வேலையற்ற பட்டதாரிகள் யாழ். செயலகம் முன் இன்று போராட்டத்துக்கு ஏற்பாடு!

வட­மா­காண வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கு விரைவில் அர­சாங்க வேலை­வாய்ப்பை வழங்கக் கோரிய கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முற்­பகல் 1௦ மணி­ய­ளவில் யாழ்.மாவட்டச் செய­ல­கத்­திற்கு முன்­பாக இடம்­பெ­ற­வுள்­ளது. வட­மா­கா­ணத்­திற்­குட்­பட்ட 5 மாவட்­டங்­க­ளையும் உள்­ள­டக்­கிய வேலை­யில்லா உள்­வாரி, வெளி­வாரி, தேசிய உயர் தொழில்­நுட்ப பட்­ட­தா­ரிகள் அனை­வ­ரையும் யாழ். மாவட்டச் செய­ல­கத்­திற்கு முன்­பாக ஒன்றுகூடு­மாறு வட­மாகாண வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் சமூ­கத்தின்...

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு விசேட பஸ் சேவை

நல்லூர்க் கந்தன் ஆலய திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் வெள்ளவத்தைக்கும் யாழ்ப்பாணத்துக்குமான விசேட பஸ் சேவை இலங்கை போக்குவரத்துச் சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு மாகாண சாலை முகாமையாளர் தெரிவித்தார். யாழ். சாலையும் காரைநகர் சாலையும் இணைந்து நடாத்தும் இச்சேவையில் தினமும் இரவு 8.30 மணிக்கு...
Ad Widget

ஜெய்ப்பூர் நிறுவனத்தினூடாக உதவிகளைப்பெற்றுக் கொள்ளமுடியும்

யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தினூடாக வறிய நிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகள் உதவிகளைப்பெற்றுக் கொள்ளமுடியும் என நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் திருமதி ஜெ.கணேசமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நிறுவனத்தினூடாக வறுமைநிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்குரிய தேவைக்கேற்ப செயற்கை அவயவங்கள் நடமாட உதவும் உபகரணங்கள் மற்றும் உளவள சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை...

குறுந்திரைப்பட போட்டிக்கு ஆக்கங்கள் கோரல்

வடமாகாண சுகாதார சுதேச மருத்துவ சமூக சேவைகள் புனர்வாழ்வு நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஊட்டும் குறுந்திரைப்படங்களைத் தயாரிப்பது தொடர்பான போட்டிக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

பொது வேட்பாளர் தெரிவுக்கு வைபரே உதவியது

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வகித்த வகிபாகம் அளப்பரியதாகும். தன்னை பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட விதம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் 69ஆவது மாநாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றும் போது சிலவிடயங்களை அம்பலப்படுத்தினார். இந்நிலையில், இந்தியாவுக்கு விஜயம்...

சீனா உதவியிருக்காவிடின் யுத்தம் முடிந்திருக்காது

சீனா உதவியிருக்காவிடின் 30 வருடங்களாக நிலவிய யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்திருக்க முடியாது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். சீனாவின் பிங்கூவா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதேபோல, சீனாவுடன் இருக்கின்ற தொடர்பை தொடர்ந்தும் பேணவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி சீனாவினால் எம்நாட்டுக்கு செய்ததை ஒருபோது மறக்கமுடியாது என்றும் அவர்...

வட்டு. மத்திய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்தது!!

யாழ்.வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் புதிய அதிபரை மாற்றுமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் அதிபரை எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதியில் மாற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து அந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இதற்கு தீர்வுகாணுமாறு கோரி...

ஜெனீவா செல்லும் ததேகூ உறுப்பினர்கள்

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை எதிர்வரும் 30ம் திகதி வெளியிடப்படவுள்ளதை முன்னிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகும் ஐநா மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளின் காலப் பகுதியில் இந்தக் குழு ஜெனிவாவில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள...

தேர்தல் காலத்தில் நடைபெற்ற சில உண்மைகளை போட்டுடைத்த ஜனாதிபதி

ஜனவரி 5ம் திகதி இரவு மருதானையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி பிரசார நடவடிக்கைகளின் போது, பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் செல்ல முடியாது எனக் கூறி, பாதுகாவலர்கள் மற்றும் சாரதி தன்னை வீட்டில் தனியாக விட்டுச் சென்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இச் சந்தர்ப்பத்தில் ரணில் விக்ரமசிங்கவே தனது வீட்டுக்கு வந்து தன்னை கூட்டத்துக்கு...

