விபத்தில் 3 பிள்ளைகளின் தந்தை பலி

மீசாலை பகுதியில் புதன்கிழமை (12) இரவு துவிச்சக்கரவண்டியில் சென்றவரை வாகனம் ஒன்று மோதியதில் துவிச்சக்கரவண்டியில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த விசாசித்தம்பி தெய்வநாதன் (வயது 40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உறவினர் ஒருவருடைய வீட்டில் குழாய்க் கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டுவிட்டு, வீடு சென்றுகொண்டிருந்த இவரை வீதியில்...

எலிகடித்த சிசுவின் சடலத்தை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு

வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் முகத்தை எலிகள் கடித்ததால் அச்சடலத்தை பொறுப்பேற்க பெற்றோர் மறுத்த சம்பவமொன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றது. உடுவில் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்குப் பிறந்த சிசுவொன்று, பிறந்த மறுநாளே உயிரிழந்துள்ளது. இந்த சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த போதே,...
Ad Widget

வெற்றிலை, கையை தவிர்த்து எந்த விலங்குக்கும் புள்ளடியிடுங்கள்

ஊழல்களில் ஈடுபடும் தனிநபர்களிடமிருந்து எமது நாட்டை காப்பாற்றவேண்டும் என்றால், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிலை மற்றும் கை சின்னங்களைத் தவிர வேறெந்த விலங்குக்கு வேண்டுமென்றாலும் வாக்கயுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார். ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவே கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று, ஐ.தே.க, ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா சுதந்திரக்...

கூட்டமைப்பின் பலம் என்பது தமிழ் மக்களின் பலம்: தாயகத்திலும் புலத்திலும் உள்ள மக்கள் ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும்! – மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் என்பது தமிழ் மக்களின் பலம். அந்தப் பலத்தைப் பாதுகாத்து எமது தாயகத்தை வளப்படுத்த தாயகத்திலும் புலத்திலும் இருக்கின்ற தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டுமென கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார். இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு...

இன்று அகில இலங்கை தமிழ்காங்கிரசின் மாபெரும் பரப்புரைக்கூட்டம்

இன்று (13-08-2015 )வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு அகில இலங்கை தமிழ்காங்கிரஸ்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பரப்புரைக்கூட்டம் பருத்தித்துறை மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் தலைமையில் இப் பரப்புரைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சைக்கிள் சின்ன முதன்மை வேட்பாளரை இலக்கு வைத்து வவுனியாவில் பொலிசார் மீண்டும் அடாவடி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் அவர்களை இலக்கு வைத்து பொலிசாரின் அடாவடிச் செயற்பாடுகள் தொடர்கின்றன. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று புதன்கிழமை சைக்கிள் சின்னத்தின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் அவர்களை அழைத்து வருவதற்காக...

வாக்காளர்கள் யாருடைய மிரட்டல்களுக்கும் பயப்படத் தேவையில்லை : யாழ்.அரச அதிபர்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்பவர்கள் பயப்பட தேவையில்லை சிலர் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது எங்களுக்கு தெரிய வரும் என மிரட்டுவதாக தகவல்கள் உண்டு அவ்வாறு நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதனை யாராலும் எச் சந்தர்ப்பத்திலும் பார்க்க முடியாது எனவே அவ்வாறானவர்களின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவையில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்....

இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு இலவச பஸ் சேவை

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக இலவச பஸ் சேவை நடத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன் தெரிவித்தார். கரவெட்டி பிரதேச செயலகத்திலிருந்து குஞ்சர் கடையடி, நெல்லியடி, கொடிகாமம் வீதி, துன்னாலை கலிகைச்சந்தி, மந்திகைச்சந்தி, மாலுசந்தி, உடுப்பிட்டி, அச்சுவேலி, புன்னாலைக்கட்டுவன், வசாவிளான், மல்லாகம் ஊடாக...

யாழ்ப்பாணத்தில் 13 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றம்

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏற்பாடாகியிருந்த வாக்களிப்பு நிலையங்களில் 13 நிலையங்களின் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன் தெரிவித்தார். புங்குடுதீவு சித்தி விநாயகர் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையம், புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாலயத்துக்கும் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் இருந்த இரண்டு...

கிளிநொச்சியில் லொறி தீக்கிரை

கிளிநொச்சிப் பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் லொறி ஒன்று தீக்கிரையாகியுள்ளது. ​நேற்று மாலை 05.15 அளவில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து வெளியேறிய பொற்றோலினாலேயே லொறி தீப்பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

புங்குடுதீவு விவகாரம்: கொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் 9 பேரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், புதன்கிழமை (12) உத்தரவிட்டார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 60 நாட்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட 9 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, 4ஆவது சந்தேகநபரிடமிருந்து...

வித்தியா வழக்கைத் திசை திருப்ப முயன்றராம்! துவாரகேஸ்வரனுக்கு ரூ.20 இலட்சம் பிணையில் விடுதலை!!

புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கை திசைதிருப்பும் விதத்தில் நடந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐ.தே.கவின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் பிரபல வர்த்தகருமான துவாரகேஸ்வரனை 20 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதித்தது. மாணவியின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி வந்த சட்டத்தரணி கே.வி.தவராசாவை...

அனைத்து தொழிலாளர்களுக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய அனைவருக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்று ​தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். அந்த வகையில் வாக்காளர்களின் தூரத்தை கருத்திற்கொண்டு குறைந்தது அரைநாள் முதல் ஒருநாள் வரையான விடுமுறை வழங்கப்பட வேண்டும்...

தேர்தலில் களமிறங்கும் ஜனநாயகப் போராளிகளுக்கு முன்னாள் போராளியின் கடிதம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் ஊடகவியலாளர் வித்தியாதரனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு ஜனநாயக போராளிகள் கட்சி களமிறங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் அரசியல் அரங்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்தச் சூழ்நிலையில், 27 வருடங்களாக மக்களின் விடிவுக்காக களமாடிய முன்னாள் போராளி ஒருவர் தனது குமுறல்களை எம்முடன்...

வாக்களிக்கத் தவறாதீர்கள்…! : யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் வேண்டுகோள்

எதிர்வரும் 17.08.2015 அன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை.... எதிர்வரும் 17.08.2015 அன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக ஒன்றுக்கொன்று முரணான நிலைப்பாடுகளை வெவ்வேறு அரசியற் கட்சிகள் மட்டுமின்றி ஒரே கட்சியின் வெவ்வேறு வேட்பாளர்களும் வெளியிட்டு வருகின்ற நிலையில் ‘‘மெய்ப் பொருள் காண்பது...

விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு நியாயம் கிடைக்காவிடில் போராட்டம் விரிவுபடுத்தப்படும் – விவசாயிகள் தெரிவிப்பு

இலங்கை அரசால் வடமாகாணத்தில் நியமனம் செய்யப்பட இருக்கும் 361 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களில் 332 பேர் சிங்களவர்கள் எனத் தெரியவந்ததையடுத்து, தமிழ் மக்களுக்கு உரிய நியாயம் விரைவில் கிடைக்காவிடில் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வடக்கில் நியமனங்களில் 90 விழுக்காடு சிங்களவர்கள் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று புதன்கிழமை (12.08.2015) யாழ்...

ஆகஸ்ட் மாதம் 17ந் திகதி காலையில் வாக்களிப்பது மிக முக்கியம்.வீட்டில் முடங்கிக் கிடக்காதீர்கள்! – முதல்வர் அறைகூவல்

எனது அன்பார்ந்;த சகோதர சகோதரிகளே, இளைஞர்களே, யுவதிகளே! தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் யாருக்கு வாக்களிப்பது, யாரை தெரிவு செய்தால் உங்களையும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அவர்கள் வாழவைப்பார்கள் என்பது குறித்து நீங்கள் ஓர் தீர்மானத்திற்கு வந்திருப்பீர்க்ள் என நம்புகின்றேன். உங்களது தீர்மானத்தில் நான் எந்தவொரு செல்வாக்கினையோ அல்லது தலையிட்டினையோ செய்யப்போவதில்லை. இம்முறை...

சி.வி.க்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முடியாது – தவராசா

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவர முடியாது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் அதற்கான அனுமதி இல்லை என்று வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் நடுநிலை வகிக்கப்போவதாக அறிவித்தமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், முதலமைச்சருக்கு எதிராக வடமாகாண சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக்...

நீதிமன்ற தாக்குதல்; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று புதன்கிழமை (12) உத்தரவிட்டார். கடந்த மே மாதம் 20ஆம் திகதி, நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில், 27பேர் தொடர்ந்து விளக்கமறியலில்...

மனோ கணேசன் கொழும்பு வாழ் தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றார் – டர்ஷன்

இன்றைய சூழ்நிலையில் சில அரசியல் கட்சிகள் பணத்துக்காக உறுப்பினர்களை கட்சியில் இணைத்து வேட்பாளர்களாக்கும் நிலையில் தமிழர் விடுதலை கூட்டணி சாதாரண சிவில் சமூகத்தவர்களையும் புத்தியீவிகளையும் வேட்பாளர்களாக நியமித்து தேர்தலில் போட்டியிடுகின்றது. மனோ கணேசன் பண பலம் படைத்தவர்களை கட்சியில் இணைத்து அரசியல் வங்குரோத்து நிலையை சீர் செய்வதற்காக மக்களின் எதிர் காலத்தை விலை பேச முடியாது...
Loading posts...

All posts loaded

No more posts