Ad Widget

சமூக வலை­த்த­ளங்­களில் தனிநபரை, இழி­வு­ப­டுத்தும் பதி­வேற்­றங்­க­ளுக்கு எதி­ராக புதிய சட்­ட­ம்

சமூக வலை­த்த­ளங்­களில் தனி நபரை இழி­வு­ப­டுத்தும் வகை­யி­லான பதி­வேற்­றங்­க­ளுக்கு எதி­ராக புதிய சட்­ட­மொன்றை அர­சாங்கம் கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

மேலும் வழக்­கு­களின் கால­தா­மதத்தை குறைப்­ப­தற்கு விசேட நட­வ­டிக்­கை­களை அரசு முன்­னெ­டுக்­க­வுள்­ளது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

நீதி அமைச்சில் நேற்று (19) இடம்­பெற்ற சட்டம் ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­கு­ழுக்­க ளின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான கூட்­டத்­தொ­ட ரின் பின்­னரே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தற்­போ­தைய காலத்­திற்கு ஏற்ற வகையில் புதிய சட்­டங்களை உரு­வாக்­கு­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ளது. அதே­போன்று அமு­லி­லுள்ள சட்­ட­திட்­டங்­களை மறு­சீ­ர­மைக்கும் வேலை ­திட்­டங்­களும் மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றன.

அத்­தோடு தற்­போது அதி­க­ள­வி­லான வழக்­குகள் மிகவும் கால­தா­மதம் அடை­வதினால் குறித்த வழக்­கு­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு அவ­சர நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இவற்றில் மிகவும் முக்­கி­ய­மான வழக்­கு­க­ளுக்கு விசேட அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான ஏற்­பா­டு­களும் சட்டம் ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­கு­ழுவில் ஆரா­யப்­பட்­டது.

அத்­தோடு தற்­போது அதி­க­ளவில் சமூக வலை­த்த­ளங்­களில் தனி நப­ரொ­ரு­வரை இழி­வு­ப­டுத்தும் முக­மான பல்­வேறு பதி­வேற்­றங்கள் அதி­க­ளவில் இடம்­பெற்று வரு­கின்­றன. இதன்­படி இவ்­வா­றான பதி­வேற்­றங்­களை முன்­னெ­டுப்­போ­ருக்கு எதி­ராக புதிய சட்­ட­மொன்றை அர­சாங்கம் கொண்டு வர­வுள்­ளது.

இதற்­கான ஏற்­பா­டு­க­ளையும் நாம் முன்­னெ­டுக்­க­வுள்ளோம்.மேலும் மோட்டார் வாகன திணைக்­க­ளத்­திற்­கான. சட்ட­திட்­டங்­க­ளிலும் திருத்­தங்கள் கொண்டு வரு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம் என்றார்.

Related Posts