Ad Widget

தமிழினிக்கு கஜேந்திரன் அஞ்சலி

தமிழ் மக்களின் விடிவுக்காக சுமார் இரண்டு தசாப்தங்களாக போராடி இன்று மீளாத்துயிலில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளராகவிருந்த தமிழினி அவர்களது புகழுடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் அஞ்சலி செலுத்தினர்.

பரந்தன் சிவபுரத்தில் உள்ள தமிழினி அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது புகழுடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், உபதலைவியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திருமதி பத்மினி சிதம்பரநாதன், கட்சியின் வவுனியா மாவட்ட பெண்கள் விவகாரங்களுக்கு பொறுப்பான திருமதி சிவரதி ராஜ்குமார் ஆகியோர் தமது வணக்கங்களை செலுத்தினர்.

DSC_0044

DSC_0045

DSC_0046

DSC_0047

Related Posts