Ad Widget

தமிழர் விடுதலை கூட்டணி ஏன் கொழும்பில் போட்டியிடுகின்றது – டர்ஷன்

தமிழர் விடுதலை கூட்டணி ஏன் கொழும்பில் போட்டியிடுகின்றது என்பதை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அதாவது தேசிய கட்சிகள் என்று கூறிகொள்ளும் பேரின கட்சிகள் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு அதுவும் முக்கியமாக கொழும்பு வாழ் தமிழர்களுக்கு எந்த வித விமோசனத்தையும் பெற்று கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.

அதிலும் கொழும்பில் தாமும் தமிழ் கட்சி தான் என தம்மை அடையாள படுத்தி வந்த கட்சியை சார்ந்த வேட்பாளர்களும் தமிழ் மக்களின் நிலைமைகளை எள்ளளவிலும் கருத்தில் கொள்ளாது இன்று இந்த தேசிய கட்சிகளோடு இணைந்து போட்டியிடுகின்ற நிலைமை கொழும்பு வாழ் தமிழர்களை அநாதை குழந்தைகள் ஆக்கியுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.

எனவே தான் எமது மக்களின் அதுவும் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்க படக்கூடாது என்ற உன்னத நோக்கோடு தான் நாம் கொழும்பில் போட்டியிடுகின்றோம் என்பதனை இந்த வேளையில் தெரிவித்துகொள்ள விரும்புகின்றேன் என தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார்.

Related Posts