Ad Widget

புது வருடம் பிறந்து நான்கு நாட்கிளிலேயே யாழில் 30 டெங்கு நோயாளர்கள்

யாழ். போதனா வைத்தியசாலையில் 2016 ஆம் ஆண்டு பிறந்த நான்கு நாட்களில் 30 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015 ஆம் ஆண்டு 1309 பேர் இந்த நோயின் தாக்குத்துக்கு உள்ளாகியிருந்து அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர்.

2014 ஆம் ஆண்டு 1339 பேர் நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்து அதில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதேவேளை 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகமான நோயாளர்கள் (357 நோயாளர்கள்) இனங்காணப்பட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகளவான நோயாளர்கள் (348 நோயாளர்கள்) இனங்காணப்பட்டுள்ளனர் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related Posts