பெண்ணைக் கடத்திய இருவர் கைது

வேலணை, சரவணை பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரை, கத்தி முனையில் கடத்திய இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (22) மாலை கைது செய்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். திருமணமாகி 8 மாதங்களாகிய குடும்பப் பெண்ணை, இரண்டு சந்தேகநபர்கள் செவ்வாய்க்கிழமை (22) காலையில் கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை...

யாழ் நீதிமன்ற தாக்குதல் – 20 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களில் 20 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 21 ஆம் திகதி யாழ். நகரப்பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் யாழ்....
Ad Widget

மாணவி முன் ஆட்டோவில் சாகசம் : மாணவி காயம், ஆட்டோ சாரதி கைது

சைக்கிளில் சென்ற மாணவி முன் ஆட்டோவில் சாகசம் செய்து மாணவியை காயப்படுத்திய ஆட்டோ சாரதியொருவரை சுன்னாகம் பொலிசார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் நேற்று பிற்பகல் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி நேற்று பிற்பகல் பாடசாலை முடிவடைந்ததும் வழமை போன்று சைக்கிளில் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த ஆட்டோ...

அதிரடிப்படையினர் சுன்னாகத்தில் தீவிர தேடுதல் நடவடிக்கை

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவையடுத்து சுன்னாகம் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படை பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு அங்கு தெருச்சண்டித்தனத்திலும், வாள் வெட்டு ரவுடித்தனத்திலும் ஈடுபடும் கும்பல்களையும் மற்றும் தேடப்படுபவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.எம்.பெரேரா தெரிவித்துள்ளார். சுனனாகம் நகரில் கடையொன்றுக்குள் புகுந்த 9 பேர் அடங்கிய...

கொக்குவில் பகுதியில் துரத்தித் துரத்தி வாள் வெட்டு

நீதிபதி இளஞ்செழியன் யாழில் வாள்வெட்டுக் கலாசாரத்தில் ஈடுபடும் ரவுடிகளை அடக்குமாறு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவு பிறப்பித்த 24 மணி நேரத்திற்குள் யாழ்.கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இத் துணீகர வாள்வெட்டுச் சம்பவத்தினால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சவனப் பகுதியில் இரவு 7 மணியளவில் இனந்தெரியாத...

வித்தியா கொலைக்கு சிறப்பு நீதிமன்றம்? நாடாளுமன்றில் கேள்வி

நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. எம்.பிக்கள் பதவிப்பிரமாணம், சபாநாயகர் அறிவிப்பு, 23/2 இன் கீழான விசேட அறிவிப்பு ஆகியன முடிவடைந்த பின்னர் அமைச்சின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன் போது கொட்டிதெனியவில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சேயா என்ற சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும்...

கண்ணீர்க் குளமானது நாகர்கோவில்

நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது கடந்த 1995ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 22ம் திகதி இலங்கை விமானப்படையின் கோரக்குண்டுவீச்சில் கொல்லப்பட்ட 21 பாடசாலைச் சிறார்களின் நினைவுதினம் நேற்று பெற்றோர்கள்,உறவினர்களின் கதறல்களுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டதுடன் பலியான மாணவர்களின் நினைவாக நிறுவபட்ட நினைவுத்தூபியும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நினைவுத்தூபியினை நேற்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் திறந்து...

இந்திய மீனவர்களின் வருகையை எதிர்த்து யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் விசைப்படகுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 7.30 மணியளவில் யாழ். மாவட்ட மீனவர்களினால் யாழ். கடற்தொழிலாளர் நீரியல் வள திணைக்களத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 15 மீனவர்கள் சமாசங்களைச்...

இனவழிப்பில்லை என்று எமது தரப்பினர் கூறுவது வேதனையளிக்கிறது – அனந்தி

இலங்கையில் கடந்த கால யுத்தத்தின் போது, தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றது இனவழிப்பில்லை என்று, எமது தரப்பினர்கள் ஜெனிவாவில் தெரிவித்திருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது. வடமாகாண சபையால் எந்த விடயத்தையும்...

இணையத்தளங்களுக்கு சட்டம் வேண்டும்: வடமாகாண சபையில் பிரேரணை

அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டவிதிகள் இலங்கையில் அமுலில் இருப்பது போன்று, இணையத்தளங்களையும் ஒழுங்குபடுத்த சட்டங்களை பின்பற்றுவது தொடர்பில் வெகுஜன ஊடக அமைச்சைக் கோருவதற்கான பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்தார்....

பெண்ணைக் காணவில்லை

புதிய கொலனி கீரிமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 16ஆம் திகதியிலிருந்து காணவில்லை என்று அவரது உறவினர்கள், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (21) முறைப்பாடு செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். அன்ரன் ஜயக்கோன் சிவகௌரி (வயது 36) என்ற பெண்ணே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள உறவினர்...

சங்குப்பிட்டி, கண்டி வீதியில் சோதனைச் சாவடி – வடமாகாண சபையில் தீர்மானம்

சட்டவிரோத கடத்தல்களைத் தடுக்கும் நோக்கில் ஏ - 32 வீதியின் (யாழ்ப்பாணம் - மன்னார்) சங்குப்பிட்டி பாலம் மற்றும் ஏ - 9 (யாழ்ப்பாணம் - கண்டி) வீதியின் ஏதாவது ஒரு இடத்தில் பொலிஸ் சோதனைச் சாவடியை அமைத்து, பயணிகள் வாகனங்கள் தவிர்ந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் சந்தேகப்படும்படியான வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என...

மணப்பெண்ணை கடத்தியவர் சரண்

உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் கடந்த 15ஆம் திகதி திருமணத்துக்கென கனடாவில் இருந்து வந்த பெண்ணை கடத்திய பிரதான சந்தேகநபர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை (21) பருத்தித்துறை நீதிமன்றில் சட்டத்தரணியூடாக ஆஜராகினார். அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, திங்கட்கிழமை (21) உத்தரவிட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார்...

மஹிந்தவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

பாரிய மோசடி மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கு இன்று புதன்கிழமை சமுகமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான விளம்பரங்களுக்கு பணம் செலுத்தாமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கைக் கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்! நாடாளுமன்றில் மாவை

முப்பது வருடகால போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தை மீளக்கட்டி எழுப்புவதற்கு அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. மாவை சேனாதிராஜா வலியுறுத்தினார். போரின்போது அழிக்கப்பட்ட தொழிற்சாலைகளையும், மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளையும் மீளச் செயற்பட வைப்பதன் மூலம் இப்பிரதேச மக்களுக்கு பெருமளவிலான தொழில் வாய்ப்புகளை வழங்க...

ஐ.நாவின் சிபாரிசுகள் பயங்கரமானவை! சர்வதேச விசாரணையே நடக்கப் போகிறது!!

ஐ.நா. அறிக்கையில் உரிய சாட்சியங்கள் எதுவுமின்றியே முப்படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், அறிக்கையின் சிபாரிசுகள் பயங்கரமானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் மஹிந்த ஆட்சியில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். ஐ.நா. அறிக்கையின் சிபாரிசுகள் சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் வகையிலேயே அமைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும்...

வலி வடக்கின் மீள் குடியேற்றம் மிகவிரைவில்

வலி வடக்கின் மீள் குடியேற்றம் மிகவிரைவில் இடம்பெறும் என, தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவின் பணிப்பாளர் நாயகம் மாளியக்க தெரிவித்ததாக, வலி வடக்கு பிரதேச செயலகத்திற்கான மீள்குடியேற்றத் தலைவர் தனபாலசிங்கம் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். அப் பகுதியில் காணப்படும் துறைமுகங்கள், மீன்பிடி இறங்குதுறைகள் என்பன மிகவிரைவில் விடுவிக்கப்படவிருப்பதாக அவர் கூறினார். வலி வடக்கு பிரதேச செயலகத்திற்கு...

யாழில் மக்கள் நலன் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கூட்டம்

யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் 05 ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் நலன் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கூட்டம் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவகத்தின் ஏற்பாட்டிலும் முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டரநாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாகவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது....

யாழில் இந்திய மீனவர்கள் 15 பேர் கைது

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி உட்பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 15 இந்திய மீனவர்கள் யாழ் பருத்தித்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா புதுக்கோட்டை மாவட்டம் நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் கடந்த 21 ஆம் திகதி இரவு யாழ் பருத்தித்துறைப் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை கடற்படையினரால்...

எல்லை தாண்டும் மீனவர்களைத் தாக்கக் கூடாது என முடிவு!

இந்திய - இலங்கை கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வரும் இரு தரப்பு மீனவர்களை இருநாட்டு கடற்படையோ, கடலோரக் காவல் படையோ தாக்கக் கூடாது என்று டெல்லியில் நடைபெற்ற இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. "இந்திய - இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தை´ எனும் பெயரில் இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைச்...
Loading posts...

All posts loaded

No more posts