Ad Widget

வவுனியாவில் கையெழுத்துப்போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்தொடர்பாக சர்வதேசவிசாரணை தேவை எனக்கூறி கையெழுத்துப் போராட்டம் நேற்றயதினம் புதன்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.

இதனை கூட்டமைப்பின் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்சிவசக்திஆனந்தன் கையொப்பமிட்டு ஆரம்பித்துவைத்தார்.

வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்திஆனந்தன் மற்றும் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு வவுனியா, முத்தையாமண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்திற்கு வழங்குவதற்காக சர்வதேச விசாரணை கோரியமனுவில் பாராளுமன்ற உறுப்பினர்களானந.சிவசக்திஆனந்தன், சி.சிவமோகன், வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.பி.நடராஜா, இ.இந்திரராசா, மதத்தலைவர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப்பலரும் கையெழுத்திட்டனர்.

 

Related Posts