இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இன்னும் விடுவிக்கப்படாத பொது மக்களின் காணிகளை விடுவிக்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்துவந்துள்ள பொதுமக்களின் 615 ஏக்கர் காணிகளை மீண்டும் உரிமையாளர்களிடம் கையளித்துள்ளமை...

முகாம்களுக்கு நா.மன்ற உறுப்பினர்கள் வரவேண்டும் : ‘இவர்கள் முகாம் பிள்ளைகள்’ என்ற அடைமொழி வேண்டாம்

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி முகாம்களை, நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வந்து பார்வையிடவேண்டும் என நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் சார்பாக இடம்பெயர்ந்த மக்கள் பிரதிநிதியொருவர் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விசேட...
Ad Widget

உண்மைக்கு முதலிடம் வழங்க வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பு – ஜனாதிபதி

முழுமையான பத்திரிகை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடிப்படைவாதிகளின் குறுகிய நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இடமளிக்காது உண்மைக்கு முதலிடம் வழங்க வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரபால தெரிவித்தார். நாட்டின் சுதந்திரத்தையும் ஊடகத்துறையின் சுதந்திரத்தையும் முழுமையாக உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்போடு இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதான பத்திரிகைகளின் தலைப்புகளை பிரசுரிக்குமாறு கட்டளை...

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற தெலைபேசி இலக்கத்திற்கு தேவையற்ற விடயங்கள் சம்பந்தமான அழைப்புக்களே அதிகம் கிடைப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 1929 தெலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கக் கூடிய அழைப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும், எனினும் அதில் அதிகமானவை சம்பந்தமில்லாத அழைப்புக்கள் என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குறித்த தொலைபேசி...

தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த நாகை மாவட்டத்தை சேர்ந்த 19 மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படையினரின் உதவியுடன் கரையோர பாதுகாப்பு திணக்களப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் இந்திக தி சில்வா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட...

கிளி கனகபுரம் கிறிக்கெற்போட்டியை கஜேந்திரகுமார் ஆரம்பித்து வைத்தார்

கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாபெரும் மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. மேற்படி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து...

போதனாசிரியர்களிற்கான விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தொழில்பயிற்சிநிலையங்களுக்கு பின்வரும் கற்கை நெறிகளை கற்பிக்கும் போதனாசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றது. சமையற்கலை, வெதுப்பாளர், அறை ஒழுங்குபடுத்துநர், மின்மோட்பர் மீள்முறுக்குநர்(வைண்டிங்), உணவுப் பரிசாரகர்,நீர்க்குழாய்பொருத்துநர் (பிளம்பிங்), தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்,முன்பள்ளி ஆசிரியர் அழகுக்கலை வல்லுனர், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடை வடிவமைப்பாளர் அலுமினியம் பெருத்துநர். கல்வித்தகைமை-கபொத (சாதாரண...

இந்திய, தென்பகுதி மீனவர்களின் அத்துமீறலை தடுக்க வேண்டும்! – சுமந்திரன்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மீன்பிடிக்கும் தென்பகுதி மீனவர்களின் செயற்பாடுகளை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக ஜே. வி. பி. கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில்...

மீனவர் பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் கூட்டு ரோந்து, ஜெயலலிதாவுடன் பேச்சு! – சம்பந்தன் வலியுறுத்தல்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுடனும் இலங்கை அரசு பேச்சுகளை நடத்த வேண்டும் என்றும், இந்தியக் கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் ஆலோசனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் ஏற்படும்...

வெள்ளைக்கொடியுடன் சென்று குடியேறுவோம்

எம்மை விரைவில் மீள்குடியேற்றம் செய்யாவிடின். ஒரு கையில் எமது காணிக்கான உறுதியுடனும், மறுகையில் வெள்ளைக் கொடியையும் தாங்கி உயர்பாதுகாப்பு வலய வேலிகளைத் தாண்டிய எமது சொந்த நிலங்களுக்குச் சென்று குடியமருவோம் என வலிகாமம் வடக்கில் இருந்து நலன்புரி நிலையத்தில் வசிக்கும் முத்தையா சிவானந்தன் தெரிவித்தார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள்...

தமிழ் பிரதிநிதி பொய்கூறும் போது இராணுவம் பொய்கூறுவது பெரிய விடயமல்ல – ஹர்மன் குமார

வடக்கில் ஒரு சிறு துண்டு நிலத்தையும் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கவில்லையெனவும், இராணுவம் நிலைகொண்டுள்ள காணிகள் அனைத்தும் அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகள் என இராணுவப் பேச்சாளர், தென்னிலங்கை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஜெனீவா சென்று பொய் கூறும் போது, அந்த இராணுவ ஊடக பேச்சாளர் பொய் கூறியது...

