரித்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts