- Tuesday
- April 28th, 2026
'சுடர்ஒளி' பத்திரிகையின் முன்னாள் பிரதம, ஸ்தாபக ஆசிரியர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) (வயது 87) இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில் காலாமானார். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவராவார். தமிழ்ப் பத்திரிகை உலகில் சுமார் 60 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத்...
அண்மையில் யாழ் மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் தயாராகவுள்ள என இலங்கைக்கான நோர்வே நாட்டு தூதுவர் Thorbjørn Gaustadsæther தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) வதிவிடப்பிரதிநிதி ஜோர்ன் சொரேன்சென் (Joern Soerensen) க்கும் தூதுவருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த புரிந்துணர்வு...
மேலும் சில பட்டதாரிகளை அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் வைத்து, 2591 பேருக்கு இவ்வாறு பயிற்சியாளர்களுக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களே இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான 20பதுக்கு இருபது போட்டியில், தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, 2-0 என தொடரையும் பறிகொடுத்துள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி டெஸ்ட் தொடரை 2-0 என நலுவவிட்டது. இதனையடுத்து ஆரம்பமான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு...
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடல் மார்க்கமான வர முற்பட்ட ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் (55) எனும் இவர், கடந்த 2011ல் தமிழகம் சென்று, வெளிப்பதிவு அகதியாக விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தங்கியிருந்ததோடு, கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்தார் என தமிழன ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்தநிலையில்...
தற்போதைய அரசாங்கம் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கறுப்புக் கொடி ஏந்தி போராடவுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் 13ம் திகதி யாழ் பஸ் தரிப்பிடத்திற்கு எதிரில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமை,...
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், இது குறித்து வடக்கு முதல்வரிடம் வினவியபோது, ஆயரின் நலம் குறித்து விசாரிக்கவே அவரைச் சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அண்மையில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த...
அரசியல் கைதிகள் உருவாக கடந்த கால அரசியல் தலைமைகளே காரணம். அரசியல் தலைமைகள் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் அரசியல் கைதிகள் உருவாகி இருக்க மாட்டார்கள் என ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட சிவராஜா ஜெனிகன் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட சிவராஜா ஜெனிகன், கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி அரசியல் கைதிகளை...
வலிவடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலய எல்லைப் பகுதிகளில் வெடிப்பொருட்கள் இருப்பதற்கான அபாய எச்சரிக்கை காணப்படுவதால் மக்கள் குடியேறுவதில் அச்சம் வெளியிடுகின்றனர். அத்துடன் இராணுவத்தினர் அமைத்திருந்த பதுங்கு குழிகள் மற்றும் மண் மூட்டைகள் அடுக்கப்பட்ட பாதுகாப்பு அரண்கள் போன்றனவும் அகற்றப்படாமல் இருப்பதால் அவற்றிலும் வெடி பொருட்களின் அபாயம் இருக்கலாம் என கருதி...
விஸ்வமடு பகுதியில் இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் முல்லைத்தீவு பதில் நீதவான் பரஞ்சோதியின் அனுமதியோடு இராணுவ வீரரின் சடலம் என சந்தேகித்து அகழ்வு நடைபெற்று வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படியே அகழ்வு நடைபெறுவதாக கூறப்படுகிறது. நிட்டம்புவ அல்கம பகுதியைச் சேர்ந்த ஒருவர் இராணுவ சிவில் படைப்பிரிவில் விஸ்வமடுவில் கடமையாற்றி...
வடமாகாண கல்வி அமைச்சின் கீழுள்ள மும்மொழிக் கற்கை நிலையத்தினால் நடாத்தப்படும் இரண்டாம் மொழி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையத்தினால் நடத்தப்படும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் டிப்ளோமா மற்றும் அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் இரண்டாம் மொழி சித்தியடைய வேண்டிய அரச அலுவலர்கள், மூன்றாம் நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள், பாடசாலையில்...
இன்று காலை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஹிருனிகா பிரேமசந்திர ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக...
புதிய அரசியலமைப்பு முறை ஒன்றை உருவாக்குவதற்கான பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பமாகின. இதன்போது அரசியலமைப்பு சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்பித்தார். புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும் பாராளுமன்ற அரசியலமைப்பு சபைக்குறிய உறுப்பினர்கள்...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று சனிக்கிழமை சற்று முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு ஹெவ்லொக் நகரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவரை தனது டிபன்டர் ரக வாகனத்தில் கடத்தி, துன்புறுத்திய குற்றச்சாட்டுக்காகவே ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைதுசெய்யும்படி கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று...
கடந்த ஒரு வருட காலத்தினுள் நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பது குறித்து கேள்வியெழுப்ப வேண்டியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இக்கேள்வியை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நல்லாட்சி அரசாங்கம் கடந்த ஒருவருட காலத்தினுள் நாட்டுக்காகவும்,...
தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வைத் தரும் சபையாக பாராளுமன்றம் அமையவுள்ளதோடு தீர்வைத்தரும் ஆண்டாக இவ்வருடம் அமைய வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்றைய அரசியல் சூழலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் என்ற விடயங்கள் தொடர்பில் மக்களுடனான கலந்துரையாடலொன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
புகைப்படக் காட்சியில் வைக்கப்பட்டிருந்த தனது புகைப்படத்தினைப் பார்த்து பிரம்மித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 'ஜனாதிபதி அபிமங்கள வருட புகைப்படநினைவுகள்' கண்காட்சி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது. இக் கண்காட்சியை திறந்து வைத்து விட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளுடனான போரில் வென்றிருக்கலாம் ஆனால் போரின்போது மேற்கொண்ட குற்றங்களை மறைக்க முடியாது. இந்த வெற்றியின் மூலம் துப்பாக்கிகள் மௌனமாகிய அதேநேரம் சமாதானப் பேச்சுக்களும் மெளனமாகி விட்டன.இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி. மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓர் ஆண்டு பூர்த்தி விழா நேற்று கொழும்பில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நல்லாட்சி அரசு ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நல்லாட்சி அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) நேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது. 'மக்கள் ஆணைக்கு மதிப்பளி' என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்பாட்டம் நேற்றுக் கொழும்பில் நடத்தப்பட்டது. இதில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் பதிவு செய்யப்பட்ட பாலியல் துஷ்பிரயோக சம்பங்களில் சுமார் 93 சதவீதமானவைக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. ருவான் குணசேகர தெரிவித்தார். கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களுக்குள் மட்டும் 1,850 பாலியல் குற்றங்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவற்றுள் 93 சதவீதமானவை அதாவது...
Loading posts...
All posts loaded
No more posts