யாழ்ப்பாண வான் பரப்பில் மீண்டும் கிபீர் விமானம்

யாழ்ப்பாணத்தின் வான் பரப்பில், வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் 1.45 மணியளவில் கிபீர் விமானம் பறந்துள்ளது. யுத்த காலத்தில் அடிக்கடி கிபீர் விமானம் யாழ்ப்பாண வான் பரப்பில் பறந்திருந்து கடந்தக் காலங்களில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று பறந்துள்ளது.

இலஞ்சம் பெறும்போது கையும்களவுமாக சிக்கிய கிராமசேவகர்

வதிவிட சான்றிதழ் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விஷ்வமடு கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விஷ்வமடு பிரதேசத்தில் வசிக்ககூடிய நபர் ஒருவரின் உறவினருக்கு அந்த வீட்டில் குடியிருந்து வருவதாக வதிவிட சான்றிதழ் ஒன்றை...

கொழும்பில் தடையின்றி கள்ளுக் கடைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பு

கொழும்பு நகருக்குள் தடையின்றி கள்ளுக்கடைகளை ஆரம்பிப்பதற்கு கொழும்பு பிரதேச செயலாளர் வழங்கியுள்ள அனுமதியை ரத்துசெய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தர்ம ஷக்தி அமைப்பு இந்த மனுவை தாக்கல்செய்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் மாதம்பாகம அச்சாஜி தேரர் தெரிவித்தார். கொழும்பு நகரில் தற்போது 5 கள்ளுக்கடைகளை நடத்துவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. தற்போது...

தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பிலும் விசாரணை துவங்க வேண்டும் – பாரதி

உலகில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படும் சூழல் தொடர்பான சிபிஜே- என்ற ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் இம்முறை அறிக்கையில் இலங்கை 6-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இலங்கை 4-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு முதலிடத்தில் சோமாலியாவும் இரண்டாவது இடத்தில் இராக்கும் உள்ளன. சிரியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கொல்லப்பட்ட...

உத்தரப்பிரதேச தலித் குடும்ப ஆடை களைவு: நடந்தது என்ன?

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்றொரு பழமொழி உண்டு. இந்த பழமொழி சமூக வலைத்தளங்கள் விஷயத்தில் தற்போது உண்மையாகியிருக்கிறது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை திடீரென்று பலர் ஒரு ஆணும் பெண்ணும் நிர்வாண நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ளத் துவங்கினார்கள். அந்த காட்சி உத்தரப்பிரதேசத்தில் இருக்கும்...

மன்னார் விவசாயிகளுக்கு நன்கொடையாக 3 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உள்ளீடுகள் அமைச்சர் ஐங்கரநேசன் வழங்கி வைத்தார்

வடமாகாண விவசாய அமைச்சின் குறித்து ஒதுக்கப்பட்ட நன்கொடை நிதியில் இருந்து 3.3 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உள்ளீடுகளை மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வழங்கி வைத்துள்ளார். இப்பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (09.10.2015) உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட...

மன்னாரில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

விஸ்வமடுவில் இராணுவத்தினரின் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்றுள்ள பெண்கள் அமைப்பு ஒன்று, மன்னாரில் 2001ம் ஆண்டு இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்கு இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கை மையமாகக் கொண்டு இயங்கும் 8 பெண்கள் அமைப்புக்களின் கூட்டமைப்பான “வான்” இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாட்டை செய்துள்ளது....

சதாம், கடாபியின் கதியே மஹிந்தவுக்கும் ஏற்பட்டிருக்கும்! – எஸ்.பி.திசாநாயக்க

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றி அவரது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தால் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபி,ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேன் ஆகிய தலைவர்களுக்கு ஏற்பட்டிருந்த நிலையே இன்று அவருக்கும் ஏற்பட்டிருக்கும் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

சுன்னாகம் பொலிஸாரின் ரோந்தில் 14 பேர் கைது!!

சுன்னாகம் பொலிஸார் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு மேற்க் கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது பலவேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 14 பேர் கைது செய்யப்பட்டனர். சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸ்மந்த தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் ஏழாலை பகுதியில் மது போதையில் பொது மக்களுக்கு இடையூறாக நடந்து கொண்ட நான்கு பேரையும்...
Loading posts...

All posts loaded

No more posts