Ad Widget

நோர்வே தூதுவர் தலைமையில் நீரியல் நிபுணர்கள் வடக்கு விவசாய அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோகீன் தலைமையில் நோர்வே நீரியல் நிபுணர்கள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29.05.2015) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். வடமாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அழைப்பின் பேரில், இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அண்மையில் சுன்னாகம் பகுதியில் தரையை ஊடுரும் றேடாரைப் பயன்படுத்தி ஆய்வுகளை...

வடமாகாணத்தில் சமாதானம் காக்கப்படுகிறது: டீ.ஐ.ஜி

வடமாகாணத்தில் தற்போது 100 வீதம் சமாதானம் காக்கப்படுவதாகவும் அதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட பிரத பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். தலைமை பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு...
Ad Widget

ஒரு அமைச்சர், ஒரு பிரதி அமைச்சர் மூன்று இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் மேலும் ஐவர் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர். லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகவும் பண்டு பண்டாரநாயக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஹேமால் குணசேகர ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாகவும் சந்திரிசிறி சூரியாராச்சி பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிபிரமாணம்...

ஜனாதிபதியின் நற்செயலை பாராட்டுகின்றது தமிழர் விடுதலைக் கூட்டணி

தனியாக யாழ்ப்பாணத்துக்கு வந்து வித்தியாவின் தாயரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராட்டுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெள்ளிக்கிழமை (29) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாடசாலைக்கு சென்ற 17 வயது மாணவி வித்தியா கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அப்பாவி...

புங்குடுதீவில் சட்டத்தை மதிக்காத குழுவொன்று செயற்படுகின்றது

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் சட்டத்தை மதிக்காத சிறு குழுவொன்று செயற்படுகின்றது என வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், புங்குடுதீவில் மாணவி படுகொலை...

யாழ். நீதிமன்ற தாக்குதல் குறித்து விசேட விசாரணை வேண்டும்: டக்ளஸ்

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலைச் சம்பவத்தின் பின்னர் யாழ். நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது, யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிலர்...

வடக்கு, கிழக்கில் இராணுவத்தை அகற்ற மைத்திரி அரசுக்கு விருப்பமில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்துக்கு வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தை அகற்றுவதற்கு விருப்பமில்லை என்று அமெரிக்காவிலுள்ள ஒக்லான்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. அதேபோல அவ்விரு மாகாணங்களிலும் சிவில் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதாக அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை...

மாணவி சீரழிக்கப்பட்டதை வீடியோவாக பதிவு செய்து வெளிநாட்டுக்கு அனுப்பும் திட்டமே நடைபெற்றுள்ளது: அரசாங்கம்

வடக்கில் மாணவி வித்தியா சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரண சம்பவமாக கணிக்க முடியாது. மாணவியை சீரழித்து அதனை ஒளிப்பதிவு செய்து சர்வதேசத்துக்கு அனுப்பும் ஒரு வியாபார முயற்சியே நடந்தேறியுள்ளது. எனவே இதற்கு விசேட நீதிமன்றம் அமைக்கவேண்டியது அவசியமாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். முதலில் இந்தியாவில் இவ்வாறு திட்டமிட்ட வியாபாரமாக...

மஹிந்தவுக்கு வெற்றிலையில் இடமில்லை – மைத்திரி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 14...

கொக்கிளாய் தனியார் காணியில் சட்டவிரோதமான விகாரை உருப்பெறுகிறது

முல்லைத்தீவு கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. பொது மக்களின் தகவலையடுத்து நேற்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதை நேரில் உறுதிப்படுத்தியுள்ளார். முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலைக் காணியின் ஒரு பகுதியையும் இதமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் அபகரித்து...

தகுதியில்லாதவர்கள் அரசியல் செல்வாக்குடன் பணியாற்றுகின்றனர் – முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன்

கடந்த காலங்களில் உரிய பதவிகளுக்கான தகுதிகளை கொண்டிராத பலர் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமனங்களை பெற்றுக்கொண்டார்கள். பல பதவிகளில் உரிய கல்வித்தகைமைகளை கொண்டிராத பலர் கடமையாற்றுகின்றார்கள் என்பதை நாம் 2013ஆம் ஆண்டு வடமாகாண சபை ஆட்சிக்க வந்த பின்னர் அறியக்கூடியதாகவுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண உள்ளூராட்சி சபைகளில் தற்காலிக ஊழியர்களாக...

