- Thursday
- April 23rd, 2026
இலங்கை இறுதிப் போர் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கையானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் சாதகமானது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார். இறுதிப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை இலங்கையின் வட மாகாண சபையில் நேற்று தாக்கல்செய்யப்பட்டது. இதையடுத்துப் பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்கான மக்களின்...
தேசிய வெங்காய உற்பத்தியாளர்களின் நன்மை கருதி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் இறக்குமதி வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் வெங்காய அறுவடை தற்போது நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கிடையாதென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கே இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள்...
இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது கட்டாயமானதாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். இதன்போது உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த காலத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத செயல்முறைகள் மீண்டும் நாட்டில் இடம்பெறாதிருக்க...
கம்பஹா கொடகதெனியா பகுதியில் 4 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்தின் பின் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர நிகழ்வை வன்மையாகக் கண்டிக்கும் வகையில் அண்மைக்காலத்தில் நாட்டின் பலபாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவது தெரிவதே. அதேபோல் அளவெட்டியிலுள்ளவிநாயகர் விளையாட்டுக் கழகத்தின் இளைஞர்களால்சோயாவின் துர்மரணம் சம்பந்தமாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி முன்றலில் இருந்து...
வடமாகாணசபைக்கு முன்பாக வேலைவாய்ப்புக் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், அதனை நிறைவேற்ற பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் பேசுவதற்கு 7 பட்டதாரிகள் மற்றும் 7 மாகாணசபை உறுப்பினர்கள் கொண்ட செயலணி உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடமாகாணசபை ஆளுகைக்குட்பட்ட வெற்றிடங்களை நிரப்புமாறு பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டதாரிகள் இன்று...
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் அமர்வில், ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைவுக்கு, இலங்கை தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத்தில், ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலிலேயே இலங்கையின் எதிர்ப்பை, ஜெனீவாவுக்கான இலங்கையின் தூதுவர் ரவீந்திர ஆரியசிங்க வெளிப்படுத்தினார். சமர்ப்பிக்கப்பட்டுள்ள...
தேசிய ஆள் அடையாள அட்டையினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களினால் தமது பாடசாலை அதிபர்களின் உறுதிப்படுத்தலுடன் கடந்த 30.03.2015 இற்குப் பின்னர் ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பியமைக்கு அமைவாக மாணவர்களுக்கான தேசிய ஆள் அடையாள அட்டை மாணவர்களின் தனிப்பட்ட சொந்த முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன....
போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீரில் கிறீஸ் மற்றும் காரத்தன்மை உள்ளமை கண்டறியப்பட்ட எட்டு நிறுவனங்களுக்கு எதிராக இந்த வாரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஜூன் மாதம் யாழ்.மாவட்டத்தில் விற்பனையாகும் குடிதண்ணீர்ப் போத்தல்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் ஒன்பது நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்ட குடிதண்ணீர்ப் போத்தல்கள்...
வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட 5 வயதான செயாசந்தவமியின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களால் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. சிறுமியின் அநீதிக்கு தகுந்த நீதி வேண்டும்,குழந்தைகளுக்கான வன்முறையை எதிர்ப்போம்' மற்றும் 'சிறுமியை கொலை செய்த கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்' ஆகிய வாசகங்களை உள்ளடக்கிய...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை (22) இரவு தொடக்கம் நாளை புதன்கிழமை (23) வரையில் கடலுக்குச் செல்லாமல் தவிர்ப்பதன் காரணமாக நாளை புதன்கிழமை (23) யாழ்ப்பாணச் சந்தைகளில் மீன் வரத்து இருக்காது. வடபகுதி கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கண்டித்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், யாழ்.மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம்,...
வட மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை முன்பாக இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. இன்று காலை 9.30 மணிக்கு வடமாகாண சபை அமர்வுகள் ஆரம்பமாக இருந்த நிலையில், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்...
நீதிமன்றத்துக்கு சவால்விடும் சுன்னாகம் ரவுடிக் கும்பல்களை அடக்க உடனடியாக விசேட அதிரடிப்படையை அமர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டு மென வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். ரவுடித்தனத்தில் ஈடுபடும் அனைவரையும் பொலிஸ் விசேட அதிரப்படையைப் பாவித்து கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்குமாறு வட பிராந்திய...
யாழ்.நகரப்பகுதியில் வைத்து இனந் தெரியாத நபர்களினால் மோசமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தம்பதிகள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியினைச் சேர்ந்த யாழ்.நகரில் உள்ள பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களான மாதவமணிவண்ணன் (வயது 44), மாதவமணிவண்ணன தர்சனி (வயது 41) என்னும் தம்பதிகளே மேற்படி தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களாவர். குறித்த சம்பவம் தொடர்பாக...
புகையிரத திணைக்களத்தினால் யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பிற்கும் கொழும்பு புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கும் இடையிலான நான்கு புகையிரத சேவைகளின் நேர அட்டவணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் திங்கட்கிழமை தொடக்கம் மாற்றம் அடையவுள்ளதாக புகையிரத திணைக்களத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து...
பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் ஆசனங்கள் ஒழுங்குகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரியவுடன் இடம்பெற்ற பேச்சுகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 6 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு முன்வரிசையில்...
யாழ். மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக செயற்படுபவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளம்செழியன் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக சட்டவிரோத செயல்கள் மற்றும் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. வாள்வெட்டு, தெருச் சண்டை, குழுச் சண்டை, பெண்கள்...
இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து, மனித உரிமைகள் பேரவையில் யோசனையொன்றை முன்வைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யுத்தத்தின் இறுதியின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடியறிவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்படவிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவித்தன. அமெரிக்காவினால்...
பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஜே.ஸ்ரீரங்காவுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவுவிழா நடைபெறவுள்ள நிலையில், அந்நிகழ்வுக்கு கலந்துகொள்ள வரும் ஸ்ரீரங்காவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 'ரங்காவின் பிரசன்னத்தை எதிர்க்கும் யாழ். இந்து சமூகத்தை ஆதரிப்போம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் துண்டுப்பிரசுரத்தின் கீழ்ப் பகுதியில்...
திருநெல்வேலி சிவன் வீதியில் சிவன் அம்மன் கோயில்களுக்கு முன்பாக உள்ள சுமார் இருநூறு வருடங்களுக்கு பழைமைவாய்ந்த அரச மரத்தின் பெரும் கிளை திடீரென முறிந்து வீழ்ந்ததால் மூன்று கடைகள் சேதமடைந்தடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு குறிப்பிட்ட மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்துள்ளது. வீதியில் வீழ்ந்துள்ள போதிலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாலை வேளையில்...
Loading posts...
All posts loaded
No more posts
