- Monday
- July 21st, 2025

நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 41பேரை நேற்று வெள்ளிக்கிழமை (12) கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கை மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, திருட்டு, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுடன் தொடர்புடையோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 2014ஆம்...

தெல்லிப்பழை துர்க்காபுரம் பேரம்பல வைரவர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவும் வேள்வியும் இன்று மிகவும் பக்திப் பரவசமாக இடம்பெற்றது. அதிகாலையில் இடம்பெற்ற பொங்கல்கள் படையல்கள் மற்றும் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வேள்விக்கு கடாக்கள் பலியிடும் நிகழ்வுகள் இடம்பெற்றன. தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் கடாக்களை பரிசோதனை செய்து அனுமதி...

கிளிநொச்சி, திருநகரைச் சேர்ந்த கணேசமூர்த்தி சாந்திமலர் (வயது 48) என்ற பெண்ணை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லையென, அப்பெண்ணின் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி நகரிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது வீட்டுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் வந்தவர்களால் வழக்கு விசாரணைக்கு ஒன்றுக்கு வருமாறு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் இதுவரையில்...

பாடசாலை மாணவர்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுபடும் வாகனங்களை தரப்பரிசோதனை செய்யும் நடவடிக்கையானது யாழ். மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் திடீரென அறிவிக்கப்படாத நாட்களில் மேற்கொள்ளப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள யாழ். மாவட்ட பொறுப்பதிகாரி கோபாலபிள்ளை மதிவண்ணன் வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார். பாடசாலை மாணவர்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுபடும் வாகனங்களை தரப்பரிசோதனை செய்யும் நடவடிக்கை யாழ்.பொதுநூலகத்துக்கு வெள்ளிக்கிழமை...

மக்களுக்காக நிவாரணங்களை வழங்குகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO) மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது எதிர்காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். அதற்காக, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை உடனடியாக செயற்படுத்தும் வகையில் கொள்கை செயல்படுத்தல்...

அனைத்து மொழிகளையூம் பேசுகின்ற அனைத்து மக்களுடனும் சேர்ந்து செயலாற்றுதல் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்கு அத்திபாரமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வளங்களை அபிவிருத்தி செய்வதன்மூலம் மாத்திரம் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியாது என்றும் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பண்பும் ஒழுக்கமும் நிறைந்த பிரசைகள் நாட்டின் அபிவிருத்திக்கு அத்தியாவசிய காரணியாகும் என்றார். கொழும்பு-03, கொள்ளுப்பிட்டி...

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான அமைச்சரவையின் முடிவை நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் வரவேற்றுள்ளதுடன் இது தொடர்பிலான அறிக்கையை வெள்ளிக்கிழமை(12) வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 237ஆக அதிகரிக்கவும் அதில் 145 நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்குப் பெறும் முன்னணி முறையிலும் 55 பேரை விகிதாசார முறையிலும் 37 பேரை தேசிய பட்டியலூடாகவும் தெரிவு செய்யவும்...

"புலிகள் மீதான தடையை நீக்குதல், அரசியல் தீர்வு, உள்ளகப் பொறிமுறை முதலான விடயங்கள் குறித்து லண்டனில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு நடத்தவில்லை'' - என்று நேற்று சபையில் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெறுவது குறித்தே பேசப்பட்டது என்றும் தெரிவித்தார். மஹிந்த அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க...

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி முதல் புதிதாக சுற்றுலா நீதிமன்றம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை நீதிச் சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சுற்றுலா நீதிமன்றத்தினூடாக மாங்குளம் மற்றும் மல்லாவி ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளையும் சேர்ந்த மக்களுக்கான வழக்குகள் மாதத்தில்...

இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் வடமாகாணத்திலேயே காடுகள் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கில் காடுகளைப் பாதுகாப்பதில் விடுதலைப்புலிகளின் பங்களிப்புப் பெரிதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். வலிமேற்கு பிரதேசசபையும் உலக தரிசனம் நிறுவனமும் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றினை நேற்று முன்தினம் வியாழக்கிழமை (11.06.2015) ஏற்பாடு செய்திருந்தன. வலிமேற்கு பிரதேச சபையின் மாநாட்டு...

புலம்பெயர் நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் அமைப்புக்கள் மீதுள்ள தடைகளை நீக்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளில் சந்திப்புக்களை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் பொய்யான பிரச்சாரம் செய்துவரும் நிலையில் நாங்கள் திரைமறைவான சந்திப்புக்களை செய்து வருகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு,...

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களின் பெற்றோல் தாங்கியின்மேல் பிள்ளைகளை இருத்திக் கொண்டு பயணிப்பவர்கள் மீது பொலிஸார் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.கே.ஜெயவன்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் - எதிர்காலத்தில் போக்குவரத்து பொலிஸார் வீதி போக்குவரத்து...

யாழ். நீதிமன்றத்தின் மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 14 பேருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல, யாழ் நீதவான் பொ.சிவகுமார் இன்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டார். அத்துடன், மாணவர் ஒருவரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளில்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்திய அவரிடம் வாக்குமூலம் பெற்றுகொண்டுள்ளனர். அவரிடம் காலை 9 மணிமுதல் 1.45 வரையிலும் விசாரணை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்குனகொலபெலஸில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மெய்பாதுகாவலர் ஆயுதத்துடன் வந்த சம்பவம்...

புதிய தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் தற்போது 225 ஆக காணப்படும் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்கவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அரசியலமைப்பின் 20 ஆவது...

யாழ்.மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வான்கள், பஸ்கள், ஓட்டோக்கள் இன்று திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன. அரச செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவும் பொலிஸாரும் இணைந்து இன்று திடீர் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது நூற்றுக்கணக்காக வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போது வீதிப் போக்குவரத்தில் ஈடுபடத் தேவையான ஆவணங்கள், வாகனங்களுக்கான தகுதிகள் பரிசோதிக்கப்பட்டன. இவ்வாறு போக்குவரத்துக்கு தகுதியற்ற வாகனங்கள், தொடர்ச்சியாகச் சேவையில்...

அதிபர்கள், ஆசிரியர்களை பொறுத்தவரை அன்றாடம் மாணவர்களின் நடத்தைகளை அவர்களின் ஊடாக பெற்றார்கள், குடும்ப நிலைமைகளை அறிகின்ற வாய்ப்பு அதிகம். மாணவர்களை அவர்களின் நிலைகளை அறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துகின்ற திட்டங்கள் செயற்பாடுகளை வளர்க்க வேண்டும். இதன்மூலம் அதிகரித்து வரும் சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த பாடசாலை சமூகத்தால் முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்....

நெல்லியடி நகர்ப்பகுதியில் மதுபான நிலையம் ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அந்தோனியர் சிலையை அங்கிருந்து அகற்றுமாறு வல்வெட்டித்துறை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் பொன்னையா வியாகேசு, வியாழக்கிழமை (11) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல், அந்தோனியாரின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் மதுபான விற்பனை நிலையத்துக்கு முன்பாக இந்த...

நீண்ட காலமாக தொடர்ந்திருக்கும் ஓய்வூதிய முரண்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் காலப்போக்கில் இதுபற்றி அறிவித்தல் வெளியிடப்படும் என பொதுநிர்வாக உள்ளூராட்சி ஜனநாயக ஆட்சி அமைச்சர் கரு ஜெயசூரிய வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு கடந்த 3ஆம் திகதி கடிதம் அனுப்பியுள்ளார். நீண்ட காலமாக தொடர்ந்திருக்கும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி நிதி...

All posts loaded
No more posts