Ad Widget

பரராஜசிங்கம் படுகொலை: பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்ட இராணுவ சார்ஜன்ட் கைது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவ சார்ஜன்ட்டே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த இராணுவ சார்ஜன்ட் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டார் எனவும், பின்னர் இராணுவத்தில் இணைந்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த இந்த இராணுவ சார்ஜன்ட் கிரித்தலே முகாமில் கடமையாற்றியுள்ளார். இதேவேளை, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் அவரின் சகாவான பிரதீப் மாஸ்டர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டதோடு தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts