Ad Widget

“பாலியல் தொழிலுக்கு, அங்கீகாரம் வழங்குங்கள்”

பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அமைப்பு என்று தம்மை கூறிக்கொள்ளும் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் தமது தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையிலான ஊடக சந்திப்பு (கொழும்பு) ஒன்றில் அவர்கள் நேற்று (19) தமது கோரிக்கையை முன்வைத்தனர்.

குறித்த அமைப்பின் இணை தலைவரான பி மகேஸ்வரி என்பவர் உரையாற்றுகையில், தமது கணவர் காரணமாகவே தாம் இந்த தொழிலுக்கு செல்ல நேரிட்டதாக குறிப்பிட்டார்.

தமது கணவர் தம்மை இரண்டு குழந்தைகளுடன் விட்டுச் சென்றிருக்காது போனால் தமக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று அவர் தெரிவித்தார்.

எனவே பெண்கள் தரப்பை பாலியல் தொழிலில் வெறுப்பாக நோக்கும் இந்த சமூகம் அதனை மேற்கொள்ளத்தூண்டும் ஆண்கள் தரப்பை ஏன் தண்டிப்பதில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பொலிஸார், இந்த விடயத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

Related Posts