Ad Widget

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விரைவில் இலங்கைக்குப் பயணம்!

ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் விரைவில் இலங்கை வரவுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சிவில் மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகளின் சந்திப்பின் போது ச.வி. கிருபாகரன் அவர்களால், இலங்கை போர்க்குற்ற விவகாரம், மற்றும் இலங்கை தொடர்பிலான நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் வினா எழுப்பப்பட்டது.

அதற்கு ஐ.நா. அலுவலக ஆணையாளரின் பேச்சாளர் பதிலளிக்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கை செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் சார்பில் பேசவல்ல முக்கிய அதிகாரியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.எனினும் எப்போது இலங்கை செல்லவுள்ளார் என உறுதிப்படுத்தப்படவில்லை.

Related Posts