Ad Widget

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை உடன் கைது செய்க: நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

யாழ். மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக செயற்படுபவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளம்செழியன் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக சட்டவிரோத செயல்கள் மற்றும் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. வாள்வெட்டு, தெருச் சண்டை, குழுச் சண்டை, பெண்கள் மீதான வன்முறைகள், பாலியல் சேட்டைகள், களவு, கொலை, கடத்தல், என்பன அதிகரித்துள்ளன.

ஆகவே இவற்றினைக் கட்டுப்படுத்தி சமூக அமைதியை ஏற்படுத்தும் வகையில் குறித்த குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Posts