மரண தண்டனையை செயற்படுத்த ஜனாதிபதி முடிவு!

அடுத்த வருடம் தொடக்கம் மரண தண்டனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அனுமதி கிடைத்தால் மரண தண்டனையை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி இன்று கூறுகையில், ´நாட்டில் இன்று இடம்பெறும் கொலை, கொள்ளை, சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் துஸ்பிரயோகம், குற்றச் செயல்கள் அதிகரிப்பு தொடர்பில் புதிய...

ஜெயலலிதாவை பாராட்டி யாழில் பதாகை

மிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி பதாகை ஒன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் சர்வதேச விசாரணை மூலம் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏக மனதாக நிறைவேறியுள்ளது. எனவே இதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக...
Ad Widget

மஹிந்த மட்டுமல்ல மைத்திரியும் போர்க்குற்றவாளிதான்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் உண்டு என...

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விரைவில் இலங்கைக்குப் பயணம்!

ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் விரைவில் இலங்கை வரவுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சிவில் மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகளின் சந்திப்பின் போது ச.வி. கிருபாகரன் அவர்களால், இலங்கை போர்க்குற்ற விவகாரம், மற்றும் இலங்கை தொடர்பிலான நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் வினா எழுப்பப்பட்டது. அதற்கு ஐ.நா. அலுவலக ஆணையாளரின் பேச்சாளர் பதிலளிக்கையில்...

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியா­ய­மான பரி­காரம் வழங்கப்பட வேண்டும்! – இரா.சம்பந்தன்

தற்­போது ஏற்­பட்­டுள்ள சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி தமிழ் மக்­களின் நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்­வு காண்­ப­தற்கு அனைத்து தரப்­பி­னரும் ஒரு­மித்து செயற்­ப­ட­வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யுள்ளார். இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மானச் சட்­டங்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை அறிக்கை வௌியி­டப்­பட்­டுள்­ளது....

30 வீத ஆரம்பக் கொடுப்பனவு கட்டாயம் பெறப்பட வேண்டும் : லீசிங் நிறுவனங்களுக்கு மத்திய வங்கி நிபந்தனை

வாகனங்களைக் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யும் நடவடிக்கைக்கு இலங்கை மத்திய வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி வாகனங்களை முழுமையான குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிதிச்சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றுக்கு அமைய, லீசிங் வசதிகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை உள்ளடக்கிய சுற்றுநிருபமொன்று இலங்கை மத்திய வங்கியினால் நேற்று...

சர்வதேச விசாரணையே நடந்தது என்பது இப்போது புரிந்திருக்கும் : மாவை

சர்வதேசத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கை வெளிவந்திருக்கின்றது. இது சர்வதேச விசாரணையில்லை என்று கூறி இந்த அறிக்கைக்கான பிரேரணையை ஜெனிவாவில் எரித்து, சர்வதேச ஒரு கூட்டத்தினர் மக்களைக் குழப்பினர். இப்போது புரிந்திருக்கும், நடந்தது சர்வதேச விசாரணைதான் என்று. நேற்றுவரை எம்மை ஏசி விட்டு இன்று மகிழ்ச்சி தெரிவிப்பவர்களும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக்...

முதலுதவி செய்வதை தவிர்த்து வைத்தியசாலையை நாடவும்

நச்சுப் பொருட்களை உட்கொண்ட, திரவங்களை அருந்திய, விஷ ஜந்துக்களின் கடிக்கு உள்ளானவர்களுக்கு முதலுதவி செய்வதை தவிர்த்து உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்.சிவன்சுதன் தெரிவித்தார். நச்சுத்தன்மையுள்ள வீட்டுப் பாவனைப் பொருட்களால் அநாவசியமாக ஏற்படுத்தும் விபத்துக்களை தடுப்போம் என்ற தொனிப்பொருளில், தேசிய விஷ ஒழிப்புத்தினம் இம்மாதம்...

இளம் சமுதாயத்தினரே அதிகமாக நஞ்சருந்துகின்றனர்

தற்கொலைக்காக நஞ்சருந்துதல் தற்போது அதிகமாகியுள்ளது. அதிலும் இளம் சமுதாயத்தினர் நஞ்சருந்துதல் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்களின்படி தெரியவருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை உளவள வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி எஸ்.சிவயோகன் தெரிவித்தார். நச்சுத்தன்மையுள்ள வீட்டுப் பாவனைப் பொருட்களால் அநாவசியமாக ஏற்படுத்தும் விபத்துக்களை தடுப்போம் என்ற தொனிப்பொருளில், தேசிய விஷ ஒழிப்புத்தினம் இம்மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை...

மனித உரிமைகள் கவுனஸிலின் அறிக்கையை வரவேற்கின்றேன் – பொன்சேகா

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் வெளியிட்ட விசாரணை அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் போரை நடத்திய இராணுவத் தளபதியான சரத்பொன்சேகா வரவேற்றுள்ளார். அத்துடன் நீதியை நாட்டப்படுவதற்கான செயற்பாடுகளுக்கு தான் முழுமையான ஆதரவை வழங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு உதவவேண்டும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இந்த நாட்டு மக்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும், இந்த...

