- Sunday
- May 5th, 2024
கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று காலை உயிரிழந்துள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த பிரியந்த சிறிசேனவுக்கு உயிரிழக்கும் போது வயது 40 என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரியந்த சிறிசேன நேற்று முன்தினம் பொலனறுவையில் வைத்து கோடரி தாக்குதலுக்கு இலக்கானார். தாக்குதலினால் பிரியந்த சிறிசேனவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. பொலனறுவை...
உடனடியாக தீர்வுகாணப்பட வேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான வடக்கு மாகாண மக்களுடைய தேவைகளும் கோரிக்கைகளை இன்றைய தினம் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஈழ மக்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கையளித்தார். இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் நிலவும் அத்தியாவசியப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் யாழ்.மாவட்ட செயலகத்தில் பிரதமர் ரணில்...
யாழ்ப்பாண சென்.ஜோன் கல்லூரியில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது கல்வி இராஜாங்க அமைச்சு இவ் அனுமதியை வழங்கியுள்ளது. இந்த பாடத்திட்டத்துக்கான கட்டடத்தை பாடசாலை நிர்வாகம் தனது சொந்த பணத்தில் அமைக்கவுள்ளதுடன் அதற்கான பொருட்களையும் தனது சொந்த நிதியிலே பெறவுள்ளது. இந்த திட்டத்துக்காக 60 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படவுள்ளதாக...
கோடாரியினால் தாக்கப்பட்ட படுகாயமடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர். அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இதேவேளை, அவர் மீது கோடாரியால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 34 வயதான லக்மால், பக்கமுன பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு சரணடைந்தார்....
இளவாலை, சேந்தாங்குளம் பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோகிராம் கஞ்சா பொதிகளை வியாழக்கிழமை (26) மாலை மீட்டதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுள டீ சில்வா, வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார். கடற்கரைக்கு அருகிலுள்ள பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்படி பொதி மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட கஞ்சா பொதி...
தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்திச் செல்லும் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கத் தமிழர்கள் மூவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின் பல்லாவரம் அருகில் உள்ள பொழிச்சலூர் என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இவர்கள் பதுங்கியிருந்த சமயம் கைதுசய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதான துஸ்யந்தன், 30 வயதான லிங்கேஸ்வரன் மற்றும்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாய் திறந்தால் பொய் மட்டுமே கதைத்து மக்களை ஏமாற்றுவதாக தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையாக சாடியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,...
பொதுமக்கள் மத்தியில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட சந்திப்பு ஒன்று இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குறித்த சந்திப்பு நடைபெற்று வருகின்றது. குறித்த சந்திப்பில் மக்கள் தொடர்பாக எழும் பிரச்சினைகள் தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டு வருகின்றது. மேலும் இந்த சந்திப்பில் யாழ்.மாவட்ட...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வருகை தராமல் இருப்பது கவலையளிப்பதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா 2000 ரூபாய் பெறுமதியான போஷாக்கு பொதிகளை வழங்கும் நிகழ்வு, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு...
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது விஜயத்தின் முதல் நிகழ்வாக நாகவிகாரையில் இன்று வெள்ளிக்கிழமை காலை வழிபாடுகளில் ஈடுபட்டார். பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர், யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். நாகவிகாரையில் நடைபெற்ற வழிபாடுகளில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும் அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. இதனால், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் என்னையும் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார். யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம்...
மகன் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்லாததால் அவனை மிரட்ட முற்பட்ட தாய் ஒருவர் பரிதாபகரமாக தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் சுன்னாகம், சூராவத்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ந.சிவசோதி என்பவரே உயிரிழந்தவராவார். சிவசோதி மகனை தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். மகனோ நகருவதாகத் தெரியவில்லை. சிவசோதி தனது உடலில்...
வடக்கில் ஆயிரம் பேர் வரையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி சுமார் 600 பேர் வரையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 120 பேர் வரையில் ரத்த சுத்திகரிப்புச் செய்யப்படுகின்றனர். வாரத்தில் 2 தடவைகள் ஒவ்வொரு வருக்கும் ரத்தச் சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். தவறின் ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு நோய் தீவிரமாகிவிடும் இவ்வாறு யாழ்.போதனா...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் இன்று கலந்து கொள்ளும் நிகழ்வில் வடக்கு மாகாண சபையினர் பங்கேற்க மாட்டார்கள் என்று நம்பகரமாக தெரிய வருகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சருக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதையடுத்து வடக்கு மாகாணசபையினர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்று தெரியவருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு இன்று...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தில் குறைநிறை பிள்ளை பிறப்பை இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூபா 2000 பெறுமதியான போசாக்கு பொதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலால் படுகாயடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை பொலனறுவையில் இடம்பெற்றுள்ளது. கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட அவர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் எனவும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்...
வல்லைவெளிப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பருத்தித்துறையிலிருந்து வந்த ஓட்டோ முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது யாழ்ப்பாணத்திலிருந்த சென்ற மினிபஸ்ஸுடன் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது. ஓட்டோவில் பயணித்த ர.அஜந்தன் (வயது 13) என்பவர் உயிரிழந்தார். மு.ஜனார்த்தனன் (வயது 26) என்பவர் ஆபத்தான நிலையில்...
மாங்குளம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது;- மாங்குளம், ஐயன்குளம் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் பொலிஸார் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான இளைஞன் ஒருவனை சோதனையிட்டபோது அவரது பையில் கஞ்சா இருந்துள்ளது. இதனையடுத்து அந்த இளைஞனை கைது...
என்னையும் எனது அம்மாவையும் இணைப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக பாலேந்திரன் விபூசிகா தெரிவித்தார். மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விபூசிகா, அவரது தாயார் பாலேந்திரன் ஜெயக்குமாரியுடன் சேர்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், வியாழக்கிழமை(26) அனுமதி வழங்கியது. விடுதலையாகி நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்தபோதே விபூசிகா இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், எனது அம்மாவை...
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (27) விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை மாவட்டச் செயலகத்தில் வைத்து சந்திக்கவுள்ள பிரதமர், அவர்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகள்...
Loading posts...
All posts loaded
No more posts