மஹிந்த கூட்டணியை உடைக்க மைத்திரி புதிய ‘ஒப்பரேஷன்’!

பொது எதிரணி என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் மஹிந்த ஆதரவு அணியை பலவீனப்படுத்துவதற்கான நடவடிக் கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் சூட்சுமமாக முன்னெடுத்து வருகிறார் என அறியமுடிகின்றது. இதன்படி, மஹிந்த அணியிலுள்ள முக்கியஸ்தர்கள் சிலரை அரசு பக்கம் வளைத்துப் போடுவதற்கான பேச்சுகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன. இந்தவகையில் முதற்கட்ட நகர்வாக ஆறு பேருக்கு குறிவைக்கப்பட்டுள்ளது....

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்கு தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்கிறார் மாவை

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் கலந்து கொண்டமை குறித்து தமக்கு அறிவிக்கவில்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்டக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.பொது நூலகக் கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது....
Ad Widget

பெண்களின் மார்புக் கச்சைகளை அகற்றும் இசைக் கச்சேரிகளுக்கு இனிமேல் இடமில்லை

இந்த நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் என்பவற்றை சீர்குழைக்கும் விதமாக சர்வதேச பாடகர்களைக் கொண்டு நடத்தப்படும் நாகரீகமற்ற இசைக் கச்சேரிகளுக்கு அனுமதி வழங்காதிருக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். எதிர்காலத்தில் அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதி வழங்காதிருக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார். சில மணி நேரங்களுக்கு மட்டும் இடம்பெறும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எமது இளம் யுவதிகள்...

இடியே விழுந்தாலும் தமிழ் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் – டி.ராஜேந்தர்

சிம்பு பாடிய பீப் சாங் இணையதளம் மூலம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி, சிம்பு மீது தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் "தமிழ்நாட்டை விட்டு...

கழிவு எண்ணெய் கலந்த நீரை குடிக்கலாமா கூடாதா? மக்கள் கேள்வி

நிலத்தடி நீரில் மாசு தொடர்பில், இன்று காலை சுன்னாகம் சந்திக்கருகில் கவனயீப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை சமூக நீதிக்கான பொதுசன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள மின் நிலையத்திலிருந்து பாதுகாப்பற்ற முறையில், வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் நிலத்தடி நீரில் கலந்துள்ளமையால், சுன்னாகம் அதனை அண்டிய சுற்று வட்டார பிரதேசங்களில் நிலத்தடி நீரில்...

தமிழ் மக்கள் பேரவையில் முஸ்லீம் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படுவார்கள்! கலாநிதி லக்ஸ்மன்!

 தமிழ் மக்கள் பேரவையில் முஸ்லீம் பிரதிநிதிகளும் உள்வாங்க படுவார்கள் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான  வைத்தியர் பி. லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட கூட்டம் ஞாயிறு காலை யாழ்.பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. அக் கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். அது...

அனைத்து பிரதேசங்களிலும் மழைக்கான சாத்தியம்?

வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப மாற்றநிலை காரணமாக இன்று (27) நாட்டின் அனைத்து பாகங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் வடக்கு கிழக்கு வடமத்திய தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான...

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் இறுதிநாள் நாளை!

நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் கல்லூரிகளில் இவ்வருட ஆசிரிய பயிற்சி நெறிக்கு விண்ணப்பிப்பதற்கான் இறுதி நாள் நாளை (28) என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவுறுத்தல் ஏற்கனவே கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. கணிதம், விஞ்ஙானம், ஆரம்பக்கல்வி , சமூகவியல், விவசாயம், மனையியல், சங்கீதம், சித்திரம், அரபு, இஸ்லாம், இந்துசமயம், கிறிஸ்தவம், நடனம், விசேட கல்வி, தமிழ்,...

எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படலாம்

எரிபொருள் சம்பந்தமாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விலைப் பொறிமுறையை எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் அமைச்சரவையில் முன்வைக்க இருப்பதாக பெட்ரோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவிக்கின்றார். புதிய விலைப் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் உள்நாட்டில் நிலையான விலையொன்றை பேணுவதற்கு முடிவதாக அமைச்சர் கூறினார். இமதுவை பிரதேசத்தில் இடம்பெற்ற...

விக்னேஸ்வரன் மக்கள் மத்தியில் குழப்பமான சிந்தனையை தோற்றுவித்தார் – சுமந்திரன்

மக்களால் நிராகரிக்கப்பட்ட தீர்வு திட்டங்களை, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், தேர்தலில் மக்கள் ஆதரவை பெற முடியாதவர்கள் பின்கதவு வழியாக இப்படியான ஒரு பேரவை மூலமாக கொண்டுவர முனைவது ஜனநாயக விரோத செயலாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாங்கள் தொடர்ச்சியாக...

