Ad Widget

பயணப் பையில் யுவதியின் சடலம் – ஒருவர் கைது

பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பகுதியில் அநுராதபுரம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கிடந்த பயணப் பையினுள் இருந்து அண்மையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் யாழ் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதான யுவதி என இனங்காணப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபர் மன்னார் – கோவில்குளம் பகுதியில் வைத்து குற்றத் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

Related Posts