Ad Widget

யாழ் நகரில் ஆசிரியர்கள் மீது இளைஞர் குழு தாக்குதல்

யாழ்.நகரப்பகுதியில் வைத்து இனந் தெரியாத நபர்களினால் மோசமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தம்பதிகள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியினைச் சேர்ந்த யாழ்.நகரில் உள்ள பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களான மாதவமணிவண்ணன் (வயது 44), மாதவமணிவண்ணன தர்சனி (வயது 41) என்னும் தம்பதிகளே மேற்படி தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களாவர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,

நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு குறித்த தம்பதிகள் சென்றுள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் இவர்களைப் பார்த்து தகாத வார்த்தைப் பிர யோகங்களை பிரயோகித்து சேட்டை யில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரடைந்த தம்பதிகள் இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதால் தம்பதிகள் இருவரையும் இளைஞர் குழு மிக மோசமாகத் தாக்கி விட்டுதப்பிச் சென்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், காயப்பட்ட இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன் பின்னர் அப்பகுதியில் பொலிஸார் தேடுதல் நடத்தியபோதும் தாக்குதல் நடத்தியவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts