- Wednesday
- July 23rd, 2025

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வேட்பு மனு வழங்கப்படமாட்டாது. அத்துடன் தேர்தலின் பின்னரும் தேசியப்பட்டியல் மூலம் கூட எம்.பி. நியமனமும் இல்லை. - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

காரோட்டல், கணனி மேய்தல், உண்மை பேசுதல் இந்த மூன்றையும் ஆண், பெண் இரு சாராரும் படிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அன்றும் இன்றும் உண்மை பேசுதல் பொதுவாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். முரண்பாடு இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு உண்மை பேசுதல் மிக முக்கியமானதொன்றாக அமைகின்றது. முடிந்த வரையில் உண்மையைப் பேச மாணவ சமுதாயம் முன்வர...

இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே நீண்ட நாட்களாக நிலவிய பகைமையால் சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. இதையடுத்து குழு மோதல் ஒன்று ஏற்படவிருந்த நிலையில் தெல்லிப்பழைப் பொலிஸாரின் உடனடி நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டது. யாழ்ப்பாணம் மல்லாகத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து...

வட பகுதிக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன், கிணறுகளை அமைக்க, சீன நிறுவனங்கள் இரண்டு முன்வந்துள்ளன. குறித்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இதற்காக சுமார் 14,000 அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. இதன்படி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஐந்து குடிநீர் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பல பகுதிகளில் பரவிவரும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில வாரங்களில் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் மரணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இன்புளுயென்சா ´ஏ´யில் எச்1 என்1 எனப்படும் வைரஸ் காய்ச்சல் என இது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல் பரவியிருப்பதாக வவுனியா...

யாழ். நகரத்தில் குழப்பம் விளைவித்தமை, பொலிஸ் கண்காணிப்பகம் மீது தாக்கியமை, சமிக்ஞை விளக்கை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டவர்களில் 30பேருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று வியாழக்கிழமை (18) அனுமதியளித்தார். இவர்கள் மாதாந்தோறும் வரும் இறுதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்...

கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து ஒரு தொகுதி போதைப் பாக்கு கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை தரம் ஏழு மாணவர்கள் இந்த போதைப் பாக்கை எடுத்து பாடசாலை அதிபரிடம் கையளித்துள்ளார்கள். குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் உயர்தரத்தில் கல்விகற்கும், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் பாடசாலையில்...

கொக்குவிவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையே எழுந்த முரண்பாடு கத்திக்குத்தில் முடிவுற்றது. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஜீ.சீ.ஈ சாதாரண தர மாணவர் ஒருவர் முகத்தில் காயமடைந்தார். நேற்று பாடசாலையில் அதிபர், உப அதிபர் இருவரும் விடுமுறையில் இருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் 10 இல் கல்வி கற்கும்...

பிள்ளைகளுக்கு தேவையானவற்றை செய்வது பெற்றோர்களின் கடமை. பெற்றோர்கள் உரியவற்றை செய்யாமல் அரவணைப்பும் கொடுக்காமல் விடுவதால் தான் பிள்ளைகள் சமூகத்தில் குற்றச்செயல்களைச் செய்கின்றனர் என காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் 2க்கு பொறுப்பான பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பி.ஜஃவ்பர் தெரிவித்தார். பாடசாலை, தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று வரும் மாணவிகளுடன் சேஷ்டை செய்த குற்றச்சாட்டில் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 23...

சமுர்த்தி அலுவலரின் தன்னிச்சையான முடிவு காரணமாக சமுர்த்தி கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாகக்கூறி மாற்றுத்திறனாளியான பெண்ணொருவர் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனுக்கு வியாழக்கிழமை (17) மனுவொன்றை கையளித்துள்ளார். மனுவின் பிரதிகளை முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்துள்ளார். முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழைய...

பிரான்ஸின் பெரிஸ் நகரிலிருந்து 193 பயணிகளுடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று வளிமண்டலவியல் பாதிப்புக்கு உள்ளானதில், அதில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்களில் ஐவர், சிறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் நால்வர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்.564 என்ற விமானத்தில் வந்த ஊழியர்களே இவ்வாறு...

மோனோசோடியம் க்ளூட்டாமேட் எனும் எம்.எஸ்.ஜீ சுவையூட்டி, அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ள 27 ஆயிரத்து 420 தொன் நிறையுள்ள மெகீ உடனடி நூடில்ஸ்களை நெஸ்லே நிறுவனம், சீமெந்து ஆலைகளில் இட்டு அழித்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் போது, மெகீ நூடில்ஸ் உற்பத்தியில் எம்.எஸ்.ஜீ சுவையூட்டி,...

திருமண பதிவுக் கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது திருமண பதிவு கட்டணமாக அறவிடப்படும் 5,000 ரூபாயை 1,000 ரூபாயாக குறைப்பதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று வியாழக்கிழமை(18) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது திருமண பதிவு கட்டணம் குறைக்கப்பட்டமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கட்டண குறைப்பு, 2015ஆம் ஆண்டு மார்ச்...

யாழ் நகரப்பகுதிகளில் குறிப்பாக யாழ் கஸ்தூரியார் வீதி, பெருமாள் கோவில் வீதி கன்னாதிட்டி வீதி ஆகிய வீதிகளில் பயணிக்கும் பெண்களுடன் சிலர் தகாத வார்த்தைகளால் பேசி சேட்டை செய்வதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த வீதிகளால் பயணிக்கும் தனியார் கல்வி நிலைய மணவிகள், மற்றும் தொழில் புரியும் யுவதிகளளாகியோரிடம் சிலர் தகாத வார்த்தைகளால் சேட்டை...

யாழ்.கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் நால்வர் மாவா என்ற போதைப் பொருளை வைத்திருந்த குற்றசாட்டில் அவர்கள் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டனர். குறித்த சம்பவம் இன்று காலை கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, மாவா என்ற போதைப்...

வாகனங்களின் வேகத்தைக் கணிக்கும் 'ராடர்' கருவி பொலிஸ் திணைக்களத்தால் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழப்பாணத்தில் வேகமாக வாகனங்களை செலுத்துவதால் இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ராடர் கருவி இலங்கையில் பல வருடங்களுக்கு முன்னரே அறிமுகமான போதிலும் யாழ். மாவட்டத்தில் நேற்றுப் புதன்கிழமையே இது அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில்...

நெல்லியடி பகுதியில் வீதிகளில் நின்றுகொண்டு பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்றுவரும் மாணவிகளிடம் சேஷ்டை செய்த 23 இளைஞர்களைக் புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் 2க்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜஃவ்பர் தெரிவித்தார். பின்னர், கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து அவர்கள் முன்னிலையில் இளைஞர்கள்...

கரவெட்டி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பணியாளர் ஒருவர், புதன்கிழமை (17) மதியம் கோவில் சந்திப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் உதயகுமார் (வயது 30) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகினார். மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவரை, நெல்லியடி...

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கண்டித்தும் அதனை தடுக்கும் வகையிலும் பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சைக்கிள் ரோந்து சேவையை யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் ஆரம்பித்து வைத்தார். குறித்த சேவையினூடாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாகவும்,போதைப் பொருட்களை மாணவர்கள் மத்தியில் விநியோகிப்பவர்களை மறைமுகமாக கண்டுபிடிக்கவும், சட்டவிரோத மதுபான விற்பனை...

வல்லைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் சாவடைந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து வல்லை நோக்கி அதிவேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஒரத்தில் இருந்த பூச்சாடியை மோதித்...

All posts loaded
No more posts