வித்தியாவின் மரணத்துக்கு ராஜபக்‌ஷ குடும்பமே பொறுப்பு!

"வடக்கில் சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்தி இன்று அது விஸ்வரூபமாகி புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல், பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யும் நிலை ஏற்படுவதற்கான பொறுப்பை மஹிந்த ராஜபக்‌ஷவே ஏற்றுக்கொள்ள வேண்டும்'' - எனக் குற்றஞ்சாட்டும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண்.குகவரதன், 'வடக்கின் வசந்தம்' என்ற பெயரில் ராஜபக்‌ஷ குடும்பம்...

உலக புகையிலை எதிர்ப்பு தினம் யாழில்!

உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் விஞ்ஞான சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சுகாதார சுதேசிய அமைச்சர் எஸ் சத்தியலிங்கமும் சிறப்பு விருந்தினாகளாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத் துறையின் முன்னாள் தலைவர் வைத்தியகலாநிதி என்.சிவராசா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொது...

வித்தியா படுகொலை; கல்முனை மாநகர சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றம்

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கல்முனை மாநகர சபையில், கண்டனம் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று புதன்கிழமை மாலை முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றபோது, மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த கண்டனப் பிரேரணை, அனைத்து உறுப்பினர்களினதும் முழுமையான ஆதரவுடன் ஏகமனதாக...

குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற ஆணையாளராக கனகா நியமனம்

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற ஆணையாளராக திருமதி கனகா சிவபாதசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் நீதிச் சேவை ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது. இவர் முன்னர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற ஆணையாளராகக் கடமையாற்றியவர். பருத்தித்துறையைச் சேர்ந்த இவர், பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி...

இராணுவ பஸ் மோதி இளைஞன் காயம்

யாழ். சுன்னாகம் பகுதியில் புதன்கிழமை (27) இரவு இராணுவ பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞனை பின்னால் சென்ற இராணுவ பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்று விபத்துக்குள்ளான இரு வாகனங்களையும்...

கிளி. சிறுமி மீதான வன்கொடுமை : சந்தேகத்தில் 15 வயதுச் சிறுவன் கைது!!

பரந்தனில் ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விடயத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 15 வயது சிறுவன் கைதாகியுள்ளான். கிளிநொச்சி பொலிசார் நேற்று சிறுவனை கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பரந்தன் சிவபுரம் பகுதியில் ஏழு வயதான பாடசாலை சிறுமி கடத்தப்பட்டு, வாய் கட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தார். மயக்கமடைந்த மாணவியை...

தேர்தல் நடத்தத் தயார்! ஆனால் அரசிடமிருந்து அறிவிப்பு இல்லை!!

அரசு அறிவிப்பு விடுத்தால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் திணைக்களம் எப்போதும் தயாராகவே உள்ளது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய, அரசிடமிருந்து அதற்கான அறிவிப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். அத்துடன், 20ஆவது திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டாலும், தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைக் கூறமுடியாது என்று தெரிவித்த...

நாட்டில் வேகமாக அதிகரிக்கிறது ‘எய்ட்ஸ்’!

2015 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் நாட்டின் சகல பகுதிகளிலும் 58 புதிய 'எய்ட்ஸ்' நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநர் டாக்டர் சிசிர லியனகே எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்தப் புள்ளி விவரங்கள் கிடைக்கப்பெற்றன எனவும் அவர் தெரிவித்தார். 1989 ஆம்...

பரந்தன் சிறுமி வன்புணர்வு; கண்டித்து இன்று போராட்டம்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து ஊர் மக்களும் பாடசாலை மாணவர்களும் இன்று கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். புங்குடுதீவு சிறுமி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சோகம் ஆறுவதற்கு முன்னர் பரந்தன் - சிவபுரத்தில் மற்றுமொரு சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாள். கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என ஏற்கனவே...
Loading posts...

All posts loaded

No more posts