23ம் திகதி மாபெரும் முற்றுகைப் போராட்டம்!

இந்திய ரோலர் படகின் அத்துமீறலை கண்டித்து மாபெரும் முற்றுகைப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் கூட்டுறவு சங்க சம்மேளனத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர்...

18 மாதங்களுக்குள் சில விவகாரங்கள் குறித்து உள்நாட்டு விசாரணை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக தாக்கல்செய்யப்பட்டுள்ள அறிக்கையின் சில விஷயங்கள் தொடர்பான உள் நாட்டு விசாரணைகளை 18 மாதங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்போவதாக வெளிவிவகாரத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மங்கள சமரவீர இந்தத் தகவலைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி...

சர்வதேச விசாரணையே தேவை என கத்தோலிக்க ஆயர்கள் கடிதம்

சர்வதேச விசாரணை மட்டுமே, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரும் என வடக்கு-கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 170 கத்தோலிக்க மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் கூட்டாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை என்று கோரி வந்த அமெரிக்காவும், இப்போது தவறான...

முழுமையான சர்வதேச விசாரணையே தேவை – தமிழர் செயற்பாட்டு குழு கோரிக்கை

ஐநா ஆணையாளரின் அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையினை வெல்வது எப்படி என்பது குறித்து கரிசனை கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை உள்ளகப்பொறிமுறையினை நிராகரித்த ஆணையாளரின் காரணங்களினை வரவேற்றுள்ள சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழு(TACIAM)  முழுமையான சர்வதேச விசாரணையே தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு...

ஐ.நாவின் அறிக்கையை வரவேற்கிறோம்! கலப்பு நீதிமன்றம் தொடர்பில் முழுமையான தெளிவு ஏற்படுத்தப்படவேண்டும்- கஜேந்திரகுமார்‬-

 இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று வெளியிடப்பட்ட  அறிக்கை  போர்க்குற்றவியல் அறிக்கை அல்லவென தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.மேலும் அறிக்கையினை வரவேற்பதோடு கலப்பு நீதிமன்றம் தொடர்பில் முழுமையான தெளிவு ஏற்படுத்தப்படவேண்டும் என்றார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசிய முன்னணியின் சார்பாக...

தீவகத்தை அபிவிருத்தியால் கட்டியெழுப்ப முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – வேலணையில் டக்ளஸ்

தீவகம் வடக்கு, தெற்கு மட்டுமல்லாது முழுமையான தீவகத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்படும் அதேவேளை, இங்குள்ள மக்களது வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் ஏனைய தேவைப்பாடுகளுக்கும் தீர்வு காண்பதற்கு எதிர்காலத்தில் எமது முழுமையான பங்களிப்பு தொடருமேன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். வேலணை சரவணைப்பதி சிறி செல்வக்கதிர்காம தேவஸ்தானத்தின் கும்பாபிசேகம்...

நெடுந்தீவில் குடிநீருக்காக தேவையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை

நெடுந்தீவைச் சேர்ந்த மக்களுக்கு தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளும் வகையில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாண கிளை மற்றும் UTE ஆகியன இணைந்து நீர் வழங்கல் மற்றும் இரு புதிய கடல் நீர் சுத்திகரிக்கும் (Reverse Osmosis) நிலையங்களை நிறுவ முன்வந்துள்ளன. நெடுந்தீவுப் பகுதியில் தூய்மையான குடிநீருக்காக காணப்படும் தேவையை நிவர்த்தி செய்யும்...

இணையத்தின் மூலம் கணித ஆற்றலை மேம்படுத்தும் செயல் திட்டம்

இம்முறை க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இணைய வழி ஊடாக கணிதப் பாடத்துக்கான ஆற்றலை மேம்படுத்தும் உன்னத திட்டம் ஒன்றை கொமர்ஷல் வங்கி தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் Optimized IT என்ற நிறுவனத்துடன் இணைந்து அண்மையில் இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இணைய வழி மூலமாக பல் தெரிவு...

மரண பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு

2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இறப்பை பதிவு செய்தல் (தற்காலிக நடைமுறை) சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 1951 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க பிறப்பத்தாட்சி மற்றும் இறப்பத்தாட்சி படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் இறப்பத்தாட்சிபடுத்தும் அதிகாரத்தை பதிவத்தாட்சி ஆணையாளர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டது. எனினும் பயங்கரவாததாக்குதல், மக்கள் புரட்சி மற்றும் இயற்கை...

இலங்கையில் நீதியைத் தேடி : ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்த உடல்கள்… கதறிய நெஞ்சங்கள்…

கொத்து கொத்தாய் குண்டுகள் வீசி கொல்லப்பட்ட தமிழர்கள்... குழந்தைகளும், பெண்களும் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து மடிந்ததை காண்பவர்களின் கண்களில் மட்டுமல்ல நெஞ்சங்களிலும் ரத்தத்தை வரவழைக்கும் ஆவணபபடம்தான் 'இலங்கை - நீதியைத் தேடி'. இலங்கை இறுதிப்போரில் திட்டமிட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்தியிருக்கிறது "இலங்கை-நீதியைத் தேடி" என்ற ஆவணப்படம். போர் இறுதிக்காலங்களில்...
Loading posts...

All posts loaded

No more posts