Ad Widget

பாடசாலை மைதானத்தை புனரமைத்து கொடுத்த இராணுவத்தினருக்கு மக்கள் பாராட்டு

அச்சுவேலி திரேசா மகளீர் கல்லுாரியில் பலாலி 52ம் டிவிசன் இராணுவத்தில் செய்த வேலைகள் அச்சுவேலிப் பகுதி மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அப் பாடசாலையின் மைதானம் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாது காணப்பட்டதால் அப் பாடசாலையின் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து பாடசாலை அதிபர் பல அரசியல்கட்சிகள், அமைப்புக்களுடனும் தொடர்பு கொண்டும் எந்தவிதமான பிரயோசனமும்...

பாடசாலை நேரத்தில் சீருடையுடன் தேவையற்றவிதத்தில் நடமாடும் மாணவர்கள் உடனடியாக கைதாவர்

தேவையற்றவிதத்தில் பாடசாலை சீருடையுடன் மாணவர்கள் வெளியில் திரிந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டு 14 நாள்களோ அதற்கு அதிகமாகவோ விளக்கமறியலில் வைக்கப்படுவர் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொலிஸாருக்கும் இடையில் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அதன்போதே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்....
Ad Widget

நூடில்ஸ்களுக்கு இரசாயன சோதனை

சகல வகையான நூடில்ஸ்களையும் இரசாயன சோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலிருந்து சேகரிக்கப்படும் நூடில்ஸ்களின் மாதிரிகள் கைதுதொழில் தொழிற்நுட்ப நிறுவகத்துக்கு சோதனைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. -

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க முயல்கிறார் ரணில்!

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசொன்றை உருவாக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார்'' எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, "இந்த அரசு உருவாகிவிட்டால், வடக்கில் ஒரு இராணுவ முகாம்கூட இருக்காது. அனைத்தும் அகற்றப்படும்" என்றும் கூறினார். இதேவேளை, "அன்று ஆயுதத்தால் வடக்கு, கிழக்கை மட்டும் கைப்பற்ற திட்டமிட்டிருந்த புலிகள் இன்று டொலரால்...

வட மாகாணத்தை கேந்திரமாக கொண்டு தேசிய விளையாட்டு விழா

இம்முறை வட மாகாணத்தை கேந்திரமாக கொண்டு தேசிய விளையாட்டு விழா 2016வை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 8 போட்டிகளை யாழ் விளையாட்டு கட்டிடத் தொகுதியிலும் மேலும் 14 போட்டிகளை கிளிநொச்சி விளையாட்டுக் கட்டிடத் தொகுதியிலும் நடத்தப்படவுள்ளன. ஹொக்கி, ஜிம்னாஸ்டிக், மற்றும் கரையோர கரப்பந்து போட்டிகள் யாழ் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வௌியே நடத்த...

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் விவாதம்!

தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக இன்றும் (23) நாளையும் (24) சபை பிற்போடும் சந்தர்ப்பத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என அவைத் தலைவர்- அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இவ்விவாதத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எதிர்ப்புத் தெரிவித்தார். பாராளுமன்றின் ஏனைய கட்சியினர் விவாதம் மேற்கொள்ளப்படவேண்டும் என பிரதி சபாநாயகரிடம் தெரிவித்துள்ளனர் என அவைத் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய இன்றும்...

கிளி. தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

நிரந்தர நியமனம் கோரி கிளிநொச்சி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தினார்கள். யாழ். செம்மணி வீதியில் உள்ள வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தை நேற்று காலை 10 மணி அளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தினார்கள். மிக நீண்ட காலமாக நிரந்தர நியமனம் கிடைக்காமல் குறைந்த ஊதியத்திற்கு தொண்டராசிரியராகவே கடமையாற்றி...

அமைச்சர் ஹக்கீமின் அறிவிப்பால் இரணைமடு விவசாயிகள் அதிர்ச்சி!

இரணைமடு குடுநீர் விநியோகத் திட்டத்தை இரண்டு ஆண்டு இரண்டு ஆண்டுகளில் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உத்தரவிட்டிருப்பதாக நீர் வழங்கல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார். இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குவதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இரணைமடு குடிநீர்த் திட்டத்தை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணம் பண்ணைப்...

யாழ். முஸ்லிம்களின் வீட்டுத்திட்ட பிரச்சினை தீர்க்கப்படும் – ஹக்கீம்

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் இந்திய வீட்டுத்திட்டம் பெறுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்தார். யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமை (22) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், யாழ். மஸ்ஜித் முஹம்மதியா பள்ளிவாசலில் யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம்களுடன் கலந்துரையாடினார். முஸ்லிம் மக்களின் குடிநீர் பிரச்சினை,...

உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நடேசன், புலித்தேவன் உறவினர்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர்கள் சிலர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எதிர்கொண்ட சம்பவங்கள் தொடர்பில் அவர்களது உறவினர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை தலைவர் நடேசன் மற்றும் மூத்த தளபதி புலித்தேவன் ஆகியோரின் உறவினர்கள் இவ்வாறு விளக்கம் அளிக்கவுள்ளனர். இறுதிக் கட்ட யுத்தத்தில் சரணடைந்து...

உலக அழிவின் ஆறாம் கட்ட காலம் ஆரம்பம்!!

உலக அழிவின் ஆறாம் கட்ட காலம் தொடங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. உலகின் மிகப்பெரிய உயிரினமாக காணப்பட்ட டைனோசர் இனம் அழிவடைய ஆரம்பித்த காலத்தில் இருந்தே, உலகின் அழிவு காலம் ஆரம்பமானது. இதன் பல்வேறுகட்டங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன. இதன்படி தற்போது அதன்...

த.தே.கூ ஆசனப்பங்கீடு யாழ், திருமலை இணக்கம்; வன்னி, மட்டு மீண்டும் இழுபறியில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப்பங்கீடு தொடர்பில் வன்னித் தேர்தல் மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் ஆகியவற்றில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. ஏனைய மாவட்டங்களின் ஆசனப் பங்கீடு தொடர்பில் நேற்று இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. த.தே.கூ அங்கத்துவ கட்சியின் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது . இதன்போதே இணக்கம் காணப்பட்டது. மேலும், விரைவில் நாடாளுமன்ற தேர்தல்...

சுதந்திரக் கட்சியினர் சிலரை திருப்திப்படுத்த மைத்திரி அரசு தற்போது செயற்படுகிறது! அமைச்சர் ஹக்கீம் யாழ்ப்பாணத்தில் குற்றச்சாட்டு!

சிறுபான்மை மக்களின் வாக்குகள் மூலம் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால அரசு தற்போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகச் செயற்படுகிறது. எனவே சிறுபான்மை மக்களைப் பாதிக்கக்கூடிய 20ஆவது திருத்தத்தை அப்படியே நடைமுறைக்கு கொண்டு வந்தால் நாம் அனைவரும் இணைந்து எதிர்ப்போம். இவ்வாறு தெரிவித்துள்ளார் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம். தேசிய நீர்வழங்கல்...

சுமந்திரனும் டக்ளசும் மின்னலில்

இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு யோகா பயிற்சித் திட்டம்

இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் யோகா பயிற்சித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்,நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். யாழ்.இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் முதலாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி மாணவர்களுக்கான யோகா பயிற்சி, யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து...

யாழில் பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட 17 பேர் விளக்கமறியலில்

யாழ். கொடிகாமம் பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தில் பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொடிகாமம் - தவசிக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியும் விற்பனையும் இடம்பெற்று வருவதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதன் பிரகாரம் அப்பகுதிக்கு சென்ற பொலிசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரை...

கனடாவில் இலங்கையர்களின் குடியுரிமை பறிபோகுமா?

கனடாவின் புதிய குடிவரவு, குடியகல்வு சட்டத்தினால் பல இலங்கையர்கள் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். இதன்படி ஒரு இலட்சத்து 40,000 இலங்கையர்கள் கனேடிய குடியுரிமையை இழக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சட்டத்தின் பிரகாரம் கனடாவில் பிறந்தவர்கள் தவிர, ஏனையவர்களுக்கான குடியுரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்கள் இரண்டாம் நிலை பிரஜைகளாக நடத்தப்படுவர். கனேடிய மக்களை பாதுகாப்பதே இந்த புதிய சட்டத்தின் நோக்கம்...

த.தே.கூ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 20வது திருத்தச் சட்டம் குறித்து ஆராய்வு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று மாலை வவுனியாவில் அமைந்துள்ள சொர்க்கா விடுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜாவும், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன்-ஜனா ஆகியோரும் ஈழ மக்கள் புரட்சிகர...

யாழில் சர்வதேச யோகாதினம்!

யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகாதினம் இன்று(21) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுமுகமாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகமானது மாபெரும் யோகாபயிற்சி நிகழ்வொன்றினை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இதனடிப்படையில் இன்று காலை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இந்திய துணைதூதுவர் ஏ.நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்த யோகா தின நிகழ்வில் கல்வி...

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக அச்சுவேலி வடக்கு மடத்தடி பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த வாரம் முறைப்பாடு செய்துள்ளார். தனது 14 வயது மகளை அயல்வீட்டுக்காரர் பாலியல் துஸ்பிரயோகம் செய்தர் என்ற பொய்யான வதந்தியை நம்பி யாருடைய முறைப்பாடும் இல்லாமல் பொலிஸார், மகளை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்றமை மற்றும் நீதிமன்ற...
Loading posts...

All posts loaded

No more posts