முல்லைத்தீவு பழம்பாசியில் பழப்பொதியிடல் நிலையம்

பழ ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் முல்லைத்தீவு பழம்பாசிக் கிராமத்தில் பழங்களைப் பொதிசெய்யும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11.01.2016) சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். விவசாய அமைச்சு முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பழச்செய்கையை ஏற்றுமதி நோக்கில் ஊக்குவித்து வருகிறது. இளைஞர்களை ஒருங்கிணைத்து இளைஞர் விவசாயக் கழகம் உருவாக்கப்பட்டு, அதனூடாகப்...

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு!

இன்று (13) நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலையை ஒரு ரூபாவினால் அதிகரிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (12) இடம்பெற்ற சங்கத்தின் கலந்துரையாடலை அடுத்தே இம் முடிவு எடுக்கப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். அதன்படி, தற்போது ரூபா 54 ஆக...
Ad Widget

பணம் கேட்டால் எம்மிடம் சொல்லுங்கள்: ஆசிரியர் சங்கம்

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது பணம் அல்லது நன்கொடை தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களென யாராவது கேட்டால் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பணம் அல்லது நன்கொடை ஆகியவற்றின் ஊடாக பெற்றோரிடம் இலஞ்சம் வாங்கும் சகலருக்கும் எதிராக தமது சங்கம், நீதிமன்ற...

ஜெயசங்கர் – சம்பந்தன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வௌியுறவுச் செயலாளர் எஸ்.ஜெயசங்கர் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இன்று காலை கொழும்பில் சுமார் ஒரு மணித்தியாலங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்போது புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு குறித்து பிரதானமாக கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதற்கு மேலதிகமாக...

கடல் நீரில் இருந்து நன்னீர்! யாழ் மாவட்டத்தில் முதல் முதலாக நெடுந்தீவில்

யாழ்ப்பாணம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினர் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வறுமைக் குறைப்பிற்கான ஐப்பானிய நிதியம் என்பனவற்றின் நிதியுதவியுடன் நெடுந்தீவு மக்களின் குடிநீர் தேவையினை நிறைவு செய்யும் முகமாக கடல் (உவர்) நீரை நன்னீராக்கும் திட்டத்தின் பின்னோக்கிய பிரசாரணம் (Reverse Osmosis) முறையிலான இரண்டு பொறிகளை அமைத்து வெற்றி பெற்றுள்ளனர். நெடுந்தீவு பிரதேசம்...

காணாமற்போனது 1997, விசாரணை நடத்தியது 2015இல்

எனது மகன் 1997ஆம் ஆண்டு காணாமற்போனமை தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் கடந்த 2015ஆம் ஆண்டே விசாரணைகளை மேற்கொண்டனர். காணாமற்போனமை உண்மையா என அயலவர்களையும் விசாரித்துச் சென்றனர் என்று காணாமற்போன கணேஷ் கருணாரட்ணம் என்பவரின் தாய் ரேவதி தெரிவித்தார். யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று புதன்கிழமை நடைபெற்ற கறுப்புக்கொடி போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு...

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக யாழில் கறுப்பு கொடிப் போராட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண சபை உறுப்பினர் எம். ஏ. சிவாஜிலிங்கம் தலைமையில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று புதன்கிழமை முற்பகல் யாழ்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனப்படுகொலை போர் குற்றங்கள் ஆகியவற்றிற்கு எமக்கு நீதி...

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று புதன்கிழமை காலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை நோக்கி பேரணியாக செல்கின்றனர். மாலபேயிலுள்ள தனியார் மருத்துவ கல்லாரியை மூடுமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ”அரசியலில் கல்வி வேண்டும், கல்வியிலேயே...

பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அருகிலுள்ள படைமுகாம்களை அகற்றும் இராணுவம்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையானது அப்பகுதியை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றதா? அல்லது ஜனாதிபதி பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறும் பகுதியை படைமுகாம்கள் அற்ற பகுதியாகக் காட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சியா என பொதுமக்கள்...

யுத்தத்தில் பாலியல் வன்முறைகளை தடுக்கும் பிரகடனத்தில் இலங்கை கையொப்பம்!

யுத்தத்தின் போது பாலியல் வன்முறைகளை தடுக்கும் சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது. யுத்தத்தின் போது பாலியல் வன்கொடுமைகள் துன்புறுத்தல்களை இல்லாதொழிக்க அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக இலங்கை அறிவித்துள்ளது. 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் திகதி நியூயோர்க்கில் இந்த பிரகடனம் அறிமுகம் செயப்பட்டது, இதில் 122 உறுப்பு நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்த பிரகடனத்தில் நேற்று வரை...

சிசுவை நிலத்தில் அடித்து கொலைசெய்த தந்தை!

