- Friday
- November 21st, 2025
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய கடற்கோளின்போது, இலங்கையின் கரையோர மாவட்டங்களில் 40,000 பேர் வரையில் பலியாகினார்கள். முல்லை மாவட்டத்தில் 3000க்கும் அதிகமானோர் உயிர் துறந்தார்கள். அவர்களுக்கான நினைவஞ்சலி, கடற்கோள் நினைவுதினமான நேற்று சனிக்கிழமை (26.12.2015) முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள கடற்கோள் நினைவாலயத்தில் நடைபெற்றது. இந்து, இஸ்லாம், கிறீஸ்தவம் ஆகிய மூன்று மதமுறைகளிலும் இடம்பெற்ற...
பிறக்க இருக்கும் 2016 ஆம் ஆண்டு சரித்திரம் வாய்ந்த ஒரு வருடமாக மாறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுடான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.ஜனாதிபதி அவர்களின் யோசனையின் கீழ் புதியதொரு அரசியல் சட்ட பொறிமுறையினை...
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டள்ளதாக கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியை நேற்று மாலை 37 வயதுடைய சிறுமியின் சகோதரியின் கணவர் பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளமை...
காணமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதமளவில் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை யாழில் இரண்டு விசாரணை அமர்வுகள் இடம்பெற்றுள்ளதுடன், அந்த அமர்வுகள் இடம்பெற்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பிரதேச...
இலங்கையில் வர்த்தக முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, இந்திய கிரிக்கட் வீரர் ஹர்பஜன் சிங் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில்நிலையான நீண்டகால நல்லுறவு காணப்படுகிறது. இந்த நிலையில், அவர் இலங்கையில் பல்வேறு முதலீட்டு...
முகநூலில் கணக்கை ஆரம்பிக்கும் இலங்கையர்களின் ஆகக்குறைந்த வயது எல்லையை 16 ஆக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. முகநூலில் கணக்கை ஆரம்பிப்பதற்கான வயது எல்லை பொதுவாக 13 ஆக உள்ளது. இந்நிலையில் 13 வயது பூர்த்தியானவர்கள் பல இலங்கையர்கள் முகநூலில் கணக்கை தொடங்குகின்றனர். இவர்கள்...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையை, திட்டமிட்ட படுகொலையாகவே தான் உறுதியாகக் கருதுவதாக மட்டக்களப்பு ஆயர் பொன்னையா ஜோசப் தெரிவித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் தின நள்ளிரவு ஆராதனையின் போது மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்திற்குள் வைத்து அடையாளந் தெரியாதோரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்ட...
சவுதியில் பணிபுரியும் இலங்கை தொழிலார்களின் சம்பளத்தை இலங்கை ஏ.டி.எம்கள் ஊடாக இலகுவாகவும், துரிதமாகவும் பெற்றுக் கொள்ளும் வசதியை செய்து கொடுப்பதில் ஒத்துழைப்புடன் செயல்படுமாறு இலங்கை மத்திய வங்கி விடுத்த வேண்டுகோளை சவுதி அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொழில்கள் அமைக்க மத்திய கிழக்கு நாடுகளில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும்...
யாழ்.குடாநாட்டுக்கு நேற்றய தினம் வழமையை விட அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். கடந்த சில தினங்களாகவே அதிகளவிலான சுற்றுலா பயணிகள் யாழ்.கோட்டை, ஆரியகுளம் நாக விகாரை, நல்லூர் கந்தசுவாமி ஆலயம், யாழ்.நகரப் பகுதிகளில் காணப்பட்டனர். இந்த நிலையில், கிறிஸ்மஸ் தினமான நேற்று வழமையை விட அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். பண்டிகை நாட்கள்...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்த இராணுவத்தின் 57ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டவரும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருப்பவருமான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு இராணுவ சேவையில் நீடிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என அறியமுடிகின்றது. இதனால், மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு இன்றுடன் ஓய்வு வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆவணங்களும்...
அந்தியயேட்டி வீட்டுக்குச் சமைக்கச்சென்றவர் மயக்கமுற்ற நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போதிலும் வழியில் மரணமடைந்தார். குளப்பிட்டி, கொக்குவில் மேற்கில் உள்ள வீட்டின் இடம்பெறும் அந்தியேட்டிக்கு சமைக்கவென வியாழக்கிழமை இரவு சென்று அங்கு சில பணிகளை மேற்கொண்டு விட்டு இரவு நித்திரைக்குச் சென்றுள்ளார். அதிகாலையில் சமையலைத் தொடங்கும் முகமாக ஏனையவர்கள்...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் நாடளாவிய ரீதியில் சிறைக்கைதிகள் இன்று விடுவிக்கப்பட்ட நிலையில் யாழ் மாவட்டத்திலும் சிறைக்கைதிகள் நேற்று (25) விடுவிக்கப்பட்டனர். சிறுகுற்றம் புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறையில் இருந்தவர்கள் என ஒரு பெண் உள்ளிட்ட எட்டுபேர் விடுதலைசெய்யப்பட்டனர். யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரி எஸ்.இந்திரகுமார் தலைமையில் இந்நிகழ்வு யாழ் மத்திய சிறைச்சாலையில்...
சுனாமி பேரலையால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி இன்று காலை 9.25 மணி முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்....
பாடசாலை மாணவிகளான சகோதரிகள் இருவரை காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். சுழிபுரம் பண்டைவெட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சிந்துஜா (வயது 17) மற்றும் இளைய சசோதரியான சந்திரகுமார் நிவேதினி (வயது 14) ஆகிய இரு சகோதரிகளும் காணாமல் போயுள்ளனர். சந்திரகுமார் சிந்துஜாவின் சீருடை பெறுவதற்காக வட்டு இந்து கல்லூரிக்கு...
தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2015 டிசம்பர் மாதம் கனடா உறங்கா விழிகள் அமைப்பு 245000 பெறுமதியான உதவிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக வழங்கியுள்ளது. மேற்படி உதவிகள் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி மற்றும் பாடசாலைக்கல்வி, மருத்துவ சிகிச்சை, வாழ்வாதாரம் போன்ற தேவைகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகளாகவும் கல்வி உபகரஙணங்கள் வழங்குதல் மற்றும் இலவசக் கல்வி...
வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கிளிநொச்சியில் நடைபெற உள்ளது. கரைச்சிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (26.12.2015) பி.பகல் 3 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கலந்துகொள்ள உள்ளார். விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற...
கொழும்பில் இன்று பிப 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இருவருக்கும முரண்பாடுகள் உச்ச கட்டம் அடைந்துள்ள நிலையில் பல மாதங்களின் பின்னர் அவர்கள் இருவருக்குமிடையிலான அவசர சந்திப்பு இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடர்பாக முதல்வர் தெரிவித்தாவது...
இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொலித்தீன் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக ஜனவரி மாதம் முதல் கடுமையான நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. 20 மைக்ரோனுக்கு குறைவான அடர்த்தியைக் கொண்ட பொலித்தீனை தயாரிப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது மற்றும் வைத்திருப்பது போன்றவை 2007ஆம் ஆண்டே தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில், அந்த சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தப் பின்னணியிலேயே பொலித்தீன்...
விக்னேஸ்வரன் எனும் சுனாமி பேரலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் சிக்கித் தவிக்கிறார் என்று மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும்கூட விக்னேஸ்வரனே பிரபலமானவராக காணப்படுகின்றார். உதாரணமாக விக்கினேஸ்வரன் எனும் சுனாமி பேரலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டம் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கே...
Loading posts...
All posts loaded
No more posts