காணாமல்போனோர் பற்றிய கடந்தகால விசாரணைகள் தொடர்பில் ஐநாவுக்கு அறிக்கை

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆணைக்குழுக்களின் விசாரணைகள், நீதிமன்ற விசாரணைகள் தொடர்பில் சிஎச்ஆர்டி எனப்படும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் அறிக்கை ஒன்றை தயாரித்து, ஐநாவுக்கும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கும் கையளித்திருக்கின்றது என பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பு கூறல் விடயத்தில் ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ள...

திருகோணமலையில் 07ம் திகதி திங்கட்கிழமை பி.ப 3.00 மணிக்கு கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்

சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றின் ஊடாகவே விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், எந்த வடிவிலானதொரு உள்ளக பொறிமுறை மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை என்பதனை வெளிப்படுத்தியும் இவற்றினை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்...

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும்! – கஜேந்திர குமார்

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச விசாரணை பொறிமுறை ஊடாகவே நீதி கிடைக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குற்றம் செய்தவர்களே குற்றம் குறித்து விசாரணை செய்ய வேண்டியதில்லை. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் மக்கள்...

மைத்திரி வசித்த வீட்டுக்கு குடிபெயருகிறார் மஹிந்த!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்திய இல்லம் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷவுக்கான உத்தியோகபூர்வ இல்லமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் திருத்த வேலைகள் சில இருப்பதனால் மஹிந்த ராஜபக்‌ஷ இன்னமும் அங்கு குடியேறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு விஜயராம மாவத்தை உள்ள வீடு ஒன்றே முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வமாக கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது என்பது...

அடுத்தவாரம் ஜனாதிபதியின் கைக்கு வருகிறது ஐ.நா அறிக்கை!

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் முற்பிரதி அடுத்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கை கிடைத்தவுடன் அதற்குப் பதிலளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அரசாங்கத்தினால் இரண்டு குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா விசாரணை...

மஹிந்த பிரதமராகியிருப்பின் பாரியளவில் கொலைகள் இடம்பெற்றிருக்கும்!

அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக அதிகாரத்துக்கு வந்திருப்பாரேயானால், இலங்கையில் பாரியளவில் அப்பாவிகள் கொலை செய்யப்படும் அனுபவம் ஏற்பட்டிருக்கும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொலிஸ்...

மன்னாரில் பயறு அமோக விளைச்சல்

மன்னார் மாவட்டத்தில் சிறுபோகத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட பயறுச்செய்கை அமோக விளைச்சலைக் கண்டிருக்கிறது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (04.09.2015) மன்னார் நானாட்டனில் இடம்பெற்ற வயல்விழாவில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்துள்ளார். பெரும்போகத்தில் நெற்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளில் பெரும்பாலானோர் சிறுபோகத்தில் ஈடுபடுவதில்லை. நெற்செய்கைக்கு அதிகளவில் நீர் தேவைப்படுவதால் சிறுபோகத்தில் அரிதாகவே நெற்செய்கை...

சர்வதேச விசாரணை முடிவடைந்தமை நீதியரசருக்கு புரியாதிருந்தால் அது ஆச்சரியம் ! – மாவை

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மீது வட மாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக தேர்தல் அறிக்கைக்கு மாறான கருத்தையே தெரிவித்திருந்தார் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தோற்கடிக்கப்படவேண்டும் என்ற வகையில் அவரின் கருத்து அமைந்திருந்தது என்றும் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன் அவரை...

மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சி பத்மநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிறியதொரு கிணறு காணப்படுகிறது. மூன்றடிக்கு மூன்றடி நீல அகலங்களுடன் சதுரவடிவிலான இந்த...

அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வருகை தருவது தொடர்பில் புதிய ஆட்சிபீடத்தை எற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவேண்டும் என வடமாகாண மீனவ சம்மேளன அமைப்பு தெரிவித்துள்ளது. வடமாகாண மீனவ சம்மேளன அமையத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட மீனவ கடற்றொழில் அமைப்புகளின் தலைவர்களுடான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது. யாழ் நீரியல் வளத்...

எதிர்க்கட்சித் தலவர் பதவியை இனப்பிரச்சினைத் தீர்வுக்காக பயன்படுத்த வேண்டும்! – சிவாஜிலிங்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் மற்றும் பிரதிக் குழுக்களின் தலைவர் பதவிகளை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார். மாறாக நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டது என்பதை சர்வதேச கண்களுக்கு காட்டி சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தினை பாதுகாக்கும்...
Loading posts...

All posts loaded

No more posts