பாண் விலையில் மீண்டும் மாற்றம்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணுக்கான விலையை குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி 450 கிராம் பாணின் விலை நேற்று நள்ளிரவு முதல் 1ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. முன்னதாக கடந்த 13ம் திகதி முதல் பாண் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 55 ரூபாவாக உயர்வடைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று முதல்...

தைப்பொங்கல் என்பது தேசிய நிகழ்வு; அது யாழ்ப்பாண நிகழ்வல்ல- ரணில்

தைப்பொங்கல் என்பது தேசிய நிகழ்வு. அது யாழ்ப்பாண நிகழ்வோ இந்து நிகழ்வோ அல்ல என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார். உலக சுற்றுச்சூழலில் மாற்றங்கள் நிகழ்வது போன்று உலக...
Ad Widget

யாழில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழா!

இம்முறை தேசிய பொங்கல் தின நிகழ்வுகள் நேற்று (15) யாழ்ப்பாணத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றன. நேற்று காலை யாழ் பலாலியில் அமைந்துள்ள சிறி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க...

யாழில் மாணவர்களிற்கான பொங்கல் நிகழ்வு

பாடசாலை மாணவரிடையே தேசிய இன ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க பணியகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களிற்கான பொங்கல் நிகழ்வொன்று யாழ் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நேற்று (15) இடம்பெற்றது. வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்ப்பட்ட இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் இலங்கை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க பணியகத்தின் தலைவியுமான சந்திரிக்கா...

நான் தீவிரவாதியல்ல; சிங்கள மக்களுடன் எதிர்ப்போ கோபமோ இல்லை- முதலமைச்சர் சீ.வி

தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில், சர்வமதங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கதே. 1960 களில் சர்வமத சம்மேளனத்தின் உப செயலாளராக நான் இருந்தேன். பிரதமர் டட்லி சேனாநாயக பிரதமராக இருந்த காலத்தில் எங்கள் சம்மேளனம் இதையே செய்தது....

தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்துகொள்ளவில்லை

பலாலி உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே ஜனாதிபதி இதில் கலந்துகொள்ளவில்லையெனவும் அதனையிட்டு அவர் கவலை தெரிவித்ததாகவும் தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேசிய பொங்கல் விழாவையொட்டி, பாதுகாப்புக்கள் பலப்படுத்தபட்டு யாழ்ப்பாணத்தின் வீதிகளில்...

எமது மக்கள் தமது சொந்த இடங்களில் தைப்பொங்கல் கொண்டாடக் கூடிய நிலைமை ஏற்படவேண்டும்!

தமது செர்நத இடங்களிலும் தமது உறவுகளோடும் தைப்பொங்கலை கொண்டாடக் கூடிய நிலைமை மாறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது வாழ்த்துச் செய்தியின் முழு விவரம் வருமாறு:- இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது மனங்கனித்த தைத்...

மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்!

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக ஓய்வு பெற்ற ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பதவி துறப்பை திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சூசை தெரிவித்தார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகர் நியமனம் தொடர்பாக...

தைப்பொங்கலை முன்னிட்டு அத்துமீறிய இந்திய மீனவர்களுக்கு விடுதலை

தைத்திருநாளை முன்னிட்டு இந்திய மீனவர்கள் 55 பேர்கள் யாழ் ஊர்காவற்துறை, பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவின் பேரில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் நீரியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ப. ரமேஸ்கண்ணா இன்று தெரிவித்தார். இவர்கள் கடந்த மாதங்கள் அத்துமீறி வல்லைக்கடற்பகுதி,மற்றும் காரைநகர் கடற்பகுதி,நெடுந்தீவு கடற்பகுதி மற்றும் மாதகல் ஆகிய கடற்பகுதிகளின் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். கடற்றொழில் நீரியல் வளத்துறை...

உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி; ஆனால் மக்களுக்கு நிவாரணம் இல்லை

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்தும் அதனை இந்த நாட்டு மக்களுக்கு அனுபவிக்க முடியவில்லை என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 30 அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளதுடன், அது கடந்த 11 ஆண்டுகளுக்கு பின்னர் காணப்பட்ட குறைந்த...

வடக்கு புகையிரத சேவைகளில் மாற்றம்

வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரதங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி புதிய நேர அட்டவணைகள் வருமாறு, கொழும்பு யாழ்பாணம் இடையில் சேவையில் உள்ள யாழ்தேவி கல்கிஸ்ஸையில் இருந்து காலை 05.50 மணிக்கு ஆரம்பமாகி கொழும்பு கோட்டையில் இருந்து காலை 06.35 இற்கு யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் இந்த...

