மன்னர் மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசெப் ஆண்டகையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனுக்கும் இடையிலான சந்திதிப்பு ஒன்று இடம்பெற்றது.
மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கழமை காலை 09.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம், அதன் செயற்பாடுகள் குறித்து சந்திப்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகளிடம் மன்னார் ஆயர் ஆர்வத்துடன் கேட்டறிந்த அதேவேளை, தமிழ் மக்கள் பேரவைக்கு தனது வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்குவதாகவும் குறிப்பிட்டார் என சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் கலாநிதி க.சர்வேஸ்வரன்,மன்னர் நகரசபை முன்னாள் பிரதித் தலைவர் ஜேம்ஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.