Ad Widget

தேர்தல் சட்டங்களை மீறிய 115 பேர் கைது

தேல்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் இதுவரை 92 பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு தெரிவிக்கின்றது. இதுதவிர தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 506 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் தேர்தல் முறைப்பாட்டு...

ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் மாணவனிடம் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நேற்று (24) காலை இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது, மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மாணவர் படையணியில் முன்வரிசையில் நின்றிருந்த மாணவர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கியில்,...
Ad Widget

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காகவே நாம் போராடுகின்றோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள்செயற்படுகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (23) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்அறிமுகமும் ஊடகவியலாளர்சந்திப்பும் நடைபெற்றது. அவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், தேர்தல்...

தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுங்கள்: – பிரதமர் வி.உருத்திரகுமாரன்

சிறிலங்காவின் பொதுத்தேர்தலில் தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு மக்கள் தமது பிரதநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார். இத் தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய ஐந்து கொள்கை நிலைப்பாடுகள் சிலவற்றை மக்கள்...

தேர்தல் சுவரொட்டி ஒட்டிய பூசகர் கைது

வல்வெட்டித்துறை, கெருடாவில் பகுதியில் தேர்தல் சுவரொட்டி ஒட்டிய பூசகர் ஒருவரை வியாழக்கிழமை (23) இரவு கைது செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். கட்சி ஒன்றின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டி ஒட்டிய பூசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு தொகை சுவரொட்டிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிவாஜிலிங்கத்தின் செயல் கோமாளித்தனமானது – சி.வி.கே

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுவது கோமாளித்தனமான செயல் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். சிவாஜிலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றமை மற்றும் வியாழக்கிழமை (23) நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் கலந்து கொண்டமை தொடர்பில் அவைத்தலைவரிடம் விளக்கம் கேட்டவேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

யாழ் பல்கலைக்கழகத்தில் கொடூரம்!!

யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட2ஆம் ஆண்டில் கற்கும் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கேவலமான ராகிங் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழகத்தின் 2ஆம் வருட விஞ்ஞான பீட மாணவர்கள் கேவலமான பகிடிவதை ஒன்றை மேற்கொள்வதற்காக 1ஆம் வருட மாணவர்களை வெட்டாந்தரையில் முழங்காலில் மண்டியிட்டு இருக்குமாறு செய்துள்ளனர். இதன் பின்னர்...

யாழ்ப்பாணத்துக்கு பிரதமர் விஜயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கிலியன் தோப்பில் 31ஆம் திகதி மாலை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் அன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளார். அன்றைய தினம் காலை மன்னாரிலும், மதியம் வவுனியாவிலும் நடைபெறவுள்ள தேர்தல்...

இந்திய மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை

இலங்கை கடற்பரப்பில் விரிக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவதும் தடை செய்யப்பட்ட வலைகளை பிரயோகிப்பதுமான இந்திய மீனவர்களின் செயற்பாடுகள் நீடிக்குமாயின், இந்திய மீனவர்கள் தாக்குதலுக்குட்டுத்தப்படுவர் என இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலைமன்னாரில் நடைபெற்ற இந்திய மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாட்டு மீனவர்களுக்கிடையிலான கூட்டமொன்றின் போதே, இலங்கை மீனவர்கள் தங்களை எச்சரித்ததாக, தமிழ்நாடு மீனவ சங்க...

தம்பிராசாவின் மகனை காணவில்லை

அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவின் மகன் திருவளவன் (வயது 18) என்ற இளைஞனை நேற்று வியாழக்கிழமை (23) மாலை 2 மணி முதல் காணவில்லையென அவரது தந்தையால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாண நகரத்திலுள்ள தனது அலுவலகத்தில் இருந்து, அரசியல் பணியை மேற்கொண்டிருந்த தனது மகன் காணாமற்போயுள்ளதாக தந்தை...

அவுஸ்திரேலிய விபத்தில் இரு இலங்கைத் தமிழர்கள் பலி

அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். டார்வினின் நாகரா நகரில் ட்ரவர் வீதியில் இவர்கள் பயணம் செய்த கார் மரத்துடன் மோதியே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலியானவர்கள் கடந்த ஐந்து...

தங்குமிட விடுதிகளில் பொலிஸ் சோதனை

யாழ். நகரிலுள்ள தங்குமிட விடுதிகள் அனைத்தும் இன்றிலிருந்து தொடர்ச்சியாக பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்படும் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எப்.யு.கே. வூட்லர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண், பெண் பிள்ளைகளின் ஒழுக்கத்தினையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக யாழ். நகரிலுள்ள ஹோட்டல், தங்குமிட விடுதி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல்...

யாழ்.தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்.தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தமது கல்லூரியில் நிலவி வருகின்ற ஒழுங்கீனங்களையும் பிரச்சினைகளையும் உடனடியாக சீர் செய்ய வேண்டும் என கோரி கல்லூரி வளாகத்தில் நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ். தொழில்நுட்பக் கல்லூரியில் சுகாதார குறைபாடுகள் காணப்படுகின்றன என கல்லூரி விரிவுரையாளர்களாலும் மாணவர்களாலும் கல்லூரி நிர்வாகத்திற்கு பலமுறை தெரியப்படுத்தி வந்ததாகவும் இது வரை காலமும்...

மாற்றம் முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும் – கஜேந்திரகுமார்

காலம் காலமாக ஏமாற்றப்படும் நிலையினை மக்கள் புரிந்துகொள்வதோடு மாற்றம் ஒன்று தேவை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று வியாழக்கிழமை (23), யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர்...

வடமாகாண சபை அமர்வு ஒக்டோபர் 25வரை ஒத்திவைப்பு

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வட மாகாணசபையின் அமர்வு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபைக் கட்டிடத்தில் நேற்று வியாழக்கிழமை (23) ஆரம்பமான மாகாணசபையின் 32ஆவது அமர்வு, முற்பகல் இடம்பெற்ற தேநீர் இடைவேளையுடனேயே ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.

கொடிகாமம் விபசார விடுதியை நடத்த பாதுகாப்பு புலனாய்வாளர்கள் ஒத்துழைப்பு!!

கொடிகாமம் பகுதியில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட விபசார விடுதி, பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடனேயே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது என சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் தெரிவித்தார். கொடிகாமம் விபசார விடுதியில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட அவ்விடுதியின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகிய மூவரும் இம்மாத முற்பகுதியில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட...

காக்கைத்தீவு திண்மக்கழிவால் மக்களுக்கு வயிற்றோட்டம்

வலிகாமம் தென்மேற்கு, கல்லுண்டாய், காக்கைத்தீவு பகுதியில் தொடர்ந்து கொட்டப்படும் திண்மக்கழிவு, மலக்கழிவுகளால் ஆனைக்கோட்டை, நவாலி ஆகிய கிராமங்களில் வசிக்கும் சிறுவர்கள் உட்பட 55பேர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.றஜீவ் வியாழக்கிழமை (23) தெரிவித்தார். இதனையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான அறிவூட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய...

தமிழ் மக்களின் பலத்தை சிதறடிக்க சதி: சுமந்திரன்

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறித்த தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ள தருணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் போலியான வேறுபாடுகளை சந்தைப்படுத்தி, அவர்களின் பலத்தை சிதறடிக்க சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) சட்டநாதர் வீதியிலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் காலை 9 மணிக்கு இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சமகால தேர்தல் தொடர்பாக ஆராயப்படவுள்ளது. இக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊறணி பகுதியில் தலையில் காயங்களுடன் ஒருவர் மீட்பு

வல்வெட்டித்துறை ஊறணி பகுதியில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து, தலையில் காயங்களுடன் மயங்கிய கிடந்த ஆண் ஒருவரை மீட்டு, ஊறணி பிரதேச வைத்தியசாலையில் வியாழக்கிழமை (23) அனுமதித்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு தலையில் இரத்தக்காயங்களுடன் மீட்கப்பட்டவர், அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய செல்லக்குட்டி என பொலிஸார் தெரிவித்தனர். இரவு 12 மணியளவில் வீதி...
Loading posts...

All posts loaded

No more posts