- Tuesday
- June 24th, 2025

வலிகாமம் வடக்கு காணிகளிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம் எனவும் அடுத்த கட்டமாக அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை (29) சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ். மாவட்ட முன்னாள் உறுப்பினர் ரவிராஜ் கொலை சந்தேகநபரான கடற்படையைச் சேர்ந்த நிலங்க சம்பத் முனசிங்க பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. சந்தேகநபரை 25 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணையிலும் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டது....

வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி கடந்த வியாழக்கிழமை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அத்துடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விடயம் குறித்துப் பேசினார் என அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். விசாரணைகள் எதுவும் செய்யாமல் அவரை...

பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் ஒருபோதும் வேட்புமனு வழங்கப்போவதில்லை என்றும் தேசியப் பட்டியல் எம்.பி. நியமனத்தை வழங்கவும் தான் தயாரில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திங்கட்கிழமை திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்களுடன் நேற்று...

இன்புளுவென்ஸா ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் நாடு பூராகவும் பரவுவதைத் தடுக்க, சுகாதார அமைச்சு போதுமான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என, அகில இலங்கை தாதிமார் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. குறித்த வைரஸ் தொடர்பில் தற்போது உலகில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளை நாட்டில் பயன்படுத்தவில்லை என, அந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்புளுவென்ஸா ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் தொற்று ஏற்படக்...

எதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டில் ஒரு நபருக்கான தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான முதலீடுகள், தொழிநுட்பங்கள் உள்ளிட்ட அணைத்து துறைகளிலும் விரிவான அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தெஹிடிவிட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் தமக்குள் வேட்பாளர்களைப் பகிர்ந்து கொள்வதில் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று அல்லது நாளை நடைபெறவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டத்தில் இழுபறியில் உள்ள யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களின் தொகுதி பங்கீடு குறித்து...

முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த சுரேஸ் தேவிகா (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தாயை கடந்த 23 ஆம் திகதியிலிருந்து காணவில்லையென அவரது கணவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (29) முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி வங்கியில் பணம் வைப்பிலிடச் சென்ற மனைவி, இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும், கடந்த 7...

வலி. வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் கீரிமலைப் பகுதிகளை மீள்குடியேற்ற இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். இவருடன் மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், சரவணபவன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கிலுள்ள சகல மாவட்டங்களிலும் மலையகத்திலும் ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) தனித்து போட்டியிடவுள்ளது. தமது கட்சியின் சின்னமான ஏர் சின்னத்தில் இவர்கள் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக, அக் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன் தெரிவித்தார். யாருக்கும் அடிபணிந்து போவது எமது நோக்கமல்ல மக்களின் விடுதலைக்காகவே எமது அரசியல்...

பனை மரங்களை நாம் கள்ளையும் வடிசாராயத்தையும் பெறுவதற்குரிய ஒரு வளமாக மாத்திரமே கருதி வருகிறோம். பல்வேறு பரிமாணங்களில் பொருளாதாரரீதியாக உதவக் கூடிய பனை மரங்களை, போதைக்கு மட்டுமே பயன்படுத்துவது தமிழ் மக்களின் பேதைமை என்று வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக் காட்டியுள்ளார். மன்னார், நானாட்டான் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின்...

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுக்கும் யாழ். மாவட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று மாவட்ட செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதற்கான செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், இது அரசியல் கூட்டம் இல்லை எனவும் அபிவிருத்தி தொடர்பிலான அலுவலக கூட்டம் என்றும் கடும் தொனியில் கூறிய யாழ். அரச அதிபர் வேதநாயகன் அங்கு செய்தி...

வலி நிவாரணி மருந்துக்களை சிலர் போதைக்காக பயன்படுத்துவதனால் வலி நிவாரணி மருந்துக்களை கட்டுப்பாட்டுடன் வழங்க வேண்டிய நிலையில் உள்ளோம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் இளவயதினரே பெரும்பாலானவர்களாக...

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை, உடுவில் ஆகிய பகுதிகளில் பெண்களுடன் சேஷ்டை, வீதியில் கூடி நின்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் நேற்று முன்தினம் சனிக்கிழமை 12 பேரை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். வாள்வெட்டு மற்றும் குழுமோதலில் ஈடுபடுபவர்கள், பொது சமாதானத்திற்குக் குழப்பம் விளைவிப்பவர்களைக் கைது செய்து பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் குருபூசை நிகழ்வு செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. ஈழத்தில் வாழும் வயதில் மூத்த சிவாச்சார்யார்களாகிய இணுவில் காயத்திரி பீடத்தினுடைய முதல்வரும் தர்மசாஸ்தா குருகுல அதிபருமாகிய சிவஸ்ரீ தா.மகாதேவக்குருக்கள், சரசாலை நுணுவில் சிதம்பர விநாயகர் ஆலய மூத்த குருக்கள்...

வடக்கில் இடம்பெற்ற போரால் விதவைகளான பெண்கள் தொழில் தேடும்போது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என்பதுடன் அதற்கு இசையவும் வைக்கப்படுகின்றனர் என 'ஏ.எவ்.பி.' செய்திச் சேவை அறிக்கையிட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான பெண்களை மூலங்களாகக் கொண்டு ஏ.எவ்.பி. வெளியிட்டுள்ள அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து...

யாழ்.குடாநாட்டில் குடிநீரில் கலந்துள்ள கழிவு ஒயில் மற்றும் மாசடைதலை கண்டுபிடிப்பதற்கான கருவி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மருத்துவ சங்கத்தினர் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற ஊடகவியர்கள் உடனான சந்திப்பின் போதே குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, உயிரியல் மண்வடிகட்டி என்ற...

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒவ்வொரு நாளும் நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை ஒவ்வொருவர் தற்கொலை அல்லது தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் எஸ்.சிவன்சுதன் தெரிவித்துள்ளார். அதிகரித்த போதை வஸ்துப் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில்...

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, திட்டமிட்டவாறு அன்றைய தினமே நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓகஸ்ட் மாதம் நடைபெற ஏற்பாடாகியிருந்த கல்விப் பொதுத்...

'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமராக வேண்டுமாயின் அவர் தேர்தலில் போட்டியிடட்டும். இருப்பினும், அவரை இம்முறை வெற்றியடையச் செய்ய புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இல்லை. அதனால், இம்முறை அவர் தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம்' என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாவலப்பிட்டிய, அத்கால பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு...

All posts loaded
No more posts