பேரிடர் நினைவுநாளை இராணுவத்துக்குரிய தினம்போலக் கொண்டாடுவது தவறானது

பேரிடர் நினைவுநாள் படைத்தரப்புக்குரிய தினம் அல்ல. இதனை இராணுவத்துக்குரிய தினம்போலக் கொண்டாடுவது தவறானது என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கரைச்சிப் பிரதேசசபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (26.12.2015) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத்தினம் பிரகடனப்பட்டிருப்பதன் நோக்கம்,...

தமிழ் மக்கள் பேரவையின் 2ம் அமர்வு முடிவடைந்தது! 2016 மார்ச் இறுதியில் பேரவையின் தீர்வு முன்மொழிவு வெளியிடப்படும்

தமிழ் மக்கள்  பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரானது இன்று(27)  யாழ்.பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற சர்ச்சைக்கு மத்தியில் இன்று கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் புதிய அரசினால் உத்தேசிக்கப்பட்டுள்ள ஐனாதிபதி முறைமை ஒழிப்பு ,  மற்றும் புதிய தேர்தல் சட்ட முறை சம்பந்தமான விடயங்கள்  தேசிய இனப்பிரச்சனைக்கான  தீர்வு...

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் புலனாய்வுப் பிரிவு

அரச புலனாய்வுப் பிரிவு எதிர்காலம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்து விபரமான அறிக்கை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது. ஒரு அரசியல் அணியின் தலைமைத்துவம் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைப்பதற்காக பாரிய திட்டங்களை ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள்...

சீனி , தேங்காய் எண்ணெயின் பாவனையை குறைக்கவும்

பண்டிகைக் காலங்களில் சீனி மற்றும் தேங்காய் எண்ணெயின் பாவனையை குறைக்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக இந்நாட்டில் நீரிழிவு உட்பட பல நோய்கள் உருவாகுவதற்கு பிரதான காரணியாக சீனி மற்றும் எண்ணெய் காணப்படுகின்றது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் பாலித மஹீபால,சீனி பாவனைக்கு ஏற்ப குறித்த...

யாரினதும் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களுக்கு செவிசாய்ப்போம்

தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்ல அவர்களின் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களையும், செயற்பாடுகளையும் செவிசாய்க்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வலி.கிழக்கு பிரதேச சபையில் இடம்பெற்ற அபிவிருத்தி ஆலோசனைக் குழுக்கூட்டத்தின் நிறைவில் ஊடவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

யுவதியைக் காணவில்லை என முறைப்பாடு

மல்லாகம் பகுதியினை சேர்ந்த 21 வயதுடைய யுவதியை வியாழக்கிழமை மாலையில் இருந்து காணவில்லை என அவரது தந்தையால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து தனது வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தவர் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் காணாமல் போயுள்ளார். உறவினர்கள் எங்கும் தேடி யுவதியை காணாத நிலையில் அன்றைய தினம் இரவு பொலிஸில் முறைப்பாடு...

தரம் 1 மாணவர்களின் எண்ணிக்கையை 35 ஆக மட்டுப்படுத்துவது அநீதி!

அரச பாடசாலைகளில் தரம் 1 மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பொன்றுக்கு 35ஆக மட்டுப்படுத்தியிருப்பது நியாயமற்றது எனவும், அதன் மூலம் ஏராளமான மாணவர்கள் அனுமதியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த காலங்களில் ஏராளமான ஆரம்பப் பாடசாலைகள் மூடப்பட்டதால் எஞ்சியுள்ள அரச பாடசாலைகளில் அனுமதி கோரும் மாணவர்கள் இந்த 35 மாணவர்கள் கட்டுப்பாட்டால் தமது...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

வேகமாகச் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கிணற்றுக்கட்டுடன் மோதுண்டதில் இளைஞர் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோவிலுக்கு முன்பாகவுள்ள கிணற்றடியில் இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பிரதான வீதியைச் சோந்த வின்சன் வின்ஐக்சன்...

உள்ளூராட்சி ச​பைகளின் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு

இதுவரை கலைக்கப்படாத உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக் காலம் மேலும் 6 மாத காலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைய இருந்த நகர சபை மற்றும் மாநகர சபைகளின் ஆட்சிக் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையில் விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் – சம்பந்தன்

தமிழ்த் தேசிய மக்கள் பேரவையில் இருக்கும் முக்கியத் தலைவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் அனைவரும் மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன். சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் பேரவை என்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதொரு அரசியல் அமைப்பு...
Loading posts...

All posts loaded

No more posts