ஆறு மாதமேயான சிசுவை, அச்சிசுவின் தந்தை, நிலத்தில் தலைகீழாக அடித்து கொலைச் செய்த சம்பவமொன்று திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயின்ஸ்பரி கீழ்ப்பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. தாய்க்கும் -தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பச்சண்டையை அடுத்தே, பால்குடித்து கொண்டிருந்த பெண் சிசுவை, பறித்து நிலத்தில் அடித்துள்ளார் என்று அறியமுடிகின்றது.

கண்ணிவெடிகளிலிருந்து இலங்கை 2020இல் விடுபடும்

மிதிவெடிகளுடன் காணப்படும் மீதமுள்ள காணிகளின் 64 சதுர கிலோமீற்றர் அளவான நிலப்பரப்பு, முல்லைத்தீவு மாவட்டத்திலேயே உள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். குறித்த பிரதேசங்களிலுள்ள கண்ணிவெடிகளை இரண்டு வருட காலப்பகுதிக்குள் அகற்றுவது தொடர்பாக, ஹலோ ட்றஸ்ட் அரச சார்பற்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள திட்டம் தொடர்பில் விசாரணை செய்யும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இரண்டு...

கோட்டாபய முகாமை அகற்றக்கோரி பிரேரணை

முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமஅலுவலர் பிரிவின் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமை அகற்றி, அந்தக் காணிகளை மக்களுக்கு வழங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரேரணையொன்று, வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது....

பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

பட்டதாரி பயிலுனர்கள் 2592 நியமனம் வழங்கும் நிகழ்வு பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நேற்று காலை 9.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெற்றது. நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கே இந்நியமனம் வழங்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர், நியமனங்கள் பெற்ற உத்தியோகத்தர்கள்...

நாடு முழுவதிலும் விளையாட்டு, உடல்நல அபிவிருத்தி திட்டங்கள்

அனைவர் மத்தியிலும் விளையாட்டினை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அரசாங்கம் நாடு முழுவதிலும் விளையாட்டு மற்றும் உடல் நல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு...

தனியார் துறை சம்பளத்தை 3500 ரூபாவால் அதிகரிக்க பிரேரணை

தனியார் துறை ஊழியர்களுக்கு 3500 ரூபா சம்பள உயர்வை வழங்கும் வகையில் சம்பள நிர்ணய சபைகள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணையை தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று(12) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. இதன்போது மேற்படி பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்...

பீட்சா பெட்டி ஆபத்து!! : பெண்களை ஆண்களாக மாற்றிவிடுமாம்!!

போன் செய்த 15 நிமிடங்களில் வீடு தேடிவரும் பீட்ஸாவின் பின்னணியில் பாலின மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மூலக்கூறுகள் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பீட்ஸாவில் உள்ள வெண்ணை போன்ற வழவழப்பான பொருட்கள் அவற்றை பேக்கிங் செய்து எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் கார்ட்போர்ட் பெட்டிகளின் வெளிப்பக்கத்தில் கசியாமல் இருக்க ஒருவகையான இரசாயனப்பூச்சு அட்டைப் பெட்டிகளில் பூசப்படுகிறது. அவ்வகையிலான அட்டைப்...

புதிய அரசியலமைப்புக்கு மஹிந்தவின் ஆதரவு அவசியம் – சம்பந்தன்

இலங்கையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு முக்கியமானது என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு ஏற்படுத்துவது தொடர்பில், அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட யோசனை பற்றிய விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஒரு தேசிய தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில்அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்புக்கு...

விறகு வெட்டச் சென்ற விதவைப் பெண்கள் மீது தாக்குதல்

கனகராயன்குளம் பகுதியில் விறகு வெட்டச் சென்ற விதவைப் பெண்கள் மீது வனஇலாக அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அவர்களின் கோடரிகளையும் பறித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனகராயன்குளம், மன்னகுளம் காட்டுப்பகுதிக்கு கடந்த சனிக்கிழமை மாலை 3 மணியளவில் போரின் போது தமது கணவன்மாரை பறிகொடுத்த நான்கு விதவைப் பெண்கள் தமது...

2 பாடசாலைகளுக்கு பூட்டு

நல்லூர் கல்வி கோட்டத்துக்குட்பட்ட இரண்டு பாடசாலைகள் மூடப்பட்டமைக்கு வடமாகாண சபையில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது, நல்லூர் ஆனந்தா வித்தியாசாலை மற்றும் நல்லூர் ஞானோதயா வித்தியாலயம் ஆகியவை மூடப்பட்டமை தொடர்பில் விவாதம் இடம்பெற்றது. இதன்போது, கருத்துத் தெரிவித்த ஆளுங்கட்சி உறுப்பினர் க.சர்வேஸ்வரன்,...
Loading posts...

All posts loaded

No more posts