யாழ் பிரதேச செயலகத்தில் பதிவுச் சான்றிதழ்கள் எடுப்பதற்கான விரைவுச் சேவை இல்லை!

யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலகத்திலும் இணைய ரீதியில் விரைவாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணப் பிரதேச செயலகம் மாத்திரம் அதனை தபால் மூலம் அனுப்பும் பழைய நடவடிக்கையை தொடர்ந்தும் பேணி வருகின்றது. சான்றிதழ்கள் தேவைப்படுபவர்கள், பிரதேச செயலகம் சென்று தங்கள் விண்ணப்பத்தைக் கொடுத்து உடனடியாக சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் முறையானது பிரதேச...

விளையாட்டுக்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு தவணைப் பரீட்சைகளில் அதிக புள்ளிகள்!

பாடசாலைகளில் கல்வி பயிலும் ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது ஒரு விளையாட்டு நிகழ்ச்சியிலாவது பங்குபற்ற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், விளையாட்டு மற்றும் உடல் நல அபிவிருத்தி செயற்பாடுகள் அனைத்து பாடசாலைகளிலும் கட்டாய பாடமாக உள்ளடக்கப்படுவதோடு ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது ஒரு விளையாட்டிலேனும் பங்குபற்றி...

நாமல் ராஜபக்ஸ விரைவில் கைது?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விரைவில் கைது செய்யப்படவிருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி மோசடி விசாரணைப் பிரிவு அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட கூடும் என தெரியவருகிறது. நாமல் ராஜபக்ஸவை கைது செய்வதற்கு தேவையான சாட்சியங்கள் தேவைக்கு மேலதிகமாக தயாராக இருப்பதாகவும் இதனை அரசியல் பிரச்சினையாக காட்டி அரசியல்...

போர்க்குற்ற விபரங்களை அறிந்த ஜெனரலுக்கு இராஜதந்திரப் பதவி! – இராணுவத் தரப்புக்குள் பதற்றம்

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்துள்ள மேஜர் ஜெனரல் ஒருவருக்கு வெளிநாடொன்றில் இராஜதந்திரப் பதவி வழங்கப்பட்டுள்ளது இராணுவத்தினர் மத்தியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதிக்கட்டப் போரின் போது அடிப்படை மனித உரிமைகள் மற்றும் போர் விதிகள் கடுமையாக மீறப்பட்ட நிலையிலேயே புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினர் வெற்றிகளைப் பெற்றிருந்தனர். இதன் காரணமாக...

மயில் மாளிகை தடாகத்தில் மஹிந்தவின் தங்கம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கவிருந்த மயில் மாளிகையின் நீச்சல் தடாகம் மண் இட்டு மூடப்பட்ட போது, அதற்குள் தங்கங்களும் பணமும் சேர்த்துப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் விடயம் குறித்து விசாரணைகளை நடத்துமாறு, அம்மாளிகையின் உரிமையாளரான ஏ.எஸ்.பி.லியனகே, பொலிஸ்மா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி, தனது நற்பெயரைக் காக்குமாறு மயில்...

கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களின் வீடுகளுக்கு தொலைபேசி அழைப்பு! – நீதிமன்றில் ஏற்றுக்கொண்டது கடற்படை

திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பு அதிகாரியாக சேவைபுரிந்த கடற்படை சிப்பாயின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களின் வீட்டுத் தொலைபேசிகளுக்கு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை நீதிமன்றத்தில் வைத்து கடற்படை ஏற்றுக்கொண்டுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளில் கடத்திச்செல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விடயத்தை நீதிமன்றத்தில் வைத்து கடற்படை...

ஜனாதிபதியின் சிரேஷ்ட தலைமைத்துவ பண்புகளுக்கு இந்திய அரசு பாராட்டு!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டும் சிரேஷ்ட தலைமைப் பண்புகளை எடுத்துக்காட்டும் மனப்பாங்கு தொடர்பாக இலங்கை மாத்திரமன்றி இந்திய அரசும் இந்திய மக்களும் தெளிவாக புரிந்து கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜயசங்கர் குறிப்பிட்டார். இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த...

யாழ் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுப் பட்டமளிப்பு விழாவில்...

VAT மற்றும் NBT தற்காலிகமாக அமுல்படுத்தப்பட மாட்டாது

பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியன பாராளுமன்றில் அனுமதி பெறும் வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ​2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் குறித்த வரிகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள் தற்காலிகமாக அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts