சீனி மற்றும் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் சீனி மற்றும் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1 கிலோ கிராம் சீனிக்கான வரி 12 ரூபாவினாலும் 1 கிலோ கிராம் உருளை கிழங்கிற்கான வரி 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றாலும் சீனியின் சந்தை விலைகளில் மாற்றம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு செப்டெம்பர் மாதம் 8ம் திகதி...

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் விபரம் இதோ!

தேசிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன் முழு விபரம் வருமாறு, இராஜாங்க அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌசி - தேசிய ஒருமைப்பாட்டு டிலான் பெரேரா - பெருந்தெருக்கள் ரி.பி.ஏக்கநாயக்க - காணி பிரியங்கர ஜயரட்ன - சட்டம் ஒழுங்கு லக்ஷமன் யாப்பா -...
Ad Widget

நீதிமன்றக் கட்டடம் மீதான தாக்குதல்: 3 பேருக்கு பிணை! 21 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்தின் மீது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் சந்தேக நபர்கள் 24 பேர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது மூவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பலர் ஏற்கனவே கட்டங்கட்டமாக பிணையில் விடப்பட்டுள்ளார்கள். இவர்கள் 24 பேரும் கைதுசெய்யப்பட்டு...

கையெழுத்துபோராட்டத்தில் யாழ் பல்கலைக்கழகம் இணைந்தது

யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையின் நூற்றாண்டு விழாப் பேரணி

யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாணவர்களின் நூற்றாண்டு விழாப் பேரணி இடம்பெற்றது. இன்று 09.09.2015 புதன்கிழமை காலை 7 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணி 9.30 மணியளவில் நிறைவடைந்தது. 1915 – 2015 நூற்றாண்டு விழாவை பொதுமக்களுக்கு அறியத் தரும் முகமாக அலங்கரிக்கப்பட்ட ஊர்தி முன்னே செல்ல மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும்...

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த இருவர் கைது

யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகித்த கொழும்பை சேர்ந்த இருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.வூட்லர் தெரிவித்துள்ளார். இக்கைது சம்பவம் நேற்று முன்தினம் மாலை யாழ். நகரில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு அருகாமையிலேயே இடம்பெற்று உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த தனியார் கல்வி நிலையத்தில் மாலை நேர...

சமூகச் சீரழிவுகளை உடன் அறிவியுங்கள் : பொலிஸார் வேண்டுகோள்

சமூகச் சீரழிவுகளை மக்களால் இனங்கண்டு கொள்ள முடியும். அவ்வாறு இனங்கண்டு கொள்ளக் கூடியவற்றை பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக அறிவியுங்கள் என காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அதிகாரி ஜபார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வீதியோரங்களில் நின்று பாடசாலை செல்லும் மாணவிகள் மற் றும் யுவதிகளுடன் பகிடவதையில் ஈடுபட்டுவரும் இளைஞர்களை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும். மோட்டார் சைக்கிளை...

சர்வதேச தலையீட்டில் விசாரணை வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

சர்வதேச தலையீட்டில் இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும். எக்காரணத்தை கொண்டும் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது என பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா பேரவையில் கலந்துகொள்வது...

புளூடூத், ஹேன்ட்ப்ரீயை பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தினால் குற்றம்

அலைபேசிகளை பயன்படுத்தி கொண்டு வாகனம் செலுத்துவது, மோட்டார் வாகன சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும் என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், புளூடூத், ஹேன்ப்ரியைப் பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. புளுடூத், ஹேன்ப்ரியை பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு, சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தண்டப் பத்திரிகையை வழங்கமுடியாது என்றும் அதனால் அவ்வாறான...

தலைமன்னார் – ராமேஸ்வரம் தரைவழி பாலம் குறித்து மோடி ஆலோசனை

இலங்கையின் தலைமன்னாரையும், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரைவழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக, பாரிய தொழில் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், வங்கிகளின் அதிகாரிகள், பொருளாதார...

ஜெனீவா செல்ல அனுமதிக்காவிடின் பதவி துறப்பேன்! – அனந்தி

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுமதியளிக்காவிட்டால் பதவி துறக்கப் போவதாக அக்கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எச்சரித்துள்ளார். ஐ. நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வது பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை என அறிவித்துள்ளது. வட...

யாழில் குடிநீர் போத்தல்களின் விற்பனை அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் போத்தல்களின் விற்பனை அதிகரித்துள்ளது. சுன்னாகம் பகுதியிலுள்ள மின்சார சபையின் வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் காரணமாக, வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் கடந்த காலங்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ள கிணறுகளின் நீரைப் பொதுமக்கள் பருகமுடியாத நிலை ஏற்பட்டதுடன், மக்களுக்கான குடிநீரை பிரதேச சபைகள், மாவட்டச் செயலக...

நாவற்குழியில் பறவைகள் சரணாலயம்

நாவற்குழி பகுதியில் பறவைகள் சரணாலயம் ஒன்றை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் வடமாகாண விவசாய மற்றும் சூழலியல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்தார். பறவைகள் சாரணாலயத்தை ஏற்படுத்துவதற்காக இப்பகுதியின் நன்னீர் அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டு, நன்னீர் சேகரிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. அதன் பின்னர்...

ஜெனிவா செல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை – சிவாஜிலிங்கம்

ஜெனிவாவுக்கு செல்வதற்காக அனுமதியை கோரி வடமாகாண ஆளுநரிடம் கடிதம் சமர்ப்பித்து இரண்டு வார காலமாகின்ற போதிலும் இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லையென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். வடமாகாண சபை தலைவரிடம் உரிய அனுமதி பெற்று...

வடக்கில் வனஜீவராசிகள் வனாந்தரங்களுக்கு பெயரிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

வடமாகாணத்தில் உள்ள வனஜீவராசிகள் வனாந்தரங்கள் 16 யையும் பெயரிடுமாறு ஜனாதிபதியும் சுற்றாடல்துறை அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவிடம் சூழலியலாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இந்த பெயரிடும் நடவடிக்கை கடந்த மூன்று வருடங்களாக தாமதமாகியுள்ளதாகவும் சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொருளாதார அமைச்சின் எதிர்ப்பு மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இந்த வனஜீவராசிகள் வனாந்தரத்தை பெயரிடமுடியாத நிலைமை என்பட்டதாகவும் அவர்கள், ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். ஐ.நா...

கரையோரப்பகுதிகளை சுத்தம் செய்ய முன்வருமாறு அரச அதிபர் அழைப்பு

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் எதிர்வரும் 21 ஆம் திகதி அனுட்டிக்கப்படுகின்றது. கரையோரப்பகுதிகளை சுத்தம் செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்தார். யாழில் சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று முப்படை மற்றும், பொலிஸ், பிரதேச செயலாளர்களுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர்...

வவுனியா நகரசபை பெண் அதிகாரியை பலர் முன்னிலையில் கெட்டவார்த்தைகளால் பேசிய உள்ளூராட்சி ஆணையாளர்!

நகரசபையின் சம்பள பிரச்சனையை சீர்செய்த பெண் அதிகாரியை அரசியல்வாதிகளுடன் கீழ்த்தரமாக நடந்தாக தெரிவித்து கெட்டவார்த்தைகளால் பேசியமையால் இறப்பதை தவிர வேறு வழி தனக்கு தெரியவில்லை என வவுனியா நகரசபையின் பெண் அதிகாரி ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அப் பெண் அதிகாரி கருத்து தெரிவிக்கையில், சுகாதார திணைக்களத்தில் 13 வருடமாக பணியாற்றிய...

சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு! ஊடகவியலாளர் சந்திப்பில் சம்பந்தன்!!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு'' - என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் மாலை திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பைத் தனது திருகோணமலை இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நடத்தினார். இந்தச்...

44 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுகளுக்கான செயலாளர்கள், நேற்று மாலை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபேகோன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் சில அமைச்சுக்கள் குறித்த விபரம் வருமாறு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சு - வீ.சிவஞானஜோதி நிதி அமைச்சு - ஆர்.எம்.எச்.சமரதுங்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு - எஸ்.எம்.கோதாபய ஜெயரத்ன...

யாழில் இன்னும் 43 இடம்பெயர்ந்தோர் முகாம்கள்

இலங்கையில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும், அங்கு வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்துவருவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இடம்பெயர்ந்தவர்களின் 43 முகாம்கள் இருப்பதாக தாங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. 1500 குடும்பங்களைச் சேர்ந்த 6000 பேர்...
Loading posts...

All posts loaded